Showing 1–20 of 28 results

  • கன்னி (நாவல்)

    ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதையாகவே எழுதிய ‘கன்னி’ நாவலில் இருந்து சில பகுதிகள்: “வண்ணங்கள் மறைகின்றன. வானவில்லும் இல்லாமலாக காற்றோடு பாய்கின்றன மேகங்கள். ஒளியின் சிறகுகள் முன்பே முறிந்து தணிந்தன. நிழல் திரை விரிந்து பகலை மூடுகிறது. கடல் இருள்கிறது, கரைகள் பதைக்கின்றன. மின்னல் குரலில் கண்ணால் பாடுகிறது முகமற்ற வேட்கை. விண்ணைப் பார்த்திருந்த சின்ன மலரொன்று அச்சத்தில் மணம் தடுமாறுகிறது. ஆந்தையின் தலையில் ஆவலொன்று பச்சை மச்சமாகி இரவுக்காக விரிகிறது. கிழங்கை முகர்ந்து பார்த்து முத்தம் மட்டும் தந்துவிட்டுப் பசியோடு கிடைக்குத் திரும்புகிறது முயல்குட்டி. கன்னிமையின் தோளில் விழுந்து நாணத்தின் கன்னத்தில் தெறிக்கிறது மழை. மழை வலுக்கிறது. மணல் முலைகள் கரைந்தோடுகின்றன. ஏதோ ஒரு சிப்பி பெண்ணாகி இதழ் விரிக்கிறது.”

    RM44.00
  • சீன லட்சுமி

    லதாவின் சிறுகதைகள் நவீன பெண்களின் அடையாளப் பரிணாமங்களை பிரகடனமில்லாமல் முன்வைக்கின்றன. அலிசா, நீலமலர், போராளி அக்கா, ஆய்வாளர் வெவ்வேறு வயது காலம், சிந்தனைகளால் அலைக்கழிக்கப்படுபவர்கள்.

    RM16.00
  • பின்தொடரும் நிழலின் குரல்

    பின்தொடரும் நிழலின் குரல்

    சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி நம் காலகட்டத்தின் பெருங்கனவொன்றின் சரிவு. அத்தகைய எழுச்சி வீழ்ச்சியினாலானதே வரலாறு. இந்நாவல் மானுட அறத்தின் அடிப்படைகளைத் குறித்த ஒரு தேடல்

    RM90.00
  • எழுதும் கலை

    நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுதுவதற்கான பயிற்சியை மு

    RM13.00
  • வால்வெள்ளி

    வாழ்வின் வெவ்வேறு நிறங்களைக் காட்சிப்படுத்தும் நான்கு குறுநாவல்கள்

    RM13.00
  • சக்தி யோகம்

    3மனித உறவுகள் எனும் ஒளிக்கற்றையை உள்வாங்கி அதனுள் உருவாகும் எண்ணற்ற நிறங்களை விரித்துக் காட்டும் முப்பட்டகங்களே இக்கதைகள்.

    RM16.00
  • கவிதைத் திறனாய்வு வரலாறு

    பாரதியின் வசனகவிதை, பின்னர் புதுக்கவிதையின் தோற்றம் அன்றைய சூழலில் அதற்கு எழுந்த எதிர்ப்பு, புதுக்கவிதைப் போக்குகள் ஆகியவற்றை மணிக்கொடி, எழுத்து, தாமரை, வானம்பாடி, கசடதபற இதழ்களின் ஆக்கங்கள் வழியாக இந்நூல் விரிவாக விளக்குகிறது. பின் நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் போன்ற போக்குகள் தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளையும் ஆராய்கிறது. தன் முனைவர் பட்ட ஆய்வேட்டுக்காக எழுத்தாளர் சு.வேணுகோபால் சேகரித்த தரவுகளின் அடிப்படையில் விரிந்த வடிவில் உருவானது இந்நூல்.

    RM55.00
  • கொங்குதேர் வாழ்க்கை 2

    ழின் சிறந்த நவீன கவிதைகளின் தொகுப்பு இது. பாரதியார் தொடங்கி இன்றைய கவிஞர்கள் வரை எழுதிய நூற்றுக்கணக்கான கவிதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் கவிஞர்கள் குறித்த குறிப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளது.

    RM118.80
  • காவல் கோட்டம்

    ஆறு நூற்றாண்டுகால மதுரையின் வரலாற்றை [1310 -1910 ] பின்னணியாக கொண்ட நாவல் இது,அரசியல்,சமூகவியல்,இன வரைவியல் கண்ணோடங்களுடன்,அந்த வரலாற்றின் திருப்பு முனைகளையும்,தீவிரமான தருணங்களையும்,திரும்பி பார்க்கிறது. தமிழ் வாசகர்கள் அறிந்திராத வரலாறு இது. இந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல்.

    RM82.80
  • காடு

    அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்குமு் உறவுகளின் பெரும்பாலை நிலத்தையும் சித்திரிக்கிறது இப்படைப்பு, மனித உறவுகளின் நுட்பமான ஊடுபாவுகளை, காமத்தின் பலவிமான வண்ணபேதங்களை தேர்ந்த வாசகனுக்கு மட்டும் எட்டும்படி நுட்பமாகச் சொல்லி மேல்தளத்தில் சரளமான உத்வேகமான கதையோட்டத்தை முன்வைக்கிறது.

    RM49.00
  • இன்றைய காந்தி

    காந்திய சிந்தனைகளை இன்றைய நோக்கில் அணுகும் விவாதங்களின் தொகுதி இந்த நூல். சமகாலத்து இளைய தலைமுறை காந்தியை அணுகும்போது உருவாகும் ஐயங்கள் சிக்கல்கள் ஆகியவை இந்த உரையாடல்கள் வழியாக இயல்பாக உருவாகி வந்துள்ளன. காந்தியை முழுமையாக அணுகும் இந்நூல் அவர் மீது கறாரான ஒரு பரிசீலனையை நிகழ்த்துகிறது.

    RM45.00RM50.00
  • ஆழி சூழ் உலகு

    ஆழி சூழ் உலகு (நாவல்) – ஆர்.என்.ஜோ டி குரூஸ் : கடலிலும் கரையிலும் பரதவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் அதன் வண்ணங்களோடும் வலிகளோடும் சித்தரிக்கும் இது தமிழின் சிறந்த நாவல்களின் ஒன்று.

    RM72.50
  • அனல் காற்று

    அனல்காற்றின் தனித்தன்மை என்னவென்றால் வெப்பம் ஏறிஏறிச் சென்று அதன் உச்சத்தில் சட்டென்று மழை வந்துவிடுகிறது என்பதே, வாழ்க்கையில் அனல்காற்று வீசும் பருவம் ஒன்றை தாண்டிவராதவர்கள் யார்? அந்த உச்சகட்ட இறுக்கம் கொண்ட சில நாட்களின் கதை இது. எதிர்த்திசை நோக்கி முறுக்கிக்கொள்ளும் உறவுகள், தீமழை கொட்டும் உறவுகள்.

    இது காமத்தின் அனல் காற்று. அது குளிர்ந்துதான் ஆகவேண்டும். ஆனால் குளிரும் கணத்திற்கு முன்னர் அது செடிகொடிகளுடன் நகரையே கொளுத்திவிடும் என எண்ணச்செய்கிறது.

    RM16.00
  • ஆட்டம்

    புறத்தின் ஆட்டவிதிகளுக்கு அடங்காத பேயாட்டம் அகத்தில், அந்த மோகப் பெருநெருப்பும் தணிந்து அகல் சுடராகிக் கனியும் கருணையொளி.

    RM9.00
  • அமீலா

    இது எனது முதலாவது சிறுகதைத்தொகுதி “அமீலா”. சிறுகதைகள் என்றால் இப்போதெல்லாம் எழுதவருபவர்களை சிக்னல்போட்டு நிறுத்தி கதைகளை தலைகீழாக புரட்டிப்போட்டு பிதுக்கிப்பார்த்து ‘கழிவிரக்கம் காணாது. குடலிறக்கம் போதாது’ – என்று விமர்சனத்துண்டுகளை எழுதித்தந்து மருந்துக்கடைகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள். ‘ஆழ்மனதில் அலைக்கழியுங்கள். மேல் முடியை கலைத்துவிடுங்கள்’ – என்று கதையெழுதியவர்களுக்கு விபூதி அடிக்கிறார்கள். கதைகள் பரிசோதனைக்குழாய் தவளைகள் போல விழிபிதுங்கிவிடுகின்றன. ஆனால் “அமீலா” காட்டுத்தீயினால் எழுந்தோடிய கங்காருக்கூட்டத்தைப்போல என்னுள் விழுந்து சிறு சிறு பொறிகள் ஏற்படுத்திய எழுத்தின் இயற்கையான இடப்பெயர்வுகள். அவைதான் இந்தத்தொகுப்பில் கதைகளாக வெளிவந்திருக்கின்றன.

    RM13.00
  • இரவு

    பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒருவனைப்பற்றிய கதை இது. பெரிய மிருகங்கள் எவையும் பகலில் விழித்திருப்பதில்லை. அவை இரவில் மட்டுமே வாழ்கின்றன என இவர்கள் நினைக்கிறார்கள். இரவே அழகானது பகல் அழகற்றது என்கிறார்கள். நாவல் இரவை குறியீடாக மாற்றுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் உள்ள இருண்ட பகுதிகளை இரவு என்று அது வகுத்துரைக்கிறது. இரவின் விரிவான வர்ணனைகள் கொண்ட படைப்பு.

    RM22.00
  • நிலம் எனும் நல்லாள்

    நிலம் எனும் நல்லாள்

    ‘ஆற்றங்கரையின் மரமும் அரசறிய

    வீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே – ஏற்றம்

    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்

    பழுதுண்டு வேறோர் பணிக்கு’

    RM16.00
  • கொற்றவை

    “கொற்றவை’ கண்ணகியின் கதையைத் தன்னில் ஒரு பாகமாக்கி புனைந்து செய்த புதுக்காப்பியம். சிலப்பதிகாரத்தின் மையம் சிதைவு படாமல், ஆனால் சிலப்பதிகாரம் கொடுக்கிற இடைவெளிகளை வளமான கற்பனையால் இட்டு நிரப்புகிற காப்பியம். காப்பியத்துக்குச் சொல்லப்படுகிற எல்லா அமைதிகளையும் பெற்று நிற்கிறது இது.

    RM65.00
  • அஞ்சலை

    இயல்புவாத எழுத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளி கண்மணி குணசேகரன். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பேசும் புதினங்களிலும் முன்னிலை வகிப்பது ‘அஞ்சலை’ இன்று வரையிலான நவீன தமிழ்ப் புனைகதைகள் சித்தரித்த பெண் கதாபாத்திரங்களிலும் அஞ்சலையே வலுவான வார்ப்பு.

    RM35.00