-
யாழ் அறிவன் (ஆண்டு 4)
நான்காம் ஆண்டு மாணவர்களுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட யாழ் அறிவியல் மேற்கோள் மற்றும் பயிற்சி நூல், மிக தெளிவான விளக்கத்துடன் அமைந்துள்ளது.
In stock
-
கரிப்புத் துளிகள்
“தொரண்ணே இத பாருங்கண்ணே… இத பாருங்கண்ணே” என மூடிய வலதுகையை நீட்டிக்கொண்டு வந்தான் ஐயாவு. துரைசாமியின் முகத்துக்கு முன் தன் கையைத் திறந்து காட்டினான். ஐயாவின் உள்ளங்கையில் பளபளக்கும் கடல் மணலில் பளிங்குக் கள் போல கலலாமைக் குஞ்சுகள் படுத்திருந்தன. மிக அமைதியாக .. குழந்தை போன்று மென்மையாக அவை தன் நான்கு கால்களையும் அசைத்தபடி கூர்மையாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன. துரைசாமி முகத்தைத் திருப்பிக்கொண்டான். சுந்தர் அழுவதுபோல சத்தம் கேட்டது.
நாவலிலிருந்து.
In stock
-
தாரா
தாரா எழுத்தாளர் ம.நவீனின் மூன்றாவது நாவல். மலேசியாவுக்குப் புலம்பெயர்ந்து மர ஆலையில் வேலை செய்ய வரும் நேபாளிகளுக்கும் அங்கு வசிக்கும் உள்ளூர் தமிழர்களுக்கும் இடையே நடக்கும் கலவரமும் அதனால் உண்டாகும் அமைதியற்ற நிலையும் நாவலின் அடிப்படை கதையோட்டம். அதன் ஆழத்தில் இரு சிறுமிகள் தங்கள் இனக்குழுவின் ஆன்ம தூய்மையை மீட்டெடுக்கும் வேறொரு கதையும் புதைந்துள்ளது.
RM34.00In stock
-
ஆழம்
இந்நாவலின் வழி வாசகர்களுக்குள் மலையக காட்டு மக்களின் வாழ்க்கையும் புலம்பெயர்ந்த பின்னர் அவர்களை அலைக்கழிக்கும் அதிகார ஜாதீய பின்னணியும் கடத்தப்படுகிறது.
Out of stock
-
AATICHUDI
AATICHUDI ditulis berdasarkan ayat-ayat yang dihasilkan oleh seorang penyair yang dipercayai aktif pada zaman dinasti Chola. Beliau dikenali sebagai Avaiyar
Sebagai menghormati jasa baktinya, satu anugerah diwujudkan untuk menghormati sumbangan wanita kepada seni, bahasa, budaya, media pengurusan dan sains. Selain itu, anugerah ini juga diberikan kepada wanita yang telah memberikan khidmat bakti dalam pembaharuan sosial serta kesejahteraan masyarakat
Aatichudi memaparkan ayat-ayat dalam bahasa Tamil, Melayu dan Inggeris. Terjemahan dalam bahasa Melayu dan bahasa Inggeris diberikan bagi membolehkan lebih ramai untuk memahami keunikan dan kehebatan ayat-ayat tersebut di samping mengamalkan nilai-nilai murni yang terkandung di dalamnya
Out of stock
-
சிகண்டி
திருநங்கைகள் வாழும் இருள் உலகினை களமாக கொண்டு புனையப்பட்ட நாவல் சிகண்டி. கொலை, கொள்ளை, தற்கொலைகள் என மரணங்கள் மலிந்து உள்ள நிலத்தில் அன்பின் பொருட்டு வாழும் மனிதர்களையும் அந்த அன்பை சுயநலத்திற்காக சூதாடும் மனிதர்களை அலைய விட்டுள்ளார் ஆசிரியர். பல வாசகர்களால் அண்மையில் வந்த நாவல்களில் மிகச்சிறந்த வாசிப்பு அனுபவத்தை கொடுப்பது எனப் பாரட்டப்பட்டது சிகண்டி
RM50.00In stock
-
-
-
குறையொன்றுமில்லை
“இதற்கு முந்தைய தொகுப்புகளைப் போலவே இத்தொகுப்பும் பயனீட்டாளர் குரல் ஏட்டில் வெளிவந்த கட்டுரைகளைத் தாங்கியே மலர்ந்துள்ளது. ஆனால், இத்தொகுப்பு ஒரு விதத்தில் முந்தையதிலிருந்து வேறுபடுகிறது. முந்தைய தொகுப்புகளில் இருந்த சிந்தனைத் துளிகளில் சாமியின் கை நம் தலைக்கு மேலே ஆசி கூறும் பாவத்தில் இருந்தது. இந்தத் தொகுப்பில் அவர் கையை நம் தோள்களின் மேல் ஆதரவோடு வைத்துள்ளார்.
Only 1 left in stock
-
காட்டுப் பெருமாள்
இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள வாய்மொழி வரலாறு பெருமாளைப் பற்றிய ஒரு கண்ணோட்டமாகும். கம்யூனிச சித்தாந்த போராட்டவாதியான இவர், சுங்கை சிப்புட் தோட்டப்புறங்களில் மட்டுமல்லாமல், பொதுவாகவே தொழிலாளர் வர்கத்தின் தலை சிறந்த போராட்டவாதியாக திகழ்ந்தார்.
Out of stock
-
கையறு
நான் இந்த நாவலை முதலில் வாசித்தபோது என்னைக் கவர்ந்த அம்சமே நினைவுச்சின்னம், இமயத்தியாகம், மரவள்ளிக்கிழங்கு என இதற்கு முன் இக்களத்தை ஒட்டி புனையப்பட்ட நாவல்களில் இல்லாத தனித்த வழித்தடத்தை இப்புனைவின் வழி கோ.புண்ணியவான் அமைத்துள்ளார் என்பதுதான். எழுத்தாளனின் கைரேகை என்பது அதுதான். அதுவே ஒரு புனைவை மறுவாசிப்புக்குத் தூண்டுகிறது. ஓர் அசாதாரண சூழலில், தானறியா நிலத்தில், கதாசிரியன் உருட்டிவிடும் கதாபாத்திரங்கள் மூலம் அவனே கண்டடையும் வாழ்க்கையில் திடுக்கிடும் உண்மைகளை கோ.புண்ணியவான் இந்த நாவலின் வழி அடைந்துள்ளார்.‘கையறு’ எனும் பதம் இந்த நாவலின் தலைப்பு மட்டுமல்ல; நாவலின் ஆன்மாவும் அதுதான். அதை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாயிலாகவும் கோ.புண்ணியவான் நிறைத்துச்சென்றுள்ளார். – ம.நவீன்
Out of stock
-
-
-
-
-
விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு
மலேசியா மற்றும் தமிழகத்தில் வெளிவந்த சில நாவல்கள் குறித்த ரசனை விமர்சனங்கள் அடங்கிய நூல்
Out of stock
-
-
மண்டை ஓடி
ம.நவீன் நல்ல கதை சொல்லி என்பதையும், கதையை எப்படிச்சொல்ல வேண்டும், எந்த மொழியில், எந்த அளவில், சொல்லவேண்டும் என்பதை நன்றாக அறிந்தவர் என்று ‘மண்டை ஓடி’ – தொகுப்பு சொல்கிறது. – இமையம்
Out of stock
-
பேய்ச்சி
வரலாற்றை ஒரு கையாலும் தனிமனித உளப்பரிணாமங்களை இன்னொரு கையாலும் முடைபவனே மிகச்சிறந்த நாவலாசிரியன்.செயற்கையான உத்திகள் ஏதுமில்லாமல், இயல்பாக உருவாகிப் பெருகிச்செல்லும் மொழியால் அந்த பெருஞ்சித்திரத்தை நவீன் உருவாக்குகிறார். இன்னமும்கூட இந்நாவல் தமிழகத்தில் முழுமையாக வாசிக்கப்படவில்லை. அதற்கான வாசகர்களைக் கண்டடையும்போது தமிழில் ஒரு சாதனை என்றே கொள்ளப்படும். – ஜெயமோகன்
(மலேசிய அரசாங்கத்தால் தடை செய்ப்பட்ட நாவல் எனவே இந்நூல் விற்பனைக்கு இல்லை)
Out of stock
-