-
நன்மாறன் கோட்டைக் கதை
பேசுவதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும் கூசும் அவலங்கள்
பலவும் மிகச் சாதாμணமாகச் சமூகத்தில் கொஞ்சம்கூட
முகச்சுளிப்பும் அருவருப்பும் இல்லாமல் நடப்பதை
இந்தக் கதைகளில் தனக்கே உரிய பாணியில் இமையம்
சொல்லியிருக்கிறார். பயம், வெறுப்பு, ஏமாற்றம், பழிவாங்கல்
என்று உணர்வுக் கொந்தளிப்பால் வெளிப்படும் மனித
முகங்கள் நிதர்சனமானவை. அவை என்றுமே
ஒடுக்கப்பட்டோருக்கும் பெண்களுக்கும் எதிரானவை
என்பதை இக்கதைகள்மூலம் இமையம் வலுவாக
எடுத்துச்சொல்கிறார். -
மண்பாரம்
இமையத்தின் கதைகளின் பாத்திரங்கள்… ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய வாழ்க்கை அவர்களுடைய கையில் இல்லை. அது மேல்ஜாதியினரின், மேல்வர்க்கத்தினரின் அதிகாரக் கரங்களில் அடகுவைக்கப்பட்ட வாழ்க்கை; அன்றாட ஜீவனத்துக்கு அல்லல்படும் வறுமை வாழ்க்கை; மனித மரி யாதை இல்லாத வாழ்க்கை. இந்த நடைமுறை வாழ்க்கையை இமையம் கதையாக்குகிறார். அவர் வறுமையைக் கதைகளின் கருவாக்கவில்லை; வறுமையைக் கதைகளின் பின்புலமாக்குகிறார்.
இந்தக் கதைகளின் சிறப்பை இலக்கியத் தோரணைகள், இலக்கிய உத்திகள் நிர்ணயிக்கவில்லை. அறிவுபூர்வமாகத் தெரிந்தெடுத்த சமூகத் தத்துவங்கள் நிர்ணயிக்கவில்லை. அதை யதார்த்தமான வாழ்க்கை நிர்ணயிக்கிறது. கதையின் சிறப்பு நிஜத்தின் சிறப்பு. கதைகள் சொல்லும் நிஜ வாழ்க்கையைப் போல, அலங் காரம் இல்லாமலே கதைகளும் நிஜ வடிவம் எடுக்கின்றன.
-
சாவுசோறு
என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் மாதிரி வீடும் தெருவும், கணவனும் பிள்ளையும் என்று மட்டுமே இருக்கக்கூடியவர்கள் அல்ல. பல ஊர் சனங்கள் திரண்டு இருக்கக்கூடிய சபையில் ஆடக்கூடியவர்கள், பாடக்கூடியவர்கள், பேசக்கூடியவர்கள். எந்த நிலையிலும் தேங்கிப்போகாமல் தண்ணீர் மாதிரி ஓடிக்கொண்டேயிருப்பவர்கள். ஒவ்வொரு கணத்தையும் ஆசைதீர வாழத் துடிப்பவர்கள்…
-
நறுமணம்
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள்
பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்துகின்றன. புதிய
தொழில்நுட்பம் கண்ணுக்குத் தெரியும் பல நன்மைகளைச் செய்யும்
அதே நேμத்தில், கண்ணுக்குச் சட்டென்று புலப்படாத தளத்தில்
உறவுகளையும் மதிப்பீடுகளையும் அது தகர்க்கிறது என்பதையும்,
இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதையும்
இவர் கதைகள் நுட்பமாகச் சித்தரிக்கின்றன. படிப்பு, பதவி
போன்றவை அதிகரித்துவரும் இக்காலத்தில் பல நூற்றாண்டுகளாக
மக்கள் மனதில் வேறூன்றியிருக்கும் பாலின, சாதிப் பாகுபாடுகள்
எவ்வாறு செயல்படுகின்றன என்ற கேள்வியையும் இமையம்
எழுப்புகிறார்.