Showing 21–40 of 352 results

  • விக்ரமாதித்தன் கதைகள்

    இந்திய சமூகமே கதை கேட்டு வளர்ந்த சமூகம் என்று கூறுவர். விக்ரமாதித்தன் கதைகள் அதில் மிக பிரபலம். விக்ரமாதித்தனுக்கும் வேதாளத்துக்கும் இந்நூலில் நடைபெறும் உரையாடலில் மருத்துவத்துறை அற்புதங்கள் சுவைபட பேசுபொருள் ஆகி இருக்கிறது. வெகு சுவாரசியமான ஒன்று.
    சிறுவர்களுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்.

    RM10.00

    In stock

  • ஆண்டனி கிளியோபாட்ரா

    ஐயன்மீர், அறிவீர், உம் தலைவர்தம் முறைமன்றத்தில் இருப்புச் சங்கிலியால் பிணைக்கப்படுகின்றவரை நான் காத்திரேன்; அல்லது அமைதிமிகு கண்ணுடைய – மந்தத் தன்மை வாய்ந்த ஒக்டேவியா, ஒரு முறை கூட என்னைக் கடிந்துகொள்ள நான் காத்திரேன். குறைகண்டு கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கும் காட்சிபொருளாய்க் காட்டுவீரா? அதனினும் அகிப்தின் இழிவுடைச் சாய்கடையையே நான், என் அமைதிமிகு கல்லறையாய்க் கொள்வே, அதனினும் நீர்ரிக்கள் என்மீது மொய்த்துக் கடித்து என்னைச் சாகுமாறு செய்தற்பொருட்டு, நான் நைல் ஆற்றிந் சேற்றில் கிடப்பேன்!

    – கிளியோபாட்ரா-

    RM25.00

    Out of stock

  • ஒதெல்லோ

    இயாகோவின் நயவஞ்சகத்தால் துண்டாடப்பட்ட ஒதெல்லோ, ஒரு சின்ன ஆதாரத்தின் அடிப்படையில் அந்தத் தூயவளைச் சந்தேத்து அவளைக் கொல்வதுதான் இந்த நாடகத்தின் துன்பியல் அடிப்படை. அதற்கு முன்னான அவனின் மனப்போரட்டம் அவனது துயர்ர்தைக் காட்டுகிறது. இது சிறந்த ஒதெல்லோ நாடகத்தின் மமிய உணர்வு. ஒலெதெல்லோ புதுமைதாசனால் சிறப்பாகவே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

    RM25.00

    In stock

  • மன்னன் லியர்

    ஏற்கனவே மாக்பெத், ஹெம்லெட் ஒதெல்லோ ஆகிய துன்பியல் நாடகங்களைத் தமிழில் மொழிப்பெயர்த்துள்ள சிங்கப்பூர் படைப்பாளியான புதுமைதாசன் இப்பொழுது கிங் லியர் என்னும் நாடகத்தை மன்னர் லியர் என்று தம்ழில் பெயர்த்துள்ளார். புதுமைதாசன் நாடகத்தை முழுமையாய், மூலத்தின் உணர்வைப் புலப்படுத்தும் வகையில் பெயர்த்துள்ளார். ஷேக்ஸ்பியரின் அற்புத படைப்பை அழகு தமிழில் ஆக்கம் செய்துள்ளதால் அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தல் நம் கடமை.

    RM25.00

    In stock

  • மெக்பெத்

    ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற மெக்பெத் நாடகத்தின் தமிழாக்கம் இது. ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாறு, படைப்புகள் பட்டியல் ஆகியவற்றை முன்னினைப்பாக இணைத்துள்ளது க்றிப்பிடத்தக்கது.

    RM25.00

    In stock

  • ரோமியோ ஜூலியட்

    ஆயின், ஷ்…. அமைதி! அதோ! அங்கே அந்தச் சாளரத்தினூடே ஒளிர்வது ஒளியா? அது ஜூலியட் என்னும் ஞாயிற்றினது கிழக்குப்போன்றிருக்கின்றது. அழகிய ஞாயிறே, எழுவாய், எழுந்து அந்த அழுக்காறு மிக்குடைத்த வெண்திங்களைக் கொல்வாய்! நீ அந்த அதனினும் அழகுமிளிர்ந்தவளாதலின், அவள் உன்பால் அழுக்காறுற்றும் துன்புற்றும், நோயுற்றும் வெளிறியும் போயினாள்.

    RM25.00

    In stock

  • ஹேம்லெட்

    ஷேக்ஸ்பியர் நாடகங்களில் மிகச் சிறந்ததாகவும் சிக்கல்கள் நிறைந்தவையாக்வும் கருதப்படும் ஹேம்லெட் நாடகத்தைப் புதுமைதாசன் நல்ல தமிழில் அதன் சுவையும் பொருளும் குன்றாமல் மொழியாக்கம் செய்துள்ளார். தமிழில் வெளிவந்த முக்கிய மொழியாக்கங்களில் ஒன்றாகப் புதுமைதாசன் ஆக்கத்தையும் கருதலாம்.

    -டாக்டர் கா.செல்லப்பனார்.

    RM25.00

    In stock

  • சூறாவளி

    ஆம், அது உண்மை. கனவில் தோன்றுதல் போன்று என் வலிமையனைத்தும் போயிற்று. இந்தச் சிறைச்சாளரத்தினூடே நாளுக்கொரு முறையேனும் இப்பெண்னை என்னால் காணவியலுமெனில், என் நண்பர் அநைவர்தம் இழப்பு, “இந்த மனிதர் என்னை அச்சுறுத்தல் அனைத்தையும் என்னால் எளிதில் ஏற்றுக்கொள்ள இயலும். அதனினும், வேறு விடுதலை நான் வேண்டேன். அது போன்ற சிறை எனக்குப் போதிய சுதந்திரத்தை அளிக்கும்….”

    -ஃபெர்டிண்ட்

    RM25.00

    In stock

  • ஜூலியஸ் சீஸர் (தமிழில்)

    புதுமைதாசன் மொழிப்பெயர்த்த ஷேக்ஸ்பியரின் அற்புதமான படைப்பு இந்த நான்காம் நூலான ஜூலியஸ் சீஸர். சீசரின் வீரத்தையும் காதலையும் ஒரு சேர எடுத்துக் கூறும் அற்புதமான படைப்பு. துரோகத்தின் வலியும் இதில் அழகாகக் கூறப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியர் நாடகத்தின் சிறப்பு சற்றும் மாறாமல் மொழிபெயர்த்தமைகாக புதுமைதாசன் அவர்களை வெகுவாக பாராட்டலாம்.

    RM25.00

    In stock

  • கரிப்புத் துளிகள்

    “தொரண்ணே இத பாருங்கண்ணே… இத பாருங்கண்ணே” என மூடிய வலதுகையை நீட்டிக்கொண்டு வந்தான் ஐயாவு. துரைசாமியின் முகத்துக்கு முன் தன் கையைத் திறந்து காட்டினான். ஐயாவின் உள்ளங்கையில் பளபளக்கும் கடல் மணலில் பளிங்குக் கள் போல கலலாமைக் குஞ்சுகள் படுத்திருந்தன. மிக அமைதியாக .. குழந்தை போன்று மென்மையாக அவை தன் நான்கு கால்களையும் அசைத்தபடி கூர்மையாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன. துரைசாமி முகத்தைத் திருப்பிக்கொண்டான். சுந்தர் அழுவதுபோல சத்தம் கேட்டது.

    நாவலிலிருந்து.

    RM30.00

    In stock

  • ஒற்றறிதல்

    கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது.

    RM29.00

    Out of stock

  • புதுமைதாசன் கதைகள் (தொகுப்பு)

    மாந்தர்தம் பல்வேறு குணவியல்புகளை அகழ்ந்து சித்தரிக்கும் அருந்தொகுப்பு

    RM20.00

    In stock

  • விழிப்பு (புதுமைதாசன்)

    திகில்! மர்மம்!
    பிரவிதோறும் விபத்து!
    மரண ஒரே இடத்தில்!
    என்ன மாயம்! என்ன மர்மம்!

    RM20.00

    Out of stock

  • தாரா

    தாரா எழுத்தாளர் ம.நவீனின் மூன்றாவது நாவல். மலேசியாவுக்குப் புலம்பெயர்ந்து மர ஆலையில் வேலை செய்ய வரும் நேபாளிகளுக்கும் அங்கு வசிக்கும் உள்ளூர் தமிழர்களுக்கும் இடையே நடக்கும் கலவரமும் அதனால் உண்டாகும் அமைதியற்ற நிலையும் நாவலின் அடிப்படை கதையோட்டம். அதன் ஆழத்தில் இரு சிறுமிகள் தங்கள் இனக்குழுவின் ஆன்ம தூய்மையை மீட்டெடுக்கும் வேறொரு கதையும் புதைந்துள்ளது.

    RM17.00RM34.00

    In stock

  • ஆழம்

    இந்நாவலின் வழி வாசகர்களுக்குள் மலையக காட்டு மக்களின் வாழ்க்கையும் புலம்பெயர்ந்த பின்னர் அவர்களை அலைக்கழிக்கும் அதிகார ஜாதீய பின்னணியும் கடத்தப்படுகிறது.

    RM26.00

    Out of stock

  • அ. முத்துலிங்கம்-சிறுகதைகள்(2-பாகங்கள்)

    ஆ.முத்துலிங்கம்-சிறுகதை தொகுப்பு :

    1985 முதல்2016 வரையிலான சிறுகதைகள்

    நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளுமையான அ. முத்துலிங்கத்தின் 58 ஆண்டுகாலச் சிறுகதைகளை உள்ளடக்கிய செம்பதிப்புப் பெருந்தொகை நூல் இது. இத்தொகுப்பு முத்துலிங்கத்தினுடைய முக்கால் நூற்றாண்டுப் பயணத்தைத் தன்னுள் பொதிந்து வைத்துள்ளது. இலங்கை, கனடா, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளைத் தன்னுடைய களமாகக்கொண்டு அவர் படைத்துள்ள கதைகள் அவர் வாழ்க்கையை எவ்வளவு விரிவாக வாழ்ந்து வருகிறார் என்பதைக் காட்டும். அவரின் படைப்புலகம் மொழி, மதம், நிறம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து மனிதத்தில் மட்டும் குவிமையம் கொள்கிறது. நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை அ. முத்துலிங்கம் சிறுகதைகள் என்றால் மிகையில்லை. இத்தொகுப்பு இலக்கிய வாசகர்களுக்கான பொக்கிஷம்.

    RM180.00

    Out of stock

  • ஸலாம் அலைக் (நாவல்)

    ஸலாம் அலைக் – ஷோபா சக்தி:
    ஆசிரியர் குறிப்பு:

    இலங்கையில் வடபுலத்தில் அல்லைப்பிட்டி கிராமத்தில் பிறந்தவர். பல வருடங்களாகப் பிரான்ஸில் வசிக்கிறார். கொரில்லா என்ற நாவலின் மூலம் தமிழ் வாசகர்களின் கவனத்தைப் பெற்ற ஷோபாசக்தி, தொடர்ந்து நாவல்கள், சிறுகதைகள் எழுதி வருகிறார். விவாதங்கள், விமர்சனங்களுக்கு அதிகம் ஆளானவர். இது இவருடைய சமீபத்திய நாவல்.

    இரண்டு பகுதிகள் கொண்ட நாவல். இரண்டில் எந்த பாகத்தையும் முதலில் படிக்கலாம். நூலின் வடிவமும் அதற்கேற்றாற்போல் அமைந்துள்ளது.
    சொந்த நிலத்தில், சொந்த மக்களிடையே முறைகேடு செய்யும் ராணுவம் வேறொரு நிலத்தைத் தங்குமிடமாகக் கொள்ளும் போது, அத்துமீறல்கள் சர்வசாதாரணமாக நடக்கும். அதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். உலகின் எந்த ராணுவமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய அமைதிப்படையின் Excesses நாவலின் பெரும்பகுதியில் வருகின்றன. விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக பிள்ளைகளைத் தூக்கிச்சென்று பயிற்சி அளிக்கிறார்கள்…..

    RM45.00

    Out of stock

  • வாழ்க்கை ஒரு விசாரணை

    பாவண்ணன் எழுத்தாற்றல் பெற்ற படைப்பாளி. நல்ல சிறுகதைகள் பல எழுதியிருப்பவர். மனிதர்களை அவர்களது இயல்புகளை, பேச்சு வழக்குகளை- பொதுவாக வாழ்க்கையை- நன்கு கவனித்து மனித நேயத்துடன் எழுதுகிறவர். அவருடைய திறமைக்கு நல்ல சான்றாக அமைந்துள்ளது இந்த நாவல். மக்களின் பேச்சிமுறைகள் இதில் ஆற்றலோடு கையாளப்பட்டிருக்கின்றன.

    பாவண்ணனின் முதலாவது நாவல் இந்த ‘ வாழ்க்கை: ஒரு விசாரணை ’ வெற்றிகரமான இந்தப் படைப்பு ரசிகர்களின் வரவேற்ப்பையும் பாராட்டுதலையும் நிச்சயம் பெறும் என நம்பிகிறேன்.

    – வல்லிக்கண்ணன்

    RM16.00

    Out of stock

  • பாவண்ணன் சிறுகதைகள் (முதல் தொகுதி)

    பாவண்ணனின் சிறுகதைகள் கருணையின் இழைகளாலும் அன்பின் இழைகளாலும் நெய்யப்பட்டவை. கரிய இருள் சூழ்ந்த பாதையின் ஓரமாக காற்றில் நடுங்கியபடி ஒளியுமிழும் சுடரென அக்கதைகள் அமைந்திருக்கின்றன. எளிய மனிதர்களின் அவலம், இயலாமை, ஏமாற்றம், சமரசங்கள், பரவசங்கள், குமுறல்கள் ஆகியவற்றின் சித்திரங்களால் பாவண்ணன் கதையுலகம் நிறைந்திருக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே உரியதாக உள்ள உலகத்தின் முன் எப்படியாவது உயிர்த்திருந்தால் போதும் என்ற எண்ணத்துடன் வாழும் கோடிக்கணக்கானவரின் கண்ணீர்த்துளிகளை பாவண்ணனின் சிறுகதைகள் காட்சிப்படுத்துகின்றன. துயரத்தின் சுமைகள் தாளாது சரிந்து விழுவதையும் ஒரு நீண்ட பெருமூச்சின் வழியாக வலிமையைத் திரட்டிக்கொண்டு மீண்டு வருவதுமான வாழ்வின் ஆடலையும் விசித்திரத்தையும் பாவண்ணன் முன்வைத்திருக்கும் வாழ்க்கைத் தருணங்களில் காணமுடிகிறது. சின்னஞ்சிறிய சிமிழொன்றில் அடைத்து எடுத்துவரும் நீரின் வழியாக ஓர் ஆற்றையே காணமுடிந்த கண்கள், பாவண்ணனின் வாழ்க்கைத் தருணங்கள் வழியாக விரிந்துசெல்லும் எளியோரின் துயரத்தையும் வேதனை நிறைந்த உலகத்தையும் எளிதாகக் கண்டுவிடும்.

    RM75.00

    Out of stock

  • முகமூடிகளின் பள்ளத்தாக்கு

    ”அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது. முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான் போகும் என்பதைச் சொல்லும் இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை. ஒரு நீதிக்கதை என்ற முறையில், இதிலிருக்கும் நீதி திரும்பத் திரும்ப உங்கள் முன்னே வந்து உங்களைப் பீடிக்கவல்லது.” -ஆஷிஷ் நந்தி.

    RM60.00

    Out of stock