Showing 1–20 of 42 results

  • கரிப்புத் துளிகள்

    “தொரண்ணே இத பாருங்கண்ணே… இத பாருங்கண்ணே” என மூடிய வலதுகையை நீட்டிக்கொண்டு வந்தான் ஐயாவு. துரைசாமியின் முகத்துக்கு முன் தன் கையைத் திறந்து காட்டினான். ஐயாவின் உள்ளங்கையில் பளபளக்கும் கடல் மணலில் பளிங்குக் கள் போல கலலாமைக் குஞ்சுகள் படுத்திருந்தன. மிக அமைதியாக .. குழந்தை போன்று மென்மையாக அவை தன் நான்கு கால்களையும் அசைத்தபடி கூர்மையாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன. துரைசாமி முகத்தைத் திருப்பிக்கொண்டான். சுந்தர் அழுவதுபோல சத்தம் கேட்டது.

    நாவலிலிருந்து.

    RM30.00
  • தாரா

    தாரா எழுத்தாளர் ம.நவீனின் மூன்றாவது நாவல். மலேசியாவுக்குப் புலம்பெயர்ந்து மர ஆலையில் வேலை செய்ய வரும் நேபாளிகளுக்கும் அங்கு வசிக்கும் உள்ளூர் தமிழர்களுக்கும் இடையே நடக்கும் கலவரமும் அதனால் உண்டாகும் அமைதியற்ற நிலையும் நாவலின் அடிப்படை கதையோட்டம். அதன் ஆழத்தில் இரு சிறுமிகள் தங்கள் இனக்குழுவின் ஆன்ம தூய்மையை மீட்டெடுக்கும் வேறொரு கதையும் புதைந்துள்ளது.

    RM30.00
  • ஆழம்

    இந்நாவலின் வழி வாசகர்களுக்குள் மலையக காட்டு மக்களின் வாழ்க்கையும் புலம்பெயர்ந்த பின்னர் அவர்களை அலைக்கழிக்கும் அதிகார ஜாதீய பின்னணியும் கடத்தப்படுகிறது.

    RM26.00
  • சமகால சிறுகதைகளின் பரிணாமம்

    என்னளவில் விமர்சகரின் வேலை என்பது எழுத்தாளரை திருத்தி நல்வழிப்படுத்துவதோ தீர்ப்புரைப்பதோ, அறிவுரை சொல்வதோ அல்ல. ஏனெனில் விமர்சகரால் கலைஞரை உருவாக்க முடியாது என்றே நம்புகிறேன். நல்ல விமர்சனம் புனைவெழுத்து அளவிற்கே கண்டடைதலின் களிப்பை அளிக்க வேண்டும். அதை வாசகருக்கு கடத்த வேண்டும். சிறுகதைகள் சார்ந்து எழுதப்பட்ட விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

    RM32.00
  • அவளும் நானும் அலையும் கடலும்

    அவளும் நானும் அலையும் கடலும்

    கடலுக்குள் தூக்கி எறிந்த கல்போல இந்த மனத்தின் ஆழத்துக்குள் வந்து விழுந்த சொற்கள் கதைகளாக வடிவெடுக்கின்றன. யார் யார் வந்து கல் எறிந்துவிட்டுப் போனார்கள் என்று எந்தச் சுவடும் இல்லை.

    RM13.00
  • வெயிலின் கூட்டாளிகள் & பிற கதைகள்

    வாழ்விற்கு ஒரு முகமில்லை. அது பல்வேறு முகங்கள் கொண்டது. பல்வேறு முகமூடிகளினூடாக அவற்றை மறைத்துக் கொள்ளக் கூடியது. ஒளிந்து விளையாடும் சிறுவர்கள் ஒருவர் மற்றவரைக் கண்டுபிடிப்பதைப் போல இக்கதைகள் வாழ்வின் முகங்களை மொழியின் வாயிலாகக் கண்டுபிடிக்க எத்தனிக்கின்றன. மனிதனின் கதைகள் ஒருபோதும் சொல்லிமுடிக்க முடியாதவை. அலைகளைப் போல முடிவற்று நம்மைச் சுற்றி நிறைந்திருக்கின்றன மனிதர்களின் கதைகள். அவ்வகையில், முடிவிலியாய் நீண்டு செல்லும் அந்தக் கதைச் சங்கிலியின் ஒரு கண்ணியாய் தங்கள் இருப்பை உறுதி செய்ய முயல்கின்றன இக்கதைகள்.

    RM18.00
  • ஆள்தலும் அளத்தலும்

    ஆள்தல் என்றால் அரசு செய்தல், ஆட்கொள்தல், அடக்கியாளுதல், வழங்குதல், கைக்கொள்ளுதல், கையாளுதல் எனப்பல பொருள். அளத்தல் என்றால் அளவிடுதல், மதிப்பிடுதல், ஆராய்ந்தறிதல் என்பன பொருள். ஆழமான தலைப்பு சிறுகதை தொகுப்புக்கு. கதைகளை வாசித்து வரும்போது, தமிழ்ப் படைப்பிலக்கியப் பண்ணைக்கு ஒருவன் போந்தனன் என்பது உற்சாகமளிக்கிறது. பெரும்பாலான இந்தக் கதைகள் நல்ல வாசிப்பு அனுபவம் வழங்குகின்றன. ஈர்ப்பான கூறுமொழி. சொந்த அனுபவங்களா அல்லது சாட்சியாக நின்றவையா என்று அனுமானிக்க முயல்வது வாசகனின் வேலை அல்ல. ஆனால் நம்பகத்தன்மைக்கு என்றொரு தனியான வசீகரம் உண்டு. சம்பிரதாயமான சில புத்திமதிகள் கூறுவார்கள், வழக்கமாக முன்னுரை எழுதுவோர். அதனைத் தவிர்க்க விரும்புகிறேன். ‘அழுதாலும் பிள்ளை அவள் தானே பெறனும்!’ என்பது நம் இலக்கியக் கொள்கை.காலத்தால் தொடரும் முயற்சியும், ஊக்கமும், உழைப்பும், நுட்பமான பார்வையும், சமநிலைச் சீர்கேடாமையும், மொழித்திறனும், கலைத்தேர்ச்சியும் மேலும் காளிப்ரஸாத்துக்கு வாய்க்க இந்தக் கலைமகள் வழிபாட்டுத்தினத்தில் வாழ்த்துகிறேன்!

    RM14.00
  • தேவதையை தரிசித்த மனிதன்

    அவன் சொன்னான், “நிகழ்ந்துகொண்டிருக்கும் பேரழிவுக்கு முன் ஆந்த்ரேய் போன்ற ஒரு கலைஞன் என்ன செய்வான்? மனிதர்களின் உள்ளார்ந்த விருப்பங்கள் நிறைவேறும் அறை ஒன்றை கற்பனை செய்யலாம். சதுக்கத்தின் முன் நின்று அந்த அழிவை உரக்க அறிவித்துவிட்டு தன்னையே தீயிட்டு எரித்துக் கொள்ளலாம், குளத்தின் ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு எரியும் மெழுகுவர்த்தியை அணையாமல் எடுத்துச் செல்லும் ஒரு சடங்கைச் செய்யலாம், புதிரான தன் வேலைக்காரியோடு படுக்கையை பகர்ந்துகொள்ளலாம். கடவுளிடம் சரணடைந்து தன் வீட்டை எரிக்கலாம். இறுதி நம்பிக்கையாக நோவாவின் கப்பல் போல ரயில் ஒன்றை வடிவமைக்கலாம்…”

    RM15.00
  • ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் & பிற கதைகள்

    முன் நம் காலத்தில் பல்வேறு நீதி கதைகளின் காரணமாக அஞ்சி தவறவிட்டதை கண்டுபிடித்தவன் இப்பிரதிகளின் படைப்பாளியான வட்கமிஹர் ஒரு வாசிப்பனுபவத்தின் வழியாக கேள்விகளும் பதிலும் அற்றுப் போவது, கடந்தகால அரூபங்களுடன் உரையாடுவது அல்லது மேலோட்டமாய் மதப்பது அல்லது பரதிகளில் இன்பம் காணுவது எனநீரும் இக்கதைகளை வாசியுங்கள். ஏற்கனவே நீங்கள் கொண்டுள்ள அர்த்தங்களை இழந்து வாசியுங்கள். இப்படியாக மொத்த கதைகளின் உள்ளீடாக இப்பூமியில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தேவதைகளுக்குமான அழகியல் பிறழ், உறவாக தொடர முடிகிறது. காலமற்ற இடத்தில் ஒரு மையமற்று விளையாட்டாகவே நம்மை கடந்து செல்லும் இப்படைப்புகளை ஒருங்கணைக்கும் இடமாக இயற்கை இயல்பாக கலந்திருக்கிறது. இதற்கு தானே அத்தனை தத்துவங்களும், கோட்பாடுகளும், வரலாறுகளும், அறிவியல் இயக்கங்களும் இவ்வுலகம் பாடுபட்டும் கொண்டிருக்கின்றன. எங்கும் முதல் குருத்துகள் முளைவிட்டு கொண்டிருக்கின்றன. ஆசிரியர்க்கு இது முதல் தொகுப்பெனினும் அப்பாலும் இப்பாலும் நகரும் இக்கதைகள் தமிழுக்குப் புதியது.
    – யவனிகா பிராம்

    RM17.00
  • வளரொளி (தொகுதி 1)

    இக்கதைகளின் ஊடாக தற்காலமும் அதன் சிக்கலும் எப்படி வெளிப்படுகிறது என்பதை அறிவது சுவாரசியம். ஒரே ஈழத்தின் இருவேறு முகங்களை அனோஜனும் அகர முதல்வனும் பேசுகிறார்கள். சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழல்’ ஒருவிதமான சுய உருவாக்கத்தையும் சுய அழிவையும் தன்னடையாளச் சிதைவையும் பேசுகிறது. அதே பேசுபொருளை வேறு கோணங்களில் கார்த்திகைப் பாண்டியனின் கதைகள் பேசுகின்றன. தூயன் பரந்துபட்ட களங்களின் ஊடாக நவீன காலத்தின் தன்னடையாள உருவாக்கத்தில் உள்ள சிக்கல்களைத்தான் பேசுகிறார். விஷால் ராஜாவும் கார்த்திக் பாலசுப்பிரமணியமும் தகவல் தொழில்நுட்ப யுகத்தின் சுரண்டலை, இருப்பை, நியாயத்தை என பல்வேறு விஷயங்களை வேறு உணர்வு நிலையில் நின்று பேசுகிறார்கள். சரவனகார்த்திகேயன் வரலாற்று ஆளுமையின் புனிதத்தை விலக்கிவிட்டு என்னவாக பொருள் படுகிறார் என நோக்க முயல்கிறார். பாலா சமகால வாழ்வின் அபத்தங்களை விமர்சன நோக்கில் எதிர்கொள்கிறார். மனிதனை காட்டிலும் பிரம்மாண்டமானவை கடவுளாக இருந்த காலகட்டம் கடந்து அவ்விடத்தை அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. கடவுள் யுகத்து பொருளின்மை இப்போது இன்னும் பூதாகாரமாக வளர்ந்திருப்பதை உணர முடிகிறது. கடவுளை போல் அல்லாது இவ்வமைப்புகள் குடும்பத்திற்குள்ளும் நுழைந்து ஆளுமை செலுத்துவதை இக்கதைகள் பேசுகின்றன. மானுட உறவின் சிக்கல்கள் மற்றும் நம்பகமின்மை ஒரு பொது இழையாக ஊடுருவிச் செல்கின்றன.

    RM19.00
  • எழுத்தாளர் பழுவேட்டையருக்கு குழந்தை பிறந்திருக்கிறது

    எழுத்தாளர் அ. பழுவேட்டையர் முழுநேர எழுத்தாளர். தாய் தந்தையருக்கு பிறந்தவர் மனைவியை மணந்து பிள்ளையை பெற்றவர் என்பதற்கப்பால் குடும்பத்தை பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது? எழுத்தாளரின் சாதியைத் தெரிந்து கொண்டேயாக வேண்டும் என விரும்புவோர் நேரடியாக எழுத்தாளருக்கே ₹101 மணியார்டர் அனுப்பி கேட்டுக் கொள்ளலாம். இதுவரை மொத்தம் 330 சிறுகதைகளும், 33 நாவல்களும் 3300 கவிதைகளும் 330 விமர்சன கட்டுரைகளும் எழுதி வெளியிடாமலேயே வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார். தான் காலமான பிறகே அவை முழுதாக வெளிவரும் என்றும். அதிலிருந்து கிடைக்கும் தொகையைக்கொண்டு ஆதரவற்றோர் இல்லம் நடத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தன் கனவு என்றும் சொல்கிறார். நோபல் பரிசு, புக்கர் பரிசு, ஞானபீடம், சாகித்திய அகாதமி, விஷ்ணுபுர விருது, விளக்கு விருது, இலக்கிய தோட்டம், கலைமாமணி, தமுஎகச விருது, கலையிலக்கிய பெருமன்ற விருது, பபாசி விருது, ஜீரோ டிகிரி தமிழரசி விருது, கண்ணதாசன் விருது, ஆத்மாநாம் விருது, சுந்தர ராமசாமி விருது, ராஜமார்த்தாண்டன் விருது வாசகசாலை விருது, ஸ்பேரோ தொடங்கி உள்ளூர் ரோட்டரி சங்கம், லயன்ஸ் சங்கம், குடியிருப்போர் நலச் சங்கம், செஞ்சிலுவை சங்கம், வரை எந்த அமைப்புமே அவரை விருதுக்கு பரிசீலித்ததில்லை என்பதையே தனக்கான மாபெரும் அங்கீகாரமாக கருதுகிறார். ஏற்றத்திலும் எதிர்காற்றிலும் மிக வேகமாக மிதி வண்டி ஓட்டுவதில் தனித்திறன் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி குழந்தைகள் நாய்கள், பூனைகள் , மலர்கள், மழை , மலை போன்றவை தனக்கு கடும் ஒவ்வாமை அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார். பொறுப்பு துறப்பு- இந்நூலில் இடம்பெற்றுள்ள கதைமாந்தர்கள் வாசகர்களுக்கு தற்போது வாழ்கின்ற அல்லது முன் எப்போதோ வாழ்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை நினைவுபடுத்தினால் (படுத்தும்) அது தற்செயலானதே. அதனால் புண்பட்டு துன்பமடைய விரும்புபவர்கள் தாராளமாக அடைந்துகொள்ளலாம். அதற்கு நினைவுபடுத்தினால் (படுத்தும்) அது தற்செயலானதே. அதனால் புண்பட்டு துன்பமடைய விரும்புபவர்கள் தாராளமாக அடைந்துகொள்ளலாம். அதற்கு கதையாசிரியரோ, தொகுப்பாசிரியரோ பதிப்பகமோ, விற்பனையாளரோ, காலமோ, ஊழோ, கடவுளோ பொறுப்பல்ல..

    RM15.00
  • ஆலகாலம்

    கலைச்செல்வியின் முதல் நாவலான சக்கைக்கும் இந்த நாவலுக்கும் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் இடைவெளி இருந்தாலும், இருபது வருடங்களைக் கடந்த முதிர்ச்சி மொழிநடை மற்றும் உள்ளடக்கத்தில் தெரிகின்றது. நாவலின் பல இடங்களில் மொழியானது. காவேரியின் பிரவாகம் போல் பெருகி ஓட்டமெடுக்கிறது. மானிட இனத்தின் நேரங்களில் சாபங்களும் வடிவம் வரங்கள். தனிமையும், தேடலும் அவையே இந்த நாவலின் முக்கியமான கருப்பொருள்கள் இவை இரண்டுமேயாகும். கலைச்செல்வி அதற்கு கலை வடிவம் கொடுத்திருக்கிறார்.

    – சரவணன் மாணிக்கவாசகம்

    RM54.00
  • வியனுலகு வதியும் பெருமலர்

    பொதுவாகவே இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் வினாக்களால் உருவாகின்றன. படிமங்களுக்காகவும் உத்திகளுக்காகவும் முண்டியடித்து கவிதைக்கான தருணங்களை இழந்து நிற்குமிந்த சொல்விளையாட்டு அழிவுவெளியில் இளங்கோ கிருஷ்ணன் கவியுலகு மொழியின் புகலிடமாய் உதிக்கிறது. ஆகவேதான் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அவலங்களால் தத்தளிக்கின்றன. அவஸ்தைகளால் கொந்தளிக்கின்றன. இவற்றையெல்லாம் தருணங்களாய் உணர்கின்றன. அன்றாடங்கள் அனைத்திலும் சுதந்திரம் கேட்கும் ஒரு குரல் இத்தொகுப்பின் பிரதான படிமமாகியிருக்கிறது. காலந்தோறும் அறத்தினால் செலுத்தப்படுமோர் இன மரபின் ஆவேசத்தையும் பெருங்கருணையையும் கையாலாகத் தனத்தையும் நம் முன் அளிக்கிறது. அதேவேளை நமது இருப்பின் மன எழுச்சியையும் அமைதியையும் அபூர்வமாய் குறியீட்டுத் தன்மையாக்கும் வல்லபமும் இத்தொகுப்பில் அசாதாரணமாய் நிகழ்ந்திருக்கிறது. இதுவோர் அரூப தரிசனம், இவரின் கவிதைகளை தரிசிக்க விழையும் ஒரு வாசகனுக்குத் திறவுகோலாய் இக்கவிதை அமையக்கூடும்.

    RM18.00
  • புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – 2020 பரிசு பெற்ற குறுநாவல்கள்

    வா.மு.கோமு, நாராயணி கண்ணகி போன்ற அனுபவமுள்ள எழுத்தாளர்கள் ஒருபுறம் இருக்க, அண்மையில் தமது எழுத்து மூலம் தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகளான மணி எம்.கே மணி, சுரேஷ் பிரதீப், மயிலன் ஜி சின்னப்பன், மலர்வதி, எம்.எம்.தீன் ஆகியோர்களுடன் புதிதாக எழுத வந்திருக்கும் அ.மோகனா, பாலாஜி பிரசன்னா, பிகு என.. படைப்புலகில் அவரவர் திறனுக்குரிய வாய்ப்பை வழங்கிய போட்டியாக புதுமைப்பித்தன் நினைவுக் குறுநாவல் போட்டி-2020 நிறைவுற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கக் கூடியதே. அவ்வகையில் எழுபது சதவீதம் இளம்படைப்பாளிகள் வெற்றி பெற்றிருப்பதிலிருந்து எங்கள் புது யுகத்தின் முகங்கள்’ எனும் குரல் ஒலிப்பதைக் காண முடிகிறது.

    RM75.00
  • எழுபது கதைகள்

    பிரபஞ்சத்தில் பிற உயிர்களின் இருப்பு மீதான முருகனின் கதைத்துவ அக்கறைதான் கிராமங்களின் இருப்புக் குறித்தான பிரக்ஞையாக அடுத்த கட்டத்திற்கு வளர்கிறது. முருகன் கதைகள் கிராமத்துச் சூழலை யதார்த்தவாதக் கதைப் பாணியில் ஒரு புகைப்படப் பிரதியைப்போலச் சித்தரிக்கும் தன்மை கொண்டவையல்ல. அதில் தனக்கு விருப்பமோ ஈெடுபாடோ நம்பிக்கையோ இல்லை என்று முருகனும் ஒரு நேர்காணலில் சொல்கிறார். அவர் தன் கதைக் கிராமங்களை ஒரு விசேஷமான இடத்தில், நிலையில் வைக்கிறார். அதாவது அவருடைய பெரும்பாலான கதைகளில் இடம் பெறும் நகரச் சூழலின் நனவிலிக்குள்ளோ அல்லது ஞாபகங்களிலோ அல்லது உணர்விலோ கிராமங்கள் உள் பொதிந்து வைக்கப்படுகின்றன. – பா.வெங்கடேசன்

    RM74.00