-
-
சத்தியத்தின் ஆட்சி
RM17.50தனிமனித அனுபவம் மூலம் நிறைவாழ்வு வாழ வழி தேடும் வழிதான் தாவோவின் பாதை.
சேவையுணர்வு என்பது ஏதோ செய்யவேண்டும் என்னும் எண்ணத்தில் எழுவதல்ல. கடமை என நினைத்து ஆற்றப்படும் செயலுமல்ல. படித்தல், எழுதுதல் போல ஒருவருடைய குணமாகவே அது அமையவேண்டும். அப்போதுதான் சேவையாற்றுவதால் உருவாகும் நிறைவையும் இன்பத்தையும் ஒருவரால் உணரமுடியும். ஒரே நேரத்தில் வழங்குபவருக்கும் பெறுகிறவருக்கும் நிறைவை அளிக்கும் மகத்தான செயல் சேவை மட்டுமே என்பது காந்தியடிகளின் கூற்று. காந்தியடிகளைப் பின்பற்றிய அவருடைய தொண்டர்கள் அனைவரும், காந்தியடிகளின் கூற்றுக்குச் சாட்சியாக வாழ்ந்தவர்கள், மிகநீண்ட பட்டியலைக் கொண்ட அந்த ஆளுமைகளின் வரிசையில் ஒரு சிலருடைய வாழ்க்கைச் சித்திரங்கள்Only 2 left in stock
-
பாய்மரக் கப்பல்
RM20.00பாவண்ணன் பாவண்ணனின் பாய்மரக் கப்பல் வாழ்க்கை என்னும் மாபெருங்கடலில் பயணத்தைத் தொடங்கிய ஒரு விவசாயியின் வம்ச வரலாறு. இதில் வரும் காசாம்பு, முத்துசாமி, முனுசாமி, ரங்கசாமி, ஆறுமுகம், துரைசாமி ஆகியோரை இந்தத் தேசத்தில் எங்கெங்கும் காணலாம். அனைவரும் உயிர்ச்சித்திரங்கள். இவர்கள் வழியாகத்தான் வரலாறு மெல்லமெல்ல நகர்ந்து வந்திருக்கிறது. மனிதர்களின் வாழ்க்கையைக் கலைப் பண்புடன் சித்தரிப்பதில் கைதேர்ந்த பாவண்ணன் இந்த நாவலில் விரிந்த பின்னணியில் காலத்தின் நகர்தலைக் கதையாக்கியுள்ளார்,Only 2 left in stock
-
-
-
-
மண்ணில பொழிந்த மாமழை
RM20.00அற உணர்வும் வாய்மையும் வழிகாட்ட அணுவளவு அச்சமின்றி வாழ்ந்து மறைந்தவர்கள் நம் காந்திய ஆளுமைகள். இவர்கள் ஆற்றிய செயல்கள் மண்ணில் ஆழ ஊன்றபட்ட விதைகள். காந்திய ஆளுமைகள் வெறும் உரையாடிகள் இல்லை; மன்றாடிகளும் இல்லை; செயற்கடலில் பயணிப்பவர்கள். இந்த உண்மையை உலகத்துக்கு உணர்த்துகின்றன காந்திய ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரங்கள். அவை வரலாற்றுக் குறிப்புகள் அல்ல; ஒரு நம்பிக்கையின் ஆற்றல்.
In stock
-
வாழ்க்கை ஒரு விசாரணை
RM16.00பாவண்ணன் எழுத்தாற்றல் பெற்ற படைப்பாளி. நல்ல சிறுகதைகள் பல எழுதியிருப்பவர். மனிதர்களை அவர்களது இயல்புகளை, பேச்சு வழக்குகளை- பொதுவாக வாழ்க்கையை- நன்கு கவனித்து மனித நேயத்துடன் எழுதுகிறவர். அவருடைய திறமைக்கு நல்ல சான்றாக அமைந்துள்ளது இந்த நாவல். மக்களின் பேச்சிமுறைகள் இதில் ஆற்றலோடு கையாளப்பட்டிருக்கின்றன.
பாவண்ணனின் முதலாவது நாவல் இந்த ‘ வாழ்க்கை: ஒரு விசாரணை ’ வெற்றிகரமான இந்தப் படைப்பு ரசிகர்களின் வரவேற்ப்பையும் பாராட்டுதலையும் நிச்சயம் பெறும் என நம்பிகிறேன்.
– வல்லிக்கண்ணன்
Out of stock
-
பாவண்ணன் சிறுகதைகள் (முதல் தொகுதி)
RM75.00பாவண்ணனின் சிறுகதைகள் கருணையின் இழைகளாலும் அன்பின் இழைகளாலும் நெய்யப்பட்டவை. கரிய இருள் சூழ்ந்த பாதையின் ஓரமாக காற்றில் நடுங்கியபடி ஒளியுமிழும் சுடரென அக்கதைகள் அமைந்திருக்கின்றன. எளிய மனிதர்களின் அவலம், இயலாமை, ஏமாற்றம், சமரசங்கள், பரவசங்கள், குமுறல்கள் ஆகியவற்றின் சித்திரங்களால் பாவண்ணன் கதையுலகம் நிறைந்திருக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே உரியதாக உள்ள உலகத்தின் முன் எப்படியாவது உயிர்த்திருந்தால் போதும் என்ற எண்ணத்துடன் வாழும் கோடிக்கணக்கானவரின் கண்ணீர்த்துளிகளை பாவண்ணனின் சிறுகதைகள் காட்சிப்படுத்துகின்றன. துயரத்தின் சுமைகள் தாளாது சரிந்து விழுவதையும் ஒரு நீண்ட பெருமூச்சின் வழியாக வலிமையைத் திரட்டிக்கொண்டு மீண்டு வருவதுமான வாழ்வின் ஆடலையும் விசித்திரத்தையும் பாவண்ணன் முன்வைத்திருக்கும் வாழ்க்கைத் தருணங்களில் காணமுடிகிறது. சின்னஞ்சிறிய சிமிழொன்றில் அடைத்து எடுத்துவரும் நீரின் வழியாக ஓர் ஆற்றையே காணமுடிந்த கண்கள், பாவண்ணனின் வாழ்க்கைத் தருணங்கள் வழியாக விரிந்துசெல்லும் எளியோரின் துயரத்தையும் வேதனை நிறைந்த உலகத்தையும் எளிதாகக் கண்டுவிடும்.
Only 1 left in stock













