Showing 201–220 of 351 results

  • O$P$

    RM30.00

    In stock

    O$P$

    O$P$ (OweMoneyPayMoney) is a collection of three controversial plays, the multi-ethnic voices of the subaltern in Singapore: Malay transsexual in NA (Not Applicable), Chinese loan shark/debt-collector in O$P$, Indian undertaker in ASH. With support from the National Arts Council Publishing Grant.

    RM30.00
  • Mines

    RM30.00

    Only 2 left in stock

    Mines

    MINES is a play by provocative Singaporean playwright Elangovan. It is set amidst a fictitious war between Malaysia and Singapore and touches on racism, patriotism and the differences between both sides. This thought-provoking play, which was given a last-minute go-ahead for staging by the authorities, challenges the notion of peace and harmony in the Singaporean urban life. Elangovan, considered a pioneer in Tamil poetry and experimental Tamil theatre in Singapore, has had his plays staged worldwide and won the Southeast Asia (SEA) Write Award in 1997 for his contribution to literature and theatre in Singapore. With support from the Lee Foundation for publication.

    RM30.00
  • Smegma

    RM30.00

    Out of stock

    Smegma

    In every society, the privileged groups’ control over and exploitation of the disadvantaged groups is the key source to social problems. These problems endlessly shape the material and spiritual landscapes of the outsiders. The outsiders’ education and environment generates beliefs and values that are diametrically opposed to the empowered status quo and if unchecked will fester and spread like virulent disease to destroy everything set by the powers that be. […] SMEGMA interrogates the ‘moral, cultural, religious, political, economical legitimacy world’ from many different perspectives of the underdogs and their masters. When the comfort-zone is shattered ugliness rears its head like cheesy SMEGMA.

    Source: Smegma by Elangovan (2006)

    RM30.00
  • P

    RM30.00

    Only 1 left in stock

    P

    P (SHIT), contains two plays, P and Motcham (Salvation). Here, we see Elangovan continue his tradition of producing socio-political allegories.

    RM30.00
  • I, BOSE

    BOSE ( + Transportation) exposes the impregnable mystery of the death of the forgotten hero Netaji Subash Chandra Bose, and explores the numerous conspiracy theories. Bose, the most fascinating personality from history in Asia, led the Indian National Army from Singapore in its armed struggle against the British imperial forces of India for independence. TRANSPORTATION captures the displacement and suffering, cultural denigration and crisis of identity that ensues from all forms of estrangement in the colonial period in the penal settlements. It reconstructs the experiences of native criminals and political prisoners transported overseas to the penal settlements established by the British, from the late eighteenth to mid-twentieth centuries, in Southeast Asia (Singapore and Malaya), the Indian Ocean and the Andaman Islands. The plays were staged by Agni Kootthu (Theatre of Fire) with support from National Arts Council, Arts Fund and Lee Foundation. I. BOSE is published with the support of National Arts Council’s Publication and Translation Grant scheme.

    RM30.00
  • கையறு

    நான் இந்த நாவலை முதலில் வாசித்தபோது என்னைக் கவர்ந்த அம்சமே நினைவுச்சின்னம், இமயத்தியாகம், மரவள்ளிக்கிழங்கு என இதற்கு முன் இக்களத்தை ஒட்டி புனையப்பட்ட நாவல்களில் இல்லாத தனித்த வழித்தடத்தை இப்புனைவின் வழி கோ.புண்ணியவான் அமைத்துள்ளார் என்பதுதான். எழுத்தாளனின் கைரேகை என்பது அதுதான். அதுவே ஒரு புனைவை மறுவாசிப்புக்குத் தூண்டுகிறது. ஓர் அசாதாரண சூழலில், தானறியா நிலத்தில், கதாசிரியன் உருட்டிவிடும் கதாபாத்திரங்கள் மூலம் அவனே கண்டடையும் வாழ்க்கையில் திடுக்கிடும் உண்மைகளை கோ.புண்ணியவான் இந்த நாவலின் வழி அடைந்துள்ளார்.‘கையறு’ எனும் பதம் இந்த நாவலின் தலைப்பு மட்டுமல்ல; நாவலின் ஆன்மாவும் அதுதான். அதை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாயிலாகவும் கோ.புண்ணியவான் நிறைத்துச்சென்றுள்ளார். – ம.நவீன்

    RM40.00
  • ஊமைச்செந்நாய்

    அது அவனுடைய சுயமறியும் தருணமும்கூட. ஆகவே அது ஒரு தியானம். நம் மாபெரும் குருநாதர்களின் வாழ்க்கையில் எல்லாம் சாகசம் என்னும் அம்சம் இருப்பதைக் காணலாம். சாகசத்தையும் மிகுபுனைவையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட உத்வேகமிக்க சிறுகதைகளின் தொகுதி இது. ‘மத்தகம்’, ‘ஊமைச்செந்நாய்’, ‘காமரூபிணி’ போன்ற புகழ்மிக்க கதைகள் இதில் உள்ளன. 

    RM22.00RM24.50
  • மணல்

    தாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது கிடையாது. அவரைப் பார்த்ததேகூட கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும் இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் நீடித்து இருப்பதே இப்படிச் சுரண்டுவதற்கும் மாற்றான் முயற்சியின் பலன்களைத் தான் பறித்துக்கொள்வதற்கும் தானா? தலைமுறைகள் கதாநாயகன் சங்கரனுடைய சிந்தனையில் இப்படியும் எண்ணங்கள் எழுகின்றன. அவன் மீண்டும் சுரண்டல் வாழ்க்கையில் ஆழ்ந்து விடுகிறான் என்றாலும் அவனுக்கும் இப்படிச் சிந்தனைகள் தோன்றின என்பதே நம்பிக்கைக்குரிய விஷயம். ஆனால், இந்த அளவு ஈரப்பசைகள் ஒரு மனிதனுக்கு இல்லாது போய்விட்டால் இந்த உலகமும் வாழ்க்கையும் மதிப்பும் கண்ணியமும் அற்றவையாகிவிடும்.

    RM10.00
  • பால்யகால சகி

    பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான். தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்ட புனைகதை ‘பால்யகால சகி’. எழுத்தின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்கக் கூடியதாகவும் ஆக்குகிறது. அதன் பின்னுள்ள படைப்பு மனம்தான் பஷீரை மலையாளப் படைப்பாளிகளில் ‘உம்மிணி வலிய ஓர் ஆளாக’ – இன்னும் பெரிய ஒருவராக – ஆக்குகிறது. ‘பால்யகால சகி’க்கு இன்று உருவாகியிருக்கும் செவ்வியல் தகுதியும் அதனால்தான்.

    RM10.00
  • மதில்கள்

    மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப் பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான ‘மதிலுகள்’ நாவலின் தமிழாக்கம். பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு குலையாமல் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் நவீனத் தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான சுகுமாரன். ‘மதில்கள்’ நாவலைப் பஷீர் எழுதிய பின்னணியைக் கூறும் பழவிள ரமேசன் கட்டுரையும் அதைத் திரைப்படமாக்கியது குறித்து அடூர் கோபாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரையும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

    RM9.50
  • சப்தங்கள்

    வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் – ‘சப்தங்கள்’, ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ – இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். ‘சப்தங்க’ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் மனிதர்கள் வேசிகள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள். ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மக’ளில் அதே போன்ற மனிதர்கள் இடம்பெற்றாலும் இந்த உலகம் ஒளிமயமானது. வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது. சென்ற நூற்றாண்டின் மையப் பகுதியில் (1950களில்) பஷீர் எழுதிய இந்த நூற்றாண்டுக் கதைகள் இவை.

    RM11.50
  • மரப்பசு

    ‘மரப்பசு’ எழுபதுகளின் தொடக்கத்தில் ‘கணையாழி’ இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்றூ முதல் இன்றுவரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் வருகிறது – ஆதரவாகவும் எதிராகவும்

    RM29.00
  • தனிமையின் நூறு ஆண்டுகள்

    வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் – ‘சப்தங்கள்’, ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ – இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். ‘சப்தங்க’ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் மனிதர்கள் வேசிகள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள். ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மக’ளில் அதே போன்ற மனிதர்கள் இடம்பெற்றாலும் இந்த உலகம் ஒளிமயமானது. வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது. சென்ற நூற்றாண்டின் மையப் பகுதியில் (1950களில்) பஷீர் எழுதிய இந்த நூற்றாண்டுக் கதைகள் இவை.

    RM45.00
  • மோக முள்

    இந்த நாவல் பற்றி இலக்கியத் தரம் அறிந்தவர்கள் பெருமைப் படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை – பெரியதோர் சாதனை.

    RM69.00
  • சில நேரங்களில் சில மனிதர்கள்

    (“சாகித்திய அகாதெமி விருது” பெற்ற சிறந்த நாவல்)
     இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் மாற்றமே காண வைக்கிறது. பல மாற்றங்கள் சமுதாய வாழ்வில் புதுமையானைவயாக இருந்தாலும் தனி மனிதர்கள் வாழ்வில் காலங்கடந்த மாற்றங்களாகவே, நிராசைகளின் நிலைத்த சித்திரங்களாகவே உயிரிழந்து வந்து நிற்கின்றன. காலத்தின் அலைகளால் எற்றுண்ட, மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, எதிர்த்து ஓய்ந்த ஓர் ஆத்மாவின் கதை இது! ஜெயகாந்தன்.

    RM42.50
  • விளம்பர நீளத்தில் ஒரு மரணம்

    நவீன உலகின் சிக்கலை அதைவிடவும் நவீனமான முறையில் சொல்லியிருக்கும் நாவல் இது. ஒரு கொலையிலிருந்து பிரிந்துசெல்லும் நாவல், சீனர், ஜப்பானியர், சிங்கப்பூர்த் தமிழ்ப் பெண், இந்தியத் தமிழர் என நான்கு பார்வைகளில் சொல்லப்பட்டுள்ளது. பிரெஞ்சுத் தத்துவவியலாளர் தெரிதாவின் கோட்பாடுகளுடன் தொடங்கும் ஒவ்வோர் அத்தியாயத்தின் சம்பவங்களும் அவற்றை விசாரிக்கின்றன. இச்சொல்முறை தமிழுக்குப் புதிது. காலகாலமாக மீட்டுருவாக்கப்படும் இந்தியப் புராணக் கதையான அகலிகைக்கு இந்த நாவல் புதுமுகம் கொடுத்துள்ளது. சிங்கப்பூரைப் பின்னணியாகவும் அடையாளச் சிக்கலை மையமாகவும் கொண்டது இந்நாவல். ஒரு மேஜிசியனுக்கு நிகரான நுட்பத்தை சித்துராஜ் பொன்ராஜ் விவரிப்புமொழியாகக் கொண்டுள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தின் கதைசொல்லும் பெரும் போக்கிலிருந்து விலகி புதிய பாய்ச்சலை இந்நாவலில் அவர் நிகழ்த்தியுள்ளார்.

    RM22.50
  • தண்ணீர்

    “சுருண்டோடும் வாழ்க்கைநதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவதில்லை. அவை துளியில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை. அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார்” என்கிறார் ஜெயமோகன். அதற்கு சரியான எடுத்துக்காட்டு அவரது ‘தண்ணீர்’ நாவல். நதியின் பரபரப்பான வேகமின்றி, சிறு ஓடை ஒன்றின் பாம்பின் ஊர்தல் போல நாவல் மெதுவாக நகரத் தொடங் குகிறது. ஆனால் போகப்போக கீழே வைத்துவிட முடியாதபடி வேகம் கொண்டு நாவல் பிரவகிக்கிறது. பிரச்சினை நாம் தினசரி வாழ்வில் எதிர் கொள்வதுதான். தண்ணீர்ப் பிரச்சினை – நாவலில் காட்டப்படும் களமான சென்னை என்றில்லாமல் இப்போது நாடு முழுதும் – ஏன் உலகம் முழுதும் வியாபித்துள்ளது. இது சென்னை போன்ற பெரு நகரங்களில் மிகவும் கூர்மையாக மக்களின் உறவுகளைப் பாதிப்பதாக இருப்பதை – பார்ப்பதற்குத் துளியாகத் தோன்றினாலும் ஒருபெரு வெள்ளத்தைப்போல் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுவதைக் குறியீடாக நாவல் சித்தரிக்கிறது.

    RM17.50
  • ஈழ இலக்கியம் : ஒரு விமர்சனப் பார்வை

    இந்நூலில் ஈழ இலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் என நான் நம்பும் சிலரைப் பற்றிய அவதானிப்புகளை கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். இவை அந்தப் படைப்பாளிகளைப் பற்றியத் தனிக்கட்டுரைகளாயினும் அவர்களை ஈழ இலக்கியம் என்னும் ஒட்டுமொத்தப்பரப்பில் வைத்து ஆராயும்போக்கு கொண்டவை. ஈழத்தின் கவிதையை சேரன் ஆகியோர் வழியாகவும் ஈழத்தின் சிறுகதையை அ.முத்துலிங்கம் ஆகியோர் வழியாகவும், 
    ஈழத்தின் இலக்கிய சிந்தனைகளை மு.தளையசிங்கம், கா.சிவத்தம்பி ஆகியோர் வழியாகவும் ஆராய்ந்திருக்கிறேன்.
                                                                                                   – ஜெயமோகன்

    RM19.00
  • விசும்பு (அறிவியல் புனைகதைகள்)

    ‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் சார்ந்த அறிவியல் புனைகதை வடிவத்துக்கான ஒரு தேடல் இக்கதைகளில் உள்ளது. சித்த மருத்துவம், ரசவாதம், ஞான மரபுகள் என இதன் தளங்கள் மாறுபட்டவை. ஆர்வமூட்டும் வாசிப்புத்தளம் கொண்ட இக்கதைகள் ஜெயமோகனின் பிற கதைகள் போலவே வாழ்க்கையின் அடிப்படைகளை தத்துவ நோக்குடன் விசாரணை செய்பவையும் கூட.

    RM17.10RM19.00
  • உலோகம்

    உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் உணரவேண்டிய தருணத்தை உருவாக்குகிறார் ஜெயமோகன். துரோகம் கதையில் ஒரு முடிச்சை உருவாக்குகிறது. இன்னொரு துரோகம் அம்முடிச்சை அவிழ்த்துவிட்டு, வேறு ஒரு முடிச்சைப் போட்டு வைக்கிறது. இப்படியாக இந்த திரில்லர் கதை செல்லும் ஆழம் அசர வைக்கக் கூடியது. ஈழத்தோட தொடர்புடைய அரசியல் இக்கதையின் களமாக இருப்பதால், புனைகதையை உண்மைக்கு வெகு அருகில் நின்று நம்மால் பார்க்கமுடிகிறது.

    RM22.00