Author | |
---|---|
Publications | வல்லினம் பதிப்பகம் |
பி.கிருஷ்ணன் படைப்புலகம்
RM20.00
புதுமைதாசன் என்ற புனைபெயரில் எழுதும் எழுத்தாளர் பி.கிருஷ்ணனின் படைப்புலகை விரிவாக அறிமுகம் செய்யும் நோக்கில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.
In stock
Related products
-
பெரியார்: இன்றும் என்றும்
சமுதாயம், மதம், சாதி, தேசியம் என 21 தலைப்புகளில் பெரியாரின் கருத்துகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பெரியாரின் நூல் வரிசைகளை முழுவதும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தலைப்புகள் காலம், இடம் விவரங்களுடன் அன்றைய சமூக அரசியல் பின்புலத்துடன் அமைந்திருக்கின்றன.
-
உலகின் நாக்கு
பல கட்டுரைகளில் நவீனின் நோக்கு என் நோக்குக்கு மிக அருகே வருகிறது. ஏனென்றால் அது புதுமைப்பித்தன், க.நா.சு, சுந்தரராமசாமி எனத் தொடர்ந்து வரும் ஒரு நவீன இலக்கியப் பார்வைதான். அது பொது உண்மைகளைத் தவிர்த்து இலக்கியம் மட்டுமே முன்வைக்கும் தனியுண்மைகளைக் கவனிக்கும். கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கடந்து மானுட விசித்திரங்களையும் மானுட உன்னதங்களையும் நோக்கும்.
காட்டில் யானை செல்லும் பாதை உண்டு. எலிகள் செல்லும் பாதை கீழே. பறவைகள் செல்லும் பாதை மேலே. எங்கும் செல்லும் பாதை என்பது காற்றின் வழி. அதுவே இலக்கியத்திற்குரியது.
உயிர்ப்புள்ள ஓர் இலக்கிய ரசிகன் தனக்குள் இருப்பதை இக்கட்டுரைகள் வழியாக நவீன் காட்டுகிறார். தான் எனக் கோத்துக்கொண்டிருக்கும் தன்முனைப்பை அகற்றித் தான் என உணரும் தானறியாத் தன்னிலை ஒன்றைப் புனைவுகள் முன் வைக்கவும் புனைவுக்குள் கரைந்து உட்செல்லவும் மீண்ட பின் தான் கண்டவற்றைத் தன் மொழியில் தன் அனுபவமாக முன்வைக்கவும் அவரால் முடிந்துள்ளது.–ஜெயமோகன் முன்னுரையிலிருந்து..
RM12.00 -
தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்
முன்னுரை
இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை.
-
சாட்சி சொல்ல ஒரு மரம்
அரசியல், பொருளாதாரம், சூழலியல், சமூகவியல், சர்வதேசப் பிரச்சனைகள், மனித உரிமைப் பிரச்சனைகள் எனப் பல்வேறு தளங்களில் வளமான மார்க்ஸிய, மனிதநேயப் பார்வையைச் செலுத்தி, வாசகர்களை எளிதாகச் சென்றடையும் ஆழமான கருத்துகளைச் சுமந்து வரும் எஸ்.வி.ராஜதுரையின் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் – கட்டுரைகள், கவிதைகள், திரைப்பட விமர்சனங்கள், நூல் அறிமுகங்கள், இலக்கியத் திறனாய்வுகள், இசையனுபவங்கள், திரைப்பட விமர்சனங்கள் எனக் கிளை பரப்பி – ‘சாட்சி சொல்லும் மரமா’க உருக்கொள்கின்றன. சமத்துவமும் நீதியும் நிறைந்த சமுதாயம் பற்றிய கனவுகள், கற்பனைகள், செயல் திட்டங்கள் ஆகிய அனைத்தையும் விழுங்கி விடுவதில் ‘கருந் துளையை’ ஒத்த நமது சமகால உலகம் தரும் முற்றிலும் எதிர்மறையான, கசப்பான அனுபவங்களிலிருந்து நம்மை ஓரளவு மீட்டு ஆறுதலளிக்கும், ஆசுவாசப்படுத்தும் கலை, இலக்கியப் படைப்புகள் சில இயன்ற அளவு எளிமையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அதேவேளை அவற்றினூடே வெளிப்படும் சமூகவியல், அரசியல், தத்துவப் பார்வைகள் எடுத்துக்காட்டப் பட்டுள்ளன.
-
அவர்களின் பேனாவிலிருந்து கொஞ்சம் மை
மலாய் நவீன இலக்கியம் குறித்த அறிமுகக் கட்டுரைகள் அடங்கிய நூல்.
-
இன்றைய காந்தி
காந்திய சிந்தனைகளை இன்றைய நோக்கில் அணுகும் விவாதங்களின் தொகுதி இந்த நூல். சமகாலத்து இளைய தலைமுறை காந்தியை அணுகும்போது உருவாகும் ஐயங்கள் சிக்கல்கள் ஆகியவை இந்த உரையாடல்கள் வழியாக இயல்பாக உருவாகி வந்துள்ளன. காந்தியை முழுமையாக அணுகும் இந்நூல் அவர் மீது கறாரான ஒரு பரிசீலனையை நிகழ்த்துகிறது.
RM50.00 -
மலேசிய நாவல்கள் (தொகுதி 1)
மலேசிய நாவல்கள் குறித்த ரசனை விமர்சனம் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு
RM15.00 -
கதை சொல்லியின் 1001 இரவுகள்
ஆயிரத்தோரு இரவுகளைக் கதைக்கடல் என்று அழைக்கிறார்கள் கடலில் அலைகள் தோன்றி ஒன்றோடு ஒன்று கலந்து புதிய அலைகளை முடிவில்லாமல் உருவாக்கிக் கொண்டே இருப்பதுபோல் ஆயிரத்தோரு இரவுகளின் கதைகளும் ஒன்றில் ஒன்று கலந்து ஒன்றின் விளைவாய் ஒன்று பிறந்த காலம் தாண்டியும் முடிவில்லாமல் புதிய கதைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.