Showing all 2 results

  • புதிய காலம்: சில சமகால எழுத்தாளர்கள்

    என் சமகாலத்தவரும் எனக்குப்பின் எழுதவந்தவர்களுமான எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றிய என் அவதானிப்புகள் இவை. இவர்களின் புனைவுலகைக் கூர்ந்து அவதானிக்கவும் மதிப்பிடவும் முயன்றிருக்கிறேன். அவ்வகையில் நான் நின்றிருக்கும் காலத்துடன் இவர்களுக்கு ஓர் இன்றியமையாத இணைப்பை உருவாக்க முயன்றுள்ளேன் என்று படுகிறது. புனைவிலக்கியவாதிகளைப்பற்றி விமர்சனங்கள் குறைவாகவே எழும் சூழல் இது. எழுந்தாலும் பெரும்பாலும் அரசியலே பேசப்படுகிறது. அவர்களின் புனைவுலகின் நுட்பங்களும் அழகுகளும் பேசப்படுவதில்லை. அதற்கு பிறிதொரு எழுத்தாளனே வரவேண்டியிருக்கிறது. – ஜெயமோகன்

    RM25.00
  • நாவல் கோட்பாடு

    நாவல் என்றால் என்ன? கதை, சிறுகதை, நெடுங்கதை, நாவல் – இவற்றுக்கு இடையே என்ன வித்தியாசம்? தமிழில் எழுதப்பட்ட ‘நாவல்கள்’ என்று சொல்லப்படுபவை உண்மையிலேயே நாவல்கள்தானா?

    இதுபோன்ற கேள்விகளை எழுப்பும் ஜெயமோகன் அந்தக் கேள்விகளுக்கு, தெளிவான, தருக்கபூர்வமான பதில்களை நிறுவுகிறார்.இந்நூல் ஜெயமோகன் எழுதிய முதல் திறனாய்வு நூல். வெளியான காலத்தில் பல சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கினாலும், சரியாகப் புரிந்து கொள்ளப்படாத ஒரு நூலாகவே இருந்துள்ளது.ஒரு தேர்ந்த வாசகனது ரசனையை மேம்படுத்துவதில் இந்த நூல் வெற்றி அடைகிறது என்றே சொல்ல வேண்டும்.

    RM15.75RM17.50