| Author | |
|---|---|
| Publications | வல்லினம் பதிப்பகம் |
பி.கிருஷ்ணன் படைப்புலகம்
RM20.00
புதுமைதாசன் என்ற புனைபெயரில் எழுதும் எழுத்தாளர் பி.கிருஷ்ணனின் படைப்புலகை விரிவாக அறிமுகம் செய்யும் நோக்கில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.
In stock
Related products
-
மீசை என்பது வெறும் மயிர்
RM15.50மீசை என்பது வெறும் மயிர்
பெருமிதம் எனக் கருதி முன்னோர் செய்த தவறுகளைக் கொண்டாடுகிறவர்கள், அந்தத் தவறுகளுக்கான தண்டனைகளைச் சுமக்கும் வாரிசாகவும் தம்மை அறிவித்துக் கொள்வது தவிர்க்க முடியாதது
—— ரிச்மாண்ட் ராஷ், சண்டே ரெவ்யூ
தடைசெய்யப்பட்ட நூல்களை வெளிக்கொணர்வதற்கான ஈஜின் நூலகம் இந்த நூலை வெளிக்கொண்டு வந்திருப்பது பொருத்தமானதொரு நடவடிக்கைதான்.
———– அலன் லாம்பர்ட், தி ஸ்பெக்டேடர்’ஸ் வாய்ஸ்
மனிதகுலம் கூட்டாக அடைந்த முன்னோர்களின் மீது ஒரு குழு தனியுரிமை
கொண்டாட்த் தொடங்கியதுமே வருந்த்தக்க வகையில் எல்லாமே மீண்டும் பூஜ்ய நிலைக்குச்
சென்றுவிடும் என்கிற ஆபத்தை இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
-
நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்ப்ப்
RM40.00ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்கூடியது.
RM44.00 -
பெரியார்: இன்றும் என்றும்
RM72.00சமுதாயம், மதம், சாதி, தேசியம் என 21 தலைப்புகளில் பெரியாரின் கருத்துகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பெரியாரின் நூல் வரிசைகளை முழுவதும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தலைப்புகள் காலம், இடம் விவரங்களுடன் அன்றைய சமூக அரசியல் பின்புலத்துடன் அமைந்திருக்கின்றன.
-
துணைக்கால்
RM10.00பதிப்புத்துறை குறித்தும் அதன் சட்ட நுணுக்கங்கள் குறித்தும் விரிவான கட்டுரைகள் அடங்கிய நூல்
-
நாவல் கோட்பாடு
RM15.75நாவல் என்றால் என்ன? கதை, சிறுகதை, நெடுங்கதை, நாவல் – இவற்றுக்கு இடையே என்ன வித்தியாசம்? தமிழில் எழுதப்பட்ட ‘நாவல்கள்’ என்று சொல்லப்படுபவை உண்மையிலேயே நாவல்கள்தானா?
இதுபோன்ற கேள்விகளை எழுப்பும் ஜெயமோகன் அந்தக் கேள்விகளுக்கு, தெளிவான, தருக்கபூர்வமான பதில்களை நிறுவுகிறார்.இந்நூல் ஜெயமோகன் எழுதிய முதல் திறனாய்வு நூல். வெளியான காலத்தில் பல சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கினாலும், சரியாகப் புரிந்து கொள்ளப்படாத ஒரு நூலாகவே இருந்துள்ளது.ஒரு தேர்ந்த வாசகனது ரசனையை மேம்படுத்துவதில் இந்த நூல் வெற்றி அடைகிறது என்றே சொல்ல வேண்டும்.
RM17.50 -
புறப்பாடு
RM38.00அனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது.சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அா்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதே முக்கியமானது. அதை வௌயே எடுக்க ஒரே வழி மிகவலுவான மையச்சரடு ஒன்றைத் தொட்டு இழுப்பதே. அது இழுத்துவரும் அனுபவங்களே அகக் காலத்தின் வாிசையை அமைத்து விடுகின்றன. நான் ஏதாவது ஒரு நினைவை கைபோன போக்கில் எழுத ஆரம்பிப்பேன். அந்த அனுபவத்தின் சாரமாக ஓடும் சரடு என ஒன்று தென்படும். அது எந்தெந்த விஷயங்களைக் கொண்டுவருகிறதோ அதை எழுதிச் செல்வேன். அதன் வழியாக அப்போது-அதாவது எழுதும் கணத்தில்-ஒரு மெய்மையை அடைந்ததும் முடிப்பேன்
-ஜெயமோகன்
-
இருத்தலியமும் மார்க்ஸியமும்
RM28.50பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் ஏற்பட்ட சமூக, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக்த் தோன்றி மானுட அந்நியமாதல், தனிமனித சுதந்திரம், மானுட வாழ்க்கையின் அர்த்தம் (அல்லது அர்த்தமின்மை) ஆகியன குறித்த கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான விடைகளை வழங்க முற்பட்ட தத்துவப்போக்கான இருத்தலியத்தின் முக்கிய பிரதிநிதிகளில் பாஸ்கால், கீர்க்கேகார்ட் நீட்செ, ஹைடெக்கெர், காம்யு, சார்த்தர் ஆகிய அறுவரின் முக்கிய கருத்துகளை, அவர்களது சமூக, வரலாற்றுச் சூழலுடனும் அவர்களுக்கு முந்திய ஐரோப்பியத் தத்துவ மரபுடனும் தொடர்புபடுத்தி விளக்குகிறது இந்நூல். அவர்களால் விமர்சிக்கப்பட்டஹெகலியம், அறிவொளிச் சிந்தனை மரபு ஆகியன குறித்த சுருக்கமான அறிமுகம், இருத்தலியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கான மார்க்ஸிய விடைகள் என்னும் வடிவத்தில் மார்க்ஸியத் தத்துவம் குறித்த செழுமையான விளக்கம் ஆகியனவற்றை வழங்குகிறது. மேற்சொன்ன ஆறு இருத்தலியத் தத்துவவாதிகளில், நடைமுறைரீதியாகவும் சிந்தனைரீதியாகவும் மார்க்ஸியத்துடன் நெருக்கமாக வந்து சேர்ந்த சார்த்தரின் கலை-இலக்கிய, தத்துவ, அரசியல் கருத்துகளைத் தொகுத்துக் கூறும் இந்த நூல் சார்த்தர் எழுப்பும் கேள்விகள், மார்க்ஸியத் தத்துவத்தையும் நடைமுறையையும் செழுமைப்படுத்த உதவக்கூடியவை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.
-
புனைவு நிலை உரைத்தல்
RM10.00மலேசிய மூத்த இலக்கியவாதிகளின் சிறுகதைகள் குறித்த ரசனை விமர்சனக் கட்டுரைகள்









