ஒளி

RM18.00

சுவிட்ஸர்லாந்தில் ஆய்வுப் பணி நிமித்தமாக வசிக்கும், மதுரையைச் சேர்ந்த சுசித்ராவின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘ஒளி’. தமிழிலும் ஆங்கிலத்திலுமாக எழுதிவரும் இவர், சங்கக் கவிதைகள் உட்பட சில மொழிபெயர்ப்புகளையும் செய்திருக்கிறார். இவையெல்லாம் இவருடைய கதைகளுக்குப் பலம் சேர்க்கின்றன. யதார்த்தம், மிகை யதார்த்தம், அறிவியல், தத்துவம் எனப் பல பொருண்மையிலான கதைகள் தொகுப்பில் உள்ளன. தொகுப்புக்கு ஒரு முகம் இல்லை. இது சுசித்ராவின் பலம். தலைப்புக் கதையான ‘ஒளி’, இணைய இதழில் வெளியானபோதே பரவலாகக் கவனம் பெற்றது; பலரையும் இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும், குழந்தைகளின் உலகமும், பெண்களின் உலகமும் பல கதைகளில் நுட்பமாகப் படிந்திருக்கின்றன. மொத்தத்தில், சுசித்ராவுக்கு இது நல்ல ஆரம்பம்.

Out of stock