-
திசையெல்லாம் நெருஞ்சி
மொத்தமாக மூன்று கதைகள். மூன்றும் இன்றைய எதார்த்தத்தை அழகாக பதிவுசெய்வதால் நூல் இலக்கிய அந்தஸ்தைப் பெறுகிறது. குறிப்பாக கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்ந்து திடீர் நகரவாசியான மணமகனின் மனவோட்டத்தில் நகரும் “உருமால் கட்டு” கதை மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தது. மற்றோன்று “இரட்சணியம்” – பதின்மவயது விடலை பையனின் குழப்பங்களைப் பதிவு செய்வதாகவும், “திசையெல்லாம் நெருஞ்சி”- எங்கும் களையாக மண்டிக்கிடக்கும் சாதியகட்டுமானத்தை உடைத்து காட்டுவதாகவும் இருக்கிறது.
வாசர்களை அயற்சியடையச் செய்யாத எளிமையான எதார்த்த நடையில் எழுதப்பட்ட கதைகள் இவை. வாய்பிருந்தால் வாசியுங்கள்.