-
கொடை மடம்
ஒரு நூற்றாண்டின் தொடக்கத்தில் நின்றபடி, ஒரு நூற்றாண்டு முடிவின் கனவு கலையும் மயக்கச் சித்திரத்தை வரைந்து காட்டுகிறது சாம்ராஜின் முதல் நாவல். ஒரு காலகட்டத்தின் எரிபொருளாய் கனன்ற சித்தாந்தத்தின் நிழலில், சிச்சிறு குழுக்களாய்ச் சிதறிப்போய் இயங்கிக்கொண்டிருந்த தீவிர அமைப்புகளின் செயல்பாடுகளும் நிலைப்பாடுகளும் விமர்சிக்கப்படுகின்றன இதில் அங்கதமும் கேலியுமாய். பின்புலத்தில், தன் அத்தனை விளக்குகள் வாசனைகளுடன் சந்தடி இரைச்சலுடன் உள்ளும் புறமுமாய் ஓடுவது மதுரை மாநகர். காலத்தின் புழுதி மிதக்கும் அதன் வீதிகளில் இருந்து பாத்திரங்களும் கதைகளும், ஜனரஞ்சகத்தின் பாடல்களும் சாம்ராஜின் துடிப்பும் துடுக்கும் கூடிய மொழிநடையில் கிளைத்துப் பெருகி நிறைகின்றன. துயரும் ஏமாற்றங்களும் கைத்த அபத்தங்களாகத் தோற்றங்கொள்ளும் இப்புனைவில், மையச்சரடாய் விரிகிறது சொல்லப்படாதவொரு விசித்திர காதல்கதை. கூடவே, மேன்மையான கற்பனைகளில் இருந்தும் ஒளிவீசும் நம்பிக்கைகளில் இருந்தும் நிர்த்தாட்சண்யமாய் தரையிறக்கப்பட்டு, ஊர் ஊராக இழுத்துச் செல்லப்படும், லட்சியங்களின் கெடுதேதிக் காலங்களில் ’வயதுக்கு வரும்’ ஓர் இளைஞனின் கதையும்… -கவிஞர் சபரிநாதன்
Only 1 left in stock
-
மிகையின் தூரிகை
பாவண்ணன் சிறுகதைகளில் புராணம், இதிகாசம் அல்லது வரலாறு தொடர்பான புனைவுகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆண்டாள் பற்றிய புனைவான ‘புதிர்’ ஒரு தந்தையின் மனநிலையையும், ஒரு பருவப் பெண்ணின் மனநிலையையும் எழுப்பி நம்மைப் பரவசப்படுத்துகிறது. ‘இன்னும் ஒரு கணம்’ வாசித்தபோது விரிந்த விழிகள் மூடவே இல்லை. ஒரு பெண் தன்னை ஏற்க வேண்டும் என ஓர் ஆணின் மனம் தவிப்பதை மிக அழகாகக்ச் சித்தரித்திருந்த விதம் கண்டு ஆச்சரியப்பட்டேன்; வாசித்தலின் ஆவல் எனக்குள் பெருகுவதை உணர்ந்தேன். இப்படி இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையின் காட்சிச் சித்தரிப்புகள் கண்டு பரவசம் கொண்டிருக்கிறேன்.
Only 1 left in stock
-
நிறம் மாறிய காகம்
இந்த நூலில்,கதைகளும்,சித்திரங்களும் தோளணைத்து உலவுகின்றன.இந்த நூலின் பக்கங்கள் எளிமைச் சொற்களால்,அழகுச் சித்திரங்களால்,விந்தை நிகழ்வுகளால் அலங்காரப் படிகளாகஉருவாகியிருக்கின்றன.ஒவ்வொரு படியிலும் வாசிப்பின் உல்லாசம்
Only 1 left in stock
-
அணிலின் துணிச்சல்
பயந்தால் நம்முடைய மூளை வேலை செய்யாது. தைரியமும் துணிச்சலும் வேண்டும் என்று தம்பி அணில் உங்களுக்குச் சொல்கிறது எப்படி? வாசித்துப் பாருங்கள்.
Out of stock
-
-
விக்ரமாதித்தன் கதைகள்
இந்திய சமூகமே கதை கேட்டு வளர்ந்த சமூகம் என்று கூறுவர். விக்ரமாதித்தன் கதைகள் அதில் மிக பிரபலம். விக்ரமாதித்தனுக்கும் வேதாளத்துக்கும் இந்நூலில் நடைபெறும் உரையாடலில் மருத்துவத்துறை அற்புதங்கள் சுவைபட பேசுபொருள் ஆகி இருக்கிறது. வெகு சுவாரசியமான ஒன்று.
சிறுவர்களுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்.In stock