Showing all 2 results

  • ஒச்சை

    நாவலில் மிக நுட்பமான உளவியலும் உள்ளது. அதை வாசகர்கள் தான் படித்துப் பார்த்து உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு சிறிய வருத்தம், கோபமாகவும் வெறுப்பாகவும் வன்மமாகவும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதே பொதுநியதி. அதன் நீட்சி பல மனிதர்களின் வாழ்வில் எப்படிப்பட்ட மாற்றங்களையும் கசப்பான வடுக்களையும் அடுக்கிச் செல்கிறது என்பதை… ‘ஒச்சை’ நாவலை பல சுவாரஸ்யங்களோடு படித்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

    Mitheen அண்ணனுக்கே உரிய அட்டகாசமான எழுத்து நடையில் கதையை படிக்கும் போதே, அட்டகாசமான சினிமாவை பார்த்த திருப்தி ஏற்பட்டது. நான் படிக்கும் போது இருந்ததை விட கூடுதலாக இன்னும் 30 முதல் 40 பக்கங்கள் அதிகமாகியுள்ளதாம். அப்படியானால் முன்பைவிட தற்போது முழுமையாகிருக்கும் நாவலில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இந்த நாவலை முதன்முதலாக படிப்பதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கிய மைதீன் அண்ணனுக்கு எனது நன்றியும் பேரன்பும். ‘ஒச்சை’ புலம் பதிப்பகத்திலிருந்து வெகுவிரைவில் நூலாக வருகிறது.

    RM18.00