-
இப்போது உயிரோடிருக்கிறேன்
25 வருடங்களுக்கும் மேலாக எழுதிவரும் இமையத்தின் படைப்புலகம் இந்த நாவலில் இருத்தலியல் கேள்விகளுடன் மேலும் விரிவடைந்திருக்கிறது. நோய் தரும் வலியுடன், தண்டனையுடன் குற்ற உணர்வையும் தாழ்வு மனப்பான்மையையும் சுமத்தத் தயாராக இருக்கிற மருத்துவ வியாபார உலகம்; பரிவையும் மனிதாபிமானத்தையும் அர்த்தமற்றதாக்கி மனிதர்களை எந்திரங்களாக மாற்றிக்கொண்டேயிருக்கும் கண்ணுக்குத் தெரியாத சித்தாந்த ஏஜெண்டுகள், மருத்துவமனைகள், கோர்ட்டுகள், அலுவலகங்கள்; கண்டுபிடித்துச் சொல்ல மட்டுமே முடிந்த, சரிசெய்யத் தெரியாத விஞ்ஞானம்; மனிதர்களுக்காக மனிதர்கள் உருவாக்கி, நிர்வகிக்கும் குரூரமான அமைப்புகள். வாழும் ஆவலுக்கும் மரணம் என்ற யதார்த்தத்துக்குமிடையே, எந்த நம்பிக்கையும் இல்லாவிட்டாலும் செயலற்றிருக்க முடியாமல் அல்லாடுவதை தர்மமாக ஏற்றுக்கொண்டுவிட்ட குடும்பம் என்ற பரிதாபமான கருவி. எல்லாம் தற்செயல்தானா? நிச்சயமின்மை, தனிமை, அர்த்தமின்மை இவற்றுக்கு என்ன நிவாரணம்? நாவலின் நேர்மையான பரிசீலனையில் வெளிப்படுவது: குடும்பம் உள்ளிட்ட நிறுவனங்களின் கையாலாகாத்தனம்; அவற்றுக்கிடையேயான முரண்பாடுகள்; எல்லாவற்றுக்கும் மையமான மனிதன் எங்கே? சமூக வாழ்வின் பிரச்சினைகளான ஏற்றத்தாழ்வும், சுரண்டலும், இரக்கமின்மையும் அன்றாட வாழ்வில் – வாழ்வதும் இருப்பதும் ஒன்றல்ல – பிரதிபலிக்கும் விதத்தில், அடைவதற்கு அரிதான மன அமைதியுடன் எழுதப்பட்டுள்ள – உத்தியும் சவாலானதுதான் – இமையத்தின் இந்த நாவல் இன்னொரு தளத்தில் புதிய உயரத்தை அடைந்திருக்கிறது.
-
செல்லாத பணம்
“நாவலில் உணர்வு என்றும், சிந்தனை என்றும் ஒவ்வொன்றும்
தன்னைத் தனித்தனியாக அடையாளம் காட்டிக்கொண்டு வருவதில்லை.
இரண்டின் கலவை என்றும் எதையும் சொல்ல முடியாது.
அங்கே இருப்பது ஒரு அனுபவத்தின் முழுமை, உண்மையான
மனித அனுபவத்தின் முழுமை…
வெறும் சிந்தனை நாவலாகாது என்பதைப் போலவே உணர்வு மட்டுமே
நாவலாகாது. ‘செல்லாத பணம்’ படைப்பில் மனித அனுபவத்தின்
முழுமை உண்டு. நமக்குத் தெரிந்த சிந்தனைச் சட்டகத்துள் அதைக்
கொண்டுவந்து ஒழுங்குபடுத்திவிட முடியாது. இந்த அனுபவத்தின்
முழுமையிலும் ஒரு சிந்தனை, தார்மீக நிலைப்பாடு போன்றவை
தெரியலாம். ஆனால், அவை சிந்தனையின் வழக்கமான தன்மையைக்
கொண்டிருப்பவை அல்ல. சிந்தனையின் மெய்வருத்தம் அனுபவத்தின்
முழுமையைச் சிதைத்துவிடாதவாறு பார்த்துக்கொள்வதுதான்
‘செல்லாத பணத்’தின் சிறப்பு. -
எங் கதெ
இமையத்தின் இந்த நெடுங்கதையில்
ஆண்-பெண் உறவின் ஒரு
பரிமாணம் முழு ஆவேசத்துடன்
பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது.இமையத்தின் படைப்புகள்
அனைத்திலிருந்தும் வேறுபட்ட
களம்; வேறுபட்ட நடை. -
செடல்
மதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயலும் ஒரு முயற்சிதான் இந்த நாவல். வழிவழியாக வந்த இந்திய-தமிழ்ச் சமூக, பண்பாட்டுக் கூறுகள் பாரம்பரியச் செல்வமா, சாபமா? இந்திய -தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் யாரை அதிகமாக அழுத்துகின்றன, வஞ்சிக்கின்றன, பலிகேட்கின்றன? ஒரு ஐதீகத்திற்காக, பொது நன்மைக்காகப் பொட்டுக்கட்டி விடப்பட்டு ஊர்ஊராக, கோவில்கோவிலாகச் சென்று ஆடுகிற—அதோடு தெருக்கூத்தும் ஆடுகிற—ஒரு பெண்ணைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, எப்படி நடத்துகிறது என்பதை வாழ்க்கை அனுபவமாக விவரிக்கிறது இந்த நாவல்.
-
கோவேறு கழுதைகள்
இமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.
சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் முதல் முழுநீளப் படைப்பு என்றாலும், மிகுந்த விவாதத்துக்குள்ளான நாவல்.
-
-
வீடியோ மாரியம்மன்
ஒண்ணெ ஒண்ணுதான் எம் மனசிலெ இருக்கு.
நான் செத்தா எம் பொணத்த ஊரு மெச்ச எடுக்கணும்.
தேர்ப் பாடெ கட்டு. ஒப்பனுக்குக் கட்டுனாப்ல. உள்ளூர்ப் பற
மோளத்தோட, பாசாரு தம்ரு மோளமும் வை. பாடெ மத்தியிலெ
கொல்லுக் காசி பிரிக்கயிலெ கைகூசாம தோட்டி, தொம்பன்,
வண்ணான், கூத்தாடின்னு ஒருவரும் மனங்கோணக் கூடாது.
கேட்ட காசியக் கொடுத்துப்புடு. கசம்பன்னு பேரு எடுக்காத.
நம்ப ஊட்டுலெ எஞ் சாவுதான் கடேசி சாவு.
அதனால, வாணவெடி வுடு. கயிதூரு ஆட்டக்காரி
செடலோட ஆட்டம் வை. ராத்திரிக்குக் கர்ணமோட்சம்
கூத்து வைக்காம வுட்டுப்புடாத.– நாவலிலிருந்து
-
பெத்தவன்
மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது
மனிதம் எப்படித் தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது என்பதை
எடுத்துச்சொல்லும் நெடுங்கதை.