மலேசியாவில் கோலோச்சியிருக்க வேண்டிய மனிதன் தன் தாயகம் திரும்ப நேர்வதில் முடிகிறது நாவல். சொந்த வாழ்வில் நிம்மதியற்ற சூழலை அவரே ஏற்படுத்திக் கொள்கிறார். அவரது பொருளாதாரம் வீழ்த்துகிறது. சண்முகம்பிள்ளை கண்டடைவது வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம். அதில் அவர் தோல்வியைச் சந்திக்கிறார். இந்த அனுபவத்தை ‘அக்கினி வளையங்கள்’ நாவல் தருகிறது. சை.பீர்முகமது இந்நாவலை எழுதியதின் வழி நிலையான இடத்தைப் பெறுகிறார். சு.வேணுகோபால்
பல தசாப்தாங்களாக அடக்குமுறைகள், உரிமை இழப்புகள், பாரபட்சங்கள், மத/கலாசார அழிப்பு ஆகிய கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருந்த சுமார் ஒரு லட்சம் மலேசியத் தமிழ் இந்துக்கள் கோலாலம்பூரில் காந்தியின் சித்திரங்களையே பதாகைகளாக ஏந்தி அந்த நாளில் ஒன்று திரண்டு வந்தனர். அதனை மலேசிய அரசு கையாண்ட விதத்தை உலகமே பார்த்து அதிர்ந்தது. இந்த எழுச்சியின் பின்னணியின் பதைபதைப்பு குறையாமல் அமைந்தது இந்நாவல் – ஜடாயு