| Author | |
|---|---|
| Publications | VALLINAM PUBLICATION |
Related products
-
-
உலகின் நாக்கு
RM6.00பல கட்டுரைகளில் நவீனின் நோக்கு என் நோக்குக்கு மிக அருகே வருகிறது. ஏனென்றால் அது புதுமைப்பித்தன், க.நா.சு, சுந்தரராமசாமி எனத் தொடர்ந்து வரும் ஒரு நவீன இலக்கியப் பார்வைதான். அது பொது உண்மைகளைத் தவிர்த்து இலக்கியம் மட்டுமே முன்வைக்கும் தனியுண்மைகளைக் கவனிக்கும். கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கடந்து மானுட விசித்திரங்களையும் மானுட உன்னதங்களையும் நோக்கும்.
காட்டில் யானை செல்லும் பாதை உண்டு. எலிகள் செல்லும் பாதை கீழே. பறவைகள் செல்லும் பாதை மேலே. எங்கும் செல்லும் பாதை என்பது காற்றின் வழி. அதுவே இலக்கியத்திற்குரியது.
உயிர்ப்புள்ள ஓர் இலக்கிய ரசிகன் தனக்குள் இருப்பதை இக்கட்டுரைகள் வழியாக நவீன் காட்டுகிறார். தான் எனக் கோத்துக்கொண்டிருக்கும் தன்முனைப்பை அகற்றித் தான் என உணரும் தானறியாத் தன்னிலை ஒன்றைப் புனைவுகள் முன் வைக்கவும் புனைவுக்குள் கரைந்து உட்செல்லவும் மீண்ட பின் தான் கண்டவற்றைத் தன் மொழியில் தன் அனுபவமாக முன்வைக்கவும் அவரால் முடிந்துள்ளது.–ஜெயமோகன் முன்னுரையிலிருந்து..
RM12.00 -
மலேசிய நாவல்கள் (தொகுதி 1)
RM7.50மலேசிய நாவல்கள் குறித்த ரசனை விமர்சனம் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு
RM15.00 -
கௌஜின் ஜியாங்கின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
RM12.00கௌஜின் ஜியாங்கின் புனைவுகள், நாடகங்கள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எல்லாம் முதன்முதலாக 1980-இன் தொடக்கத்தில் சீன இலக்கிய இதழ்களில் தென்படத் தொடங்கின.1987- டிசம்பரில் இலக்கிய சுதந்திரம் தேடி சீனாவைத் துறந்து ஐரோப்பா சென்று பாரிசில் குடியேறினார். இத்தொகுப்பில் உள்ள ஆறு கதைகளும் அவரே தெரிவு செய்தவை. அவரது பார்வையில் இந்த ஆறு கதைகளும் அவர் புனைவில் தொட எண்ணும் இடத்தை மிக நெருங்கிச் சென்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார். 2000-ஆம் ஆண்டில் மேலும் இரண்டு சிறப்பு பிரெஞ்சு விருதுகளோடு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
-
மிச்சமிருப்பவர்கள்
RM10.00பல தசாப்தாங்களாக அடக்குமுறைகள், உரிமை இழப்புகள், பாரபட்சங்கள், மத/கலாசார அழிப்பு ஆகிய கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருந்த சுமார் ஒரு லட்சம் மலேசியத் தமிழ் இந்துக்கள் கோலாலம்பூரில் காந்தியின் சித்திரங்களையே பதாகைகளாக ஏந்தி அந்த நாளில் ஒன்று திரண்டு வந்தனர். அதனை மலேசிய அரசு கையாண்ட விதத்தை உலகமே பார்த்து அதிர்ந்தது. இந்த எழுச்சியின் பின்னணியின் பதைபதைப்பு குறையாமல் அமைந்தது இந்நாவல் – ஜடாயு
-
-
CHILDREN OF DARKNESS
RM10.00மலேசியாவின் நான்கு நவீனத் தமிழ் இலக்கியவாதிகளின் சிறுகதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல்.
-
இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்
RM10.00கே.பாலமுருகனின் தேர்ந்தெடுத்த இக்கதைகள் அந்நியமாதல் சிக்கலை வலுவாகப் பேசும் புனைவுகள். தோட்டத்தில் இருந்து பெயர்ந்த உதிரி மனிதர்களின் வாழ்வை இக்கதைகள் பேசுகின்றன.









