-
வங்காரியின் பசுமைத் தூதுவர்
சுற்றுச் சூழல், குழந்தைகள், அறிவியல் சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர் ஆதி.வள்ளியப்பன். இந்த நூல் சுற்றிச்சூழல் தொடர்பானது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மூலமாகவும் எளிய மக்களுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவதன் மூலமாகவும் மக்களிடையே அமைதி நிலவச் செய்ய முடியும். இதை நிகழ்த்திக் காட்டியதற்காக நோபல் அமைதிப் பரிசு பெற்ற கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாத்தாயின் கதை இது, குழந்தைகளுக்காக….
-
நிறம் மாறிய காகம்
இந்த நூலில்,கதைகளும்,சித்திரங்களும் தோளணைத்து உலவுகின்றன.இந்த நூலின் பக்கங்கள் எளிமைச் சொற்களால்,அழகுச் சித்திரங்களால்,விந்தை நிகழ்வுகளால் அலங்காரப் படிகளாகஉருவாகியிருக்கின்றன.ஒவ்வொரு படியிலும் வாசிப்பின் உல்லாசம்
-
வானவில் பறவையின் கதை
அதி விநோதமும் கற்பனையும் நிறைந்த நாடோடி இலக்கியம். வாசிப்பின் இனிய பயணத்திற்கான அதிசய உலகம் இந்தப் பல நாட்டுப் பழங்கதைகள்.
-
ஆண்டனி கிளியோபாட்ரா
ஐயன்மீர், அறிவீர், உம் தலைவர்தம் முறைமன்றத்தில் இருப்புச் சங்கிலியால் பிணைக்கப்படுகின்றவரை நான் காத்திரேன்; அல்லது அமைதிமிகு கண்ணுடைய – மந்தத் தன்மை வாய்ந்த ஒக்டேவியா, ஒரு முறை கூட என்னைக் கடிந்துகொள்ள நான் காத்திரேன். குறைகண்டு கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கும் காட்சிபொருளாய்க் காட்டுவீரா? அதனினும் அகிப்தின் இழிவுடைச் சாய்கடையையே நான், என் அமைதிமிகு கல்லறையாய்க் கொள்வே, அதனினும் நீர்ரிக்கள் என்மீது மொய்த்துக் கடித்து என்னைச் சாகுமாறு செய்தற்பொருட்டு, நான் நைல் ஆற்றிந் சேற்றில் கிடப்பேன்!
– கிளியோபாட்ரா-
-
ஒதெல்லோ
இயாகோவின் நயவஞ்சகத்தால் துண்டாடப்பட்ட ஒதெல்லோ, ஒரு சின்ன ஆதாரத்தின் அடிப்படையில் அந்தத் தூயவளைச் சந்தேத்து அவளைக் கொல்வதுதான் இந்த நாடகத்தின் துன்பியல் அடிப்படை. அதற்கு முன்னான அவனின் மனப்போரட்டம் அவனது துயர்ர்தைக் காட்டுகிறது. இது சிறந்த ஒதெல்லோ நாடகத்தின் மமிய உணர்வு. ஒலெதெல்லோ புதுமைதாசனால் சிறப்பாகவே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
-
மன்னன் லியர்
ஏற்கனவே மாக்பெத், ஹெம்லெட் ஒதெல்லோ ஆகிய துன்பியல் நாடகங்களைத் தமிழில் மொழிப்பெயர்த்துள்ள சிங்கப்பூர் படைப்பாளியான புதுமைதாசன் இப்பொழுது கிங் லியர் என்னும் நாடகத்தை மன்னர் லியர் என்று தம்ழில் பெயர்த்துள்ளார். புதுமைதாசன் நாடகத்தை முழுமையாய், மூலத்தின் உணர்வைப் புலப்படுத்தும் வகையில் பெயர்த்துள்ளார். ஷேக்ஸ்பியரின் அற்புத படைப்பை அழகு தமிழில் ஆக்கம் செய்துள்ளதால் அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தல் நம் கடமை.
-
மெக்பெத்
ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற மெக்பெத் நாடகத்தின் தமிழாக்கம் இது. ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாறு, படைப்புகள் பட்டியல் ஆகியவற்றை முன்னினைப்பாக இணைத்துள்ளது க்றிப்பிடத்தக்கது.
-
ரோமியோ ஜூலியட்
ஆயின், ஷ்…. அமைதி! அதோ! அங்கே அந்தச் சாளரத்தினூடே ஒளிர்வது ஒளியா? அது ஜூலியட் என்னும் ஞாயிற்றினது கிழக்குப்போன்றிருக்கின்றது. அழகிய ஞாயிறே, எழுவாய், எழுந்து அந்த அழுக்காறு மிக்குடைத்த வெண்திங்களைக் கொல்வாய்! நீ அந்த அதனினும் அழகுமிளிர்ந்தவளாதலின், அவள் உன்பால் அழுக்காறுற்றும் துன்புற்றும், நோயுற்றும் வெளிறியும் போயினாள்.
-
சூறாவளி
ஆம், அது உண்மை. கனவில் தோன்றுதல் போன்று என் வலிமையனைத்தும் போயிற்று. இந்தச் சிறைச்சாளரத்தினூடே நாளுக்கொரு முறையேனும் இப்பெண்னை என்னால் காணவியலுமெனில், என் நண்பர் அநைவர்தம் இழப்பு, “இந்த மனிதர் என்னை அச்சுறுத்தல் அனைத்தையும் என்னால் எளிதில் ஏற்றுக்கொள்ள இயலும். அதனினும், வேறு விடுதலை நான் வேண்டேன். அது போன்ற சிறை எனக்குப் போதிய சுதந்திரத்தை அளிக்கும்….”
-ஃபெர்டிண்ட்
-
நேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்
ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ள
“நேர்மறச் சிந்தனையின் வியத்தகு சக்தி” -
சிக்மண்ட் ஃபிராய்டு : ஓர் அறிமுகம்
சிக்மண்ட் ஃபிராயிட் உளவியலுக்கு முகம் கொடுத்தவர் நம் அறிவுக்கு அப்பாற்பட்ட மனமான நனவிலி மனம் பற்றி அழுத்திக் கூறியவர் பேச்சுவழிச் சிகிச்சைகளின் ஆசான் தனிமனித உளவியலையும் தாண்டி மதம் , மனித நாகரிகம் , கலை , இலக்கியம் ஆகியவை பற்றி விரிவாக எழுதியவர்.
-
ஆத்மாநாம் தேர்ந்தெடுத்த கவிதைகள்
ஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்படுகிறார். ஒருபோதும் தன் பயணத்துல அகம் சார்ந்ததையும் விடலை. – சுகுமாரன்
-
கிழவனும் கடலும்
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்திரிக்கிறது இந்நூல். அழகிய கோட்டோவியங்கள் இடம்பெற்றுள்ளன. பல மொழிகளில் திரைப்படங்கள் இந்நாவலைத் தழுவி எடுக்கப்பட்டள்ளன. ‘கிழவனும் கடலும்’ வெளிவந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்றும் வாசிக்கும்போது இது ஒரு அற்புதமான கதை. ஒரு தளத்தில் மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டம், இன்னுமோர் தளத்தில் மானுடப் பண்பாடு, துணிச்சல், போர்க்குணம் பற்றியது. பிறிதொரு தளத்தில் அமெரிக்காவாழ்வின் மையமாகத் தனிமனிதன் – குழுவோ அமைப்போ அல்ல – இருந்த காலகட்டத்தின் கதை. வாழ்வுக்கான அவன் போராட்டத்தின் சித்திரம். சிக்கனமான சொற்பிரயோகம், தெறிக்கும் விவரணைகளில் தனிமனிதப் போராட்டத்தைக் கொண்டாடும் படைப்பு.
-
AATICHUDI
AATICHUDI ditulis berdasarkan ayat-ayat yang dihasilkan oleh seorang penyair yang dipercayai aktif pada zaman dinasti Chola. Beliau dikenali sebagai Avaiyar
Sebagai menghormati jasa baktinya, satu anugerah diwujudkan untuk menghormati sumbangan wanita kepada seni, bahasa, budaya, media pengurusan dan sains. Selain itu, anugerah ini juga diberikan kepada wanita yang telah memberikan khidmat bakti dalam pembaharuan sosial serta kesejahteraan masyarakat
Aatichudi memaparkan ayat-ayat dalam bahasa Tamil, Melayu dan Inggeris. Terjemahan dalam bahasa Melayu dan bahasa Inggeris diberikan bagi membolehkan lebih ramai untuk memahami keunikan dan kehebatan ayat-ayat tersebut di samping mengamalkan nilai-nilai murni yang terkandung di dalamnya
-