-
-
அபி கவிதைகள்
அருவக் கவிதைகளை உண்மையான அனுபவப் புலத்திலிருந்து தொடங்கி, தன் அதிகபட்ச சாத்தியப் புள்ளிவரை கொண்டுசென்ற முதன்மையான தமிழ் நவீனக் கவிஞர் அபி மட்டுமே. குறுகிய, சிறிய இக்கவியுலகினுள் தமிழ்க் கவியுலகின் மிகச் சிறந்தபல கவிதைகள் உள்ளன என்பது ஐயத்திற்கிடமின்றிஒரு தமிழ்ச் சாதனையே.
– ஜெயமோகன்.
அவரது அனுபவநிலை அருத்திரண்டது. சூன்யமானது.காலமற்றது. தத்துவச் சுமையில்லாதது. வலியில்லாதது. நான் – இல்லாத ஒரு வாழ்க்கை அது. இதை நிரூபிக்கும் ஓர் அகப்பயணத்தை அவர் தம் கவிதைகளில் இயற்றுகிறார். அக உலகிற்குள் சொற்களுள் நடக்கும் நாடகத்தை அபியைப் போல் எழுதுவதற்கு ஒருவர் மெய்ம்மையுணர்ந்தோனாக இருத்தல் வேண்டும்.
– தேவதேவன்.
-
அமைதியின் நறுமணம்
இந்தியப் படைகளுக்கு மணிப்பூரிலும் வேறு சில பகுதிகளிலும் 1958 கிதிஷிறிகி சட்டப்படி சிறப்பு அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன. இது ஒரு கொடுமையான சட்டமாகக் கருதப்படுகிறது. இதை அகற்றிவிட வேண்டும் என்பதுதான் ஷர்மிலாவின் கோரிக்கை. இதற்காகக் கடந்த பத்து ஆண்டுகளாக – நவம்பர் 4, 2000 முதல் – ஷர்மிலா மணிப்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஷர்மிலாவை உயிருடன் வைத்திருக்க அவர் மூக்கில் புகுத்தப்பட்ட குழாய் மூலம் வற்புறுத்தி அவருக்கு உணவு ஊட்டப்படுகிறது. இந்த வித்தியாசமான போராட்டம் வட கிழக்குப் பகுதிகளில் போராடிவரும் பலருக்கு ஒரு சக்திவாய்ந்த சின்னமாகிவிட்டது. ஷர்மிலாவுக்கு இளம் வயதுப் பெண்கள் விரும்பிப் போற்றும் சில விஷயங்களுக்கான ஏக்கங்கள் உண்டு : காதல், சுதந்திரம், ‘சுதந்திரமான’ வாழ்க்கையை வாழும் இயல்பான மகிழ்ச்சி, வெகு சாதாரணமான விஷயங்களான நீர் பருகும் அனுபவம், பல்லைத் தேய்க்கும் சுகம் இவற்றுக்கான ஏக்கம். மைதைலான் மொழியில் எழுதப்பட்ட இதிலுள்ள கவிதைகள், தனியாகப் போராடும் ஒரு பெண்ணின் வலியுடன் கூடிய ஊமைக்காயங்களைச் சொல்பவை.
-
ஆத்மாநாம் தேர்ந்தெடுத்த கவிதைகள்
ஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்படுகிறார். ஒருபோதும் தன் பயணத்துல அகம் சார்ந்ததையும் விடலை. – சுகுமாரன்
-
உச்சினியென்பது: மாரி செல்வராஜின் சொற்கள்
நிச்சயமாக, நீங்கள் எதிர்பார்க்கும் மொழியின் பிரத்யேக மூக்குத்தியின் வெளிச்சம் இச்சொற்களில் இருக்காது. ஏனெனில், இவை இருளின் வரிகள். எரிகிற குடிசைகளின் வெளிச்சத்தில் தெரிகிற ஆகாசத்தை மட்டுமே ரசித்துப் பறக்கிற மொழியெனும் பச்சைக்கிளியல்ல நான்.
-
-
-
-
கொங்குதேர் வாழ்க்கை 2
ழின் சிறந்த நவீன கவிதைகளின் தொகுப்பு இது. பாரதியார் தொடங்கி இன்றைய கவிஞர்கள் வரை எழுதிய நூற்றுக்கணக்கான கவிதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் கவிஞர்கள் குறித்த குறிப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளது.
-
கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்
வாசிக்க இடமில்லாதவர்கள் என்கவிதைகளின் மீது கூடாரங்களை விரிக்கலாம் தேவைக்கதிகமான சொற்களை உடைத்து உலைமூட்டிக்கொள்ளலாம் அர்த்தங்களைக் கலைத்து குழந்தைகள் விளையாடினால் பாதை மறுக்கப்பட்டவர்கள் நடந்துசெல்ல நீளவரிகள் பயன்பட்டால் நான் மகிழ்வேன். பசிக்குச் சாப்பிடமுடிகிற கவிதைகளை உருவாக்குவேன் அதற்காகவே என் வாழ்வை மொழியிடம் தின்னக் கொடுக்கிறேன்.
-
-
சுகுமாரன் கவிதைகள்
நவீன தமிழ் கவிதையில் குறிப்பிடத்தகுந்த கவி ஆளுமையான சுகுமாரனின் முழுக்கவிதைகளின் தொகுப்பு. 1974 முதல் 2019 வரையான நாற்பத்தைந்து ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்த கவிதைகள் மொழியிலும் கூறுமுறையிலும் காலத்திலும் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து நிற்பவை. மாற்றம் என்ற மாறாத இயல்பை உயிர்க் குணமாக கொண்டவை.
-
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன
நாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம். காட்டிக்கொள்ளப்படுகிறோம். அரசியல்ல் தத்துவ மற்ற, எதிர்ப்பு காரமற்ற சமூக இயக்கங்களை உருவாக்குகின்றன.
-
தீராப் பகல்
யுவன் கவிதைகள் வாசக சிரத்தையைத் தூண்டி இதப்படுத்தும் குணங்கள் கொண்டவை. சொல் சூட்சுமமும் வெளியீட்டுச் சூட்சுமமும் உள்ளோட்டமும் கொண்டவை. முடிவை நோக்கிக் குறுக்குப் பாதையில் விரைபவை. மலைக்காற்றுபோல் புத்துணர்வு தருபவை. இவரது கவிதையின் முக்கிய நோக்கங்கள் என்று விவரிப்பு, விசாரணை, விசாரம் மூன்றையும் சொல்லலாம். இவற்றில் விசாரத்தைவிட விசாரணையும் விசாரணையைவிட விவரிப்பும் வலுவானவை. –சுந்தர ராமசாமி 1990 முதல் எழுதிவரும் எம். யுவனின் மொத்தக் கவிதைகளின் தொகுப்பே ‘தீராப் பகல்’. அவரது ஐந்து தனித் தொகுப்புகளில் இடம்பெற்ற கவிதைகளுடன் கடந்த ஏழு ஆண்டுகளில் எழுதிய புதிய கவிதைகளும் அடங்கியது இத்தொகுப்பு. அறிந்தவற்றிலுள்ளில் இயங்கும் அறியப்படாத காலத்தையும் அறியத் தவறிய வெளியையும் பெருந்திரட்டின் கவிதைகள் புலப்படுத்துகின்றன.
-
-
-
-
-
பூமியை வாசிக்கும் சிறுமி
நவீன வாழ்க்கைமுறையின் கடும் மனஇறுக்கம் கொண்ட படிமங்களை நெகிழ்வான ஒரு மொழிக்கும் இசையச் செய்வதன்மூலம் மிக ஆழமான அனுபவங்களை இக்கவிதைகள் தன்னியல்பாக உருவாக்குகின்றன. சுகுமாரன் 2006 வரை எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு இது.
-