Showing 1–20 of 61 results

  • பணம்சார் உளவியல் | The Psychology of Money

    ”பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலின், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது, மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல்.

    RM50.00

    Only 1 left in stock

  • நம்மைச் சுற்றி காட்டுயிர்

    சுற்றுச்சூழல் பேணல், காட்டுயிர் மீது கரிசனை, இயற்கையில் ஆர்வம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. இம்மாதிரியான அக்கறைகளை இந்த நூல் தூண்டிவிடும். பூனை, நாய் போன்ற செல்லப்பிராணிகளையும் நாம் பேண வேண்டும். நம்முடன், நம் வீட்டில் ஒருவராக வாழும் செல்லப்பிராணிகள் மனித உலகிற்கும், விலங்கு உலகிற்கும் ஒரு பாலம் போல் அமைகின்றன. இவற்றைப் பற்றியும் இந்நூலில் படிக்கலாம், புறஉலகைப் பற்றிய உங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

    RM5.00

    Out of stock

  • பி.கிருஷ்ணன் படைப்புலகம்

    புதுமைதாசன் என்ற புனைபெயரில் எழுதும் எழுத்தாளர் பி.கிருஷ்ணனின் படைப்புலகை விரிவாக அறிமுகம் செய்யும் நோக்கில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    RM20.00

    In stock

  • வரலாறு என்னும் கதை

    வாலாறு எனும் கதை, எடுவர்டோ அவர்களின் படைப்பு. ரவிக்குமார் அவர்களால் தமிழுக்கு மொழிப்பெயர்க்கப்பட்டது.

    “நான் உங்களது படைப்பை வாசிக்கும்போது நான் இன்ந்தென வகைப்படுத்தமுடியாத எனது இயலாமையைக் கண்டுகொள்கிறேன். இது வரலாறு? அப்படியானால் வரலாறு நூல்களின் மிகச்சிறந்த வடிவம் இதுவென்பேன். முழுக்க முழுக்க வதந்திகள், முழுக்க முழுக்க கதைகள்.

    – சேண்ராஸ் சிஸ்ரோஸ்

    RM7.00

    Out of stock

  • சமகால சிறுகதைகளின் பரிணாமம்

    என்னளவில் விமர்சகரின் வேலை என்பது எழுத்தாளரை திருத்தி நல்வழிப்படுத்துவதோ தீர்ப்புரைப்பதோ, அறிவுரை சொல்வதோ அல்ல. ஏனெனில் விமர்சகரால் கலைஞரை உருவாக்க முடியாது என்றே நம்புகிறேன். நல்ல விமர்சனம் புனைவெழுத்து அளவிற்கே கண்டடைதலின் களிப்பை அளிக்க வேண்டும். அதை வாசகருக்கு கடத்த வேண்டும். சிறுகதைகள் சார்ந்து எழுதப்பட்ட விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

    RM32.00

    Out of stock

  • சியமந்தகம்: ஜெயமோகன் 60

    ஜெயமோகன் எனும் ஆளுமை, ஜெயமோகனின் படைப்புலகம் என மொத்த கட்டுரைகளையும் இரண்டு மையங்களில் தொகுக்கலாம். இரண்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால் இரண்டும் ஒன்றையொன்று நிரப்பும், தொடும் இடங்களையே இக்கட்டுரைகள் பொதுவாகப் பேசுகின்றன எனச் சொல்லலாம். ஜெயமோகனைத் தாண்டி இக்கட்டுரைகள் சிலவற்றில் நாம் ஒரு காலகட்டத்தின் இலக்கிய உலகைக் காணமுடியும். குற்றாலம் கவிதை முகாம், தருமபுரி சந்திப்பு, ஊட்டி சந்திப்புகள் என முனைப்புடன் திகழ்ந்த காலகட்டத்தை அறியமுடியும். தமிழ் மட்டுமின்றி மலையாள எழுத்தாளர்களான கல்பற்றா நாராயணன், பி. ராமன், தத்தன் புனலூர் மற்றும் கன்னட எழுத்தாளரான ஹெச். எஸ். சிவப்பிரகாஷ் ஆகியோரது கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இத்தனை எழுதிய, இத்தனை பயணித்த, இத்தனை செயல்பட்ட இன்னொரு தமிழ் எழுத்தாளர் இருந்ததில்லை. இத்தனை விரும்பப்பட்ட, வசைபாடப்பட்ட வேறு தமிழ் எழுத்தாளரும் உண்டா எனத் தெரியவில்லை. உலக அளவிலேயேகூட வெகுசிலர்தான் இருக்கக்கூடும். இத்தகைய பல பட்டைகள் கொண்ட அருமணியின் சில பட்டைகளை மட்டுமாவது ‘சியமந்தகம்’ தொகுதி காட்டிச்செல்கிறது என்றே நம்புகிறோம்.

    RM90.00

    Only 1 left in stock

  • சிக்மண்ட் ஃபிராய்டு : ஓர் அறிமுகம்

    சிக்மண்ட் ஃபிராயிட் உளவியலுக்கு முகம் கொடுத்தவர் நம் அறிவுக்கு அப்பாற்பட்ட மனமான நனவிலி மனம் பற்றி அழுத்திக் கூறியவர் பேச்சுவழிச் சிகிச்சைகளின் ஆசான் தனிமனித உளவியலையும் தாண்டி மதம் , மனித நாகரிகம் , கலை , இலக்கியம் ஆகியவை பற்றி விரிவாக எழுதியவர்.

    RM35.00

    Out of stock

  • சூழலும் சாதியும்

    ஐம்பூதங்கள், திசைகள், தாவரங்கள், உயிரினங்கள் அனைத்திலும் சாதியம் உள்ள செய்தி பலருக்கு வியப்பளிக்கும். சூழலியலைப் பண்பாட்டோடு இணைத்து விடை தேடும் நூல்.

    RM9.00

    Out of stock

  • கடவுளுக்கு வேலை செய்பவர்

    இந்த நூலில் விதவிதமான வாழ்வுகள் உண்டு. விஞ்ஞானம் உண்டு. வரலாறு உண்டு. தொன்மம் உண்டு. விளையாட்டு உண்டு. நகை உண்டு. தமிழும் கவிதையும் உளது. இவை யாவும் இலக்கியமாகும் ரசவாதம் இதன் ஒவ்வொரு பக்கத்திலும் உண்டு. ஒரு பக்கத்திலேனும் கொட்டாவி இல்லை.

    RM32.00

    Out of stock

  • வரம்பு மீறிய பிரதிகள்

    வரம்பு மீறிய பிரதிகள்

    சாரு நிவேதிதா இலக்கியம் இலக்கியச் சூழல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் இலக்கியச் சூழலின் நிறுவப்பட்ட கருத்தாக்கங்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களையும் எள்ளலையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. இலக்கியம்சார்ந்த அதிகாரச் செயல்பாடுகளைக் குறித்து கேள்வி எழுப்புகின்றன. அதே சமயம் எழுத்தின் வரம்புகளை உடைத்தெறிந்த ழார் பத்தாய், கேத்தி ஆர்க்கர், ஹோஸே மரியா ஆர்கெதா, சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி, க்ரிஸ்டினா பெரி ரோஸி, அல் முகமது ஷுக்ரி போன்றோரின் படைப்புகள் குறித்து மிக ஆழமான அறிமுகத்தை இந்நூல் வழங்குகிறது.

    RM30.00

    Only 1 left in stock

  • சொல்லிமுடியாதவை

    ஆசாரங்கள் தேவையா? பண்டிகைகள் கொண்டாடத்தான் வேண்டுமா? குடும்ப உறவில் ஏன் இத்தனை வன்முறை? தற்கொலை தியாகமாக ஆகுமா? செய்தொழிலைப் பழிக்கலாகுமா? நம் பண்பாட்டுக்கென உடை உண்டா? பெண்களின் கற்பு நிலையாக இருக்கவேண்டுமா? பண்பாட்டைச் சுமக்கத்தான் வேண்டுமா? ஜெயமோகன் தன் நண்பர்கள் வாசகர்களின் வினாக்களுக்கு எழுதிய விடைகளாக அமைந்த பண்பாட்டுக் கட்டுரைகள் இவை நேரடியான கூரிய கருத்துகள் வரலாற்றுப்பின்புலம் தேடிச்சென்று விவாதிப்பவை.
    By the same Author

    RM18.00

    Out of stock

  • புதிய வெளிச்சத்தில் தமிழ் இலக்கிய வரலாறு

    இலக்கிய, இலக்கணங்கள் என்பவை சமூகத்தை, மனித மனங்களைக் கட்டமைக்கும் ஒரு அதிகார நிறுவனமாக வரலாற்றில் இயங்குகின்றன. இந்தப் பின்னணியில் தமிழ் இலக்கிய இலக் கணங்கள் அரசு, சாதி, சமயம், ஆணாதிக்கம் முதலிய பல்வேறு அதிகாரக் கட்டமைப்புகளின் பகுதியாகவும் இவற்றுக்கு எதிர்நிலையிலும் எவ்வாறு செயல்பட்டிருக்கின்றன என்பதை நுட்பமாக எடுத்துரைக்கிறது க.பஞ்சாங்கத்தின் ‘புதிய வெளிச்சத்தில் தமிழ் இலக்கிய வரலாறு’. ஒவ்வொரு இலக்கிய வகைமைப் போக்குக்கும் பின்புலங்களுடனும் திறனாய்வுடனும் இந்நூல் அமைந்திருக்கிறது. திறனாய்வு நோக்கில் விரிவாக எழுதப்பட்ட முதன்மையான இலக்கிய வரலாறு என்றும் இதைக் கூற முடியும். எந்த ஒரு இலக்கியத்தையும் இன்றைய சமகாலப் பார்வை யுடனும் நவீனக் கோட்பாட்டுப் பார்வையுடனும் இணைத்து இன்றைக் கான இலக்கியமாக மாற்றி வாசிக்கும் பார்வை இந்நூலின் சிறந்த அம்சங்களில் ஒன்று. சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்களை திராவிட, தமிழ் தேசியக் கட்சிகள் சமகாலத்துக்கு இடம்பெயர்த்த பின்னணியையும் இந்த நோக்கில் விளக்குகிறது. இன்று மார்க்சியம், பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், புலம்பெயர் இலக்கியம், வட்டார இலக்கியம், திருநங்கைகள் எழுத்து, மின்னூடக இலக்கியம் என்று பல்வேறு போக்குகளில் கவிதை, சிறுகதை, நாவல், நாடகங்கள் வளர்ச்சியடைந்து மனித விடுதலை அரசியலை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை விவாதிக் கும் இலக்கிய வரலாற்று நூல் இது. – க. ஜவகர்

    RM25.00

    Out of stock

  • இவர்கள் இருந்தார்கள்

    பவா எழுதிய கட்டுரைகள் மீடியாவாய்ஸ் இதழில் வெளிவந்தன. அதன்பின் நண்பர் உதயஷங்கர் அதேபோல நினைவுகளை எழுதியிருந்தார். மீடியாவாய்ஸ் ஆசிரியர் ராவ் என்னிடம் அதில் எழுதும்படிக்கோரியபோது அந்த மரபை நானும் கொண்டுசெல்லலாம் என நினைத்தேன். என் நினைவில் நீங்காதிருந்த சில ஆளுமைகளைப்பற்றி எழுத ஆரம்பித்தேன் இக்கட்டுரைகளில் பல முன்பே எழுதப்பட்டவை. சிலவற்றை மாற்றி எழுதினேன். சில கட்டுரைகள் புதியவை. இப்படி ஒரு கட்டாயம் இல்லை என்றால் இவை இவ் வடிவில் வந்திருக்காது அதற்காக திரு ராவ் அவர்களுக்கு நன்றி.

    RM16.00

    Out of stock

  • எழுதும் கலை

    நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுதுவதற்கான பயிற்சியை மு

    RM13.00

    Out of stock

  • ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு

    எல்லா குழந்தையும் மேதைதான் என ஒரு சொற்றொடர் உண்டு. குழந்தை புத்தம் புதிய உலகிற்கு வந்து விழுகிறது. ஆனால் திகைப்பே இல்லாமல் ஒவ்வொன்றாகத் தொட்டு அடையாளப்படுத்தி அறிந்தபடியே செல்கிறது. மொழியின் உருவாக்கம் குறித்து ஆராய்ந்த நாம் சாம்ஸ்கி போன்றவர்கள் குழந்தை, மொழியை அடையும் விந்தையைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். குழந்தையின் சிந்தனையின் அமைப்பு நரம்புக் கட்டமைப்பாக அதன் மூளைக்கும் ஏற்கனவே உள்ளது. புற உலகம் அதற்குச் சொற்களையும் படிமங்களையும் மட்டுமே அளிக்கிறது. ஒரு மொழியின் புதிய சாத்தியங்கள், கவிஞர்களாலும் குழந்தைகளாலும்தான். இந்தச் சிறிய நூல் என் மகள் ஜெ. சைதன்யா பற்றிய தொடர்ந்த அவதானிப்புகளால் ஆனது. என் தணியாத பாசத்தால் ஈரமானது. என் கனவுகளால் ஒளியூட்டப்பட்டது. குழந்தை மனம் மெய்ஞானத்தைத் தொடும் சில கணங்கள் இதில் இருப்பதால் இது ஒரு பேரிலக்கியம். ~ எழுத்தாளர் ஜெயமோகன் தன் மகளின் குழந்தைமையை அருகிருந்து அவதானித்த ஒரு படைப்பாளித் தந்தையின் அனுபவ உரையாடல்களின் தொகுப்பாக, ‘ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு’ என்னும் நூல் தன்னறம் வாயிலாக மீள்பதிப்பு அடைகிறது. “தூய்மையான மனம் இயற்கையை எதிர்கொள்ளும்போது மொழி அழகிய படிமங்களாக மாறிவிடுகிறது. கவித்துவம் ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் மொழியில் உருவாகிக் கொண்டிருக்கிறது. மானுடஞானம் எவ்வாறு உருவாகிறது என்பதை குழந்தை மொழியைக் கற்றுக்கொள்ளும்போது உணரலாம்” என்னும் நித்ய சைதன்ய யதி அவர்களின் வார்த்தைகள் சுமந்துள்ள ஆழுள்ளத்தை, எழுத்தின்வழி அறியச்செய்கிற ஒரு வழிகாட்டிநூலாக இப்புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையும் மழலைஞானத்தின் வேர்களைப்பற்றி விவரிக்கிறது.

    RM10.00

    Out of stock

  • இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

    இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொதுத்தளத்தையே அப்பெயரால் குறிப்பிடுகிறோம். இந்து ஞான மரபில் 10 – ம் நூற்றாண்டுவரை லௌகீக அடிப்படை (பொருள்முதல் வாத அடிப்படை) கொண்ட சிந்தனைகள் சரிபாதியை எடுத்துக்கொண்டிருந்தன. அவற்றுடன் விவாதித்தே ஆன்மிக மரபுகள்கூட வளர்ந்தன. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்து ஞான மரபு பக்தி மார்க்கங்களால் ஆனதாக மாறியபோது லௌகீக ஞானங்கள் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. அவை மறைந்தன. விளைவாக இந்து ஞானமே தேங்கி சீரழிந்தது. சடங்குகளாகவும் மூடநம்பிக்கைகளாகவும் சுருங்கியது. இந்நூல் இந்து ஞான மரபின் அடிப்படைகளான ஆறு தரிசனங்களை விரிவாக விவாதிக்கிறது. நவீன சிந்தனையுடன் அவற்றை எப்படி மீட்டு இன்றைய சூழலுக்கு ஏற்ப மறு ஆக்கம் செய்வது என்று பேசுகிறது.

    RM23.50

    Out of stock