Showing 1–20 of 141 results

  • கரிப்புத் துளிகள்

    “தொரண்ணே இத பாருங்கண்ணே… இத பாருங்கண்ணே” என மூடிய வலதுகையை நீட்டிக்கொண்டு வந்தான் ஐயாவு. துரைசாமியின் முகத்துக்கு முன் தன் கையைத் திறந்து காட்டினான். ஐயாவின் உள்ளங்கையில் பளபளக்கும் கடல் மணலில் பளிங்குக் கள் போல கலலாமைக் குஞ்சுகள் படுத்திருந்தன. மிக அமைதியாக .. குழந்தை போன்று மென்மையாக அவை தன் நான்கு கால்களையும் அசைத்தபடி கூர்மையாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன. துரைசாமி முகத்தைத் திருப்பிக்கொண்டான். சுந்தர் அழுவதுபோல சத்தம் கேட்டது.

    நாவலிலிருந்து.

    RM30.00
  • தாரா

    தாரா எழுத்தாளர் ம.நவீனின் மூன்றாவது நாவல். மலேசியாவுக்குப் புலம்பெயர்ந்து மர ஆலையில் வேலை செய்ய வரும் நேபாளிகளுக்கும் அங்கு வசிக்கும் உள்ளூர் தமிழர்களுக்கும் இடையே நடக்கும் கலவரமும் அதனால் உண்டாகும் அமைதியற்ற நிலையும் நாவலின் அடிப்படை கதையோட்டம். அதன் ஆழத்தில் இரு சிறுமிகள் தங்கள் இனக்குழுவின் ஆன்ம தூய்மையை மீட்டெடுக்கும் வேறொரு கதையும் புதைந்துள்ளது.

    RM30.00
  • ஆழம்

    இந்நாவலின் வழி வாசகர்களுக்குள் மலையக காட்டு மக்களின் வாழ்க்கையும் புலம்பெயர்ந்த பின்னர் அவர்களை அலைக்கழிக்கும் அதிகார ஜாதீய பின்னணியும் கடத்தப்படுகிறது.

    RM26.00
  • ஸலாம் அலைக் (நாவல்)

    ஸலாம் அலைக் – ஷோபா சக்தி:
    ஆசிரியர் குறிப்பு:

    இலங்கையில் வடபுலத்தில் அல்லைப்பிட்டி கிராமத்தில் பிறந்தவர். பல வருடங்களாகப் பிரான்ஸில் வசிக்கிறார். கொரில்லா என்ற நாவலின் மூலம் தமிழ் வாசகர்களின் கவனத்தைப் பெற்ற ஷோபாசக்தி, தொடர்ந்து நாவல்கள், சிறுகதைகள் எழுதி வருகிறார். விவாதங்கள், விமர்சனங்களுக்கு அதிகம் ஆளானவர். இது இவருடைய சமீபத்திய நாவல்.

    இரண்டு பகுதிகள் கொண்ட நாவல். இரண்டில் எந்த பாகத்தையும் முதலில் படிக்கலாம். நூலின் வடிவமும் அதற்கேற்றாற்போல் அமைந்துள்ளது.
    சொந்த நிலத்தில், சொந்த மக்களிடையே முறைகேடு செய்யும் ராணுவம் வேறொரு நிலத்தைத் தங்குமிடமாகக் கொள்ளும் போது, அத்துமீறல்கள் சர்வசாதாரணமாக நடக்கும். அதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். உலகின் எந்த ராணுவமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய அமைதிப்படையின் Excesses நாவலின் பெரும்பகுதியில் வருகின்றன. விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக பிள்ளைகளைத் தூக்கிச்சென்று பயிற்சி அளிக்கிறார்கள்…..

    RM45.00
  • வாழ்க்கை ஒரு விசாரணை

    பாவண்ணன் எழுத்தாற்றல் பெற்ற படைப்பாளி. நல்ல சிறுகதைகள் பல எழுதியிருப்பவர். மனிதர்களை அவர்களது இயல்புகளை, பேச்சு வழக்குகளை- பொதுவாக வாழ்க்கையை- நன்கு கவனித்து மனித நேயத்துடன் எழுதுகிறவர். அவருடைய திறமைக்கு நல்ல சான்றாக அமைந்துள்ளது இந்த நாவல். மக்களின் பேச்சிமுறைகள் இதில் ஆற்றலோடு கையாளப்பட்டிருக்கின்றன.

    பாவண்ணனின் முதலாவது நாவல் இந்த ‘ வாழ்க்கை: ஒரு விசாரணை ’ வெற்றிகரமான இந்தப் படைப்பு ரசிகர்களின் வரவேற்ப்பையும் பாராட்டுதலையும் நிச்சயம் பெறும் என நம்பிகிறேன்.

    – வல்லிக்கண்ணன்

    RM16.00
  • முகமூடிகளின் பள்ளத்தாக்கு

    ”அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது. முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான் போகும் என்பதைச் சொல்லும் இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை. ஒரு நீதிக்கதை என்ற முறையில், இதிலிருக்கும் நீதி திரும்பத் திரும்ப உங்கள் முன்னே வந்து உங்களைப் பீடிக்கவல்லது.” -ஆஷிஷ் நந்தி.

    RM60.00
  • கடல்புரத்தில்..

    இயல்பாகவே, நெருக்கமான உறவுகளுக்குள்கூட கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவது வெளிப்படையானதாக, பொதுவெளியில் நிகழ்த்தப்படக்கூடியதாக இருக்கிறது. ஆனால் மேன்மையான அன்பையும் மன்னிப்பையும் பகிர்ந்துகொள்வதற்கு அந்தரங்கமான சூழல் தேவைப்படுகிறது. அங்கேயும்கூட எளிய மனங்கள் வார்த்தைகளைக் கைவிட்டுவிடுகின்றன. வண்ணநிலவன் இந்த யதார்த்தத்தை உள்ளபடி முன்வைக்கிறார். அது வண்ணநிலவன் பாணியிலான கலை அம்சம் கூடிய யதார்த்தம். அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள், ‘உன் மீது நான் அன்போடு இருக்கிறேன் பார்’ என்று சொல்லிக்கொண்டிருப்பதில்லை. ‘உன் அன்பை நான் புரிந்துகொண்டேன்’ என மறுமொழி தருவதும் இல்லை. இரு மனங்களுக்கிடையே நடைபெறும் மௌனமான உரையாடல் அது. அந்த மௌனத்தை வண்ணநிலவனால் பிரமாதமாக மொழிபெயர்த்துவிட முடியும்.

    RM16.00
  • ரெயினீஸ் ஐயர் தெரு

    தெரு வெறும் சடமாய் நீண்டுகிடந்தாலும், அது மானுட இருப்பால் மகத்துவம் பெறுவதாக இருக்கிறது. தெருவும் தெருவாசிகளும் வேறுவேறாய் இயங்க முடிவதில்லை. ஒவ்வொருவரின் இரத்த நாளங்களிலும் தெருவின் பெயரும் கலந்தே ஓடுகிறது. அதற்கெனத் தனி ஒளியும் வரலாறும் உருவாகிறது. ஒரு தெரு எப்போது உயர்நிலைபெறுகிறது, அது ஏன் இலக்கியமாகிறது என்றால் இந்நாவலில் நடமாடும் ஒவ்வொரு கதாபாத்திரத்தாலும்தான் என்று உணர்ந்து கொள்ளலாம். இறகுகளால் வருடிவிடப்படுவது போன்ற எழுத்து நடையால் ரெயினீஸ் ஐயர் தெரு நம் உள்ளங்களில் நிறைகிறது. – களந்தை பீர்முகம்மது

    RM14.00
  • கரைந்த நிழல்கள் (காலச்சுவடு பதிப்பகம்)

    அசாதாரணமானது என்ற வார்த்தை 1970ல் முதன்முறையாகக் ‘கரைந்த நிழல்கள்’ நாவலைப் படிக்கும்போது தோன்றிற்று.தற்போது, இந்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு தடவை முழுதாகவும், ஏழெட்டு தடவை பகுதிபகுதியாகவும், நாவலின் நேர்த்தியில் ஈடுபட்டுத் திரும்பவும் ஒரு தடவை முதலிலிருந்து கடைசி வரை ஒரே மூச்சிலும் படிக்க நேர்ந்த பிறகு, ‘கரைந்த நிழல்கள்’ அசாதாரணமான சாதனைதான் என்பது நிச்சயமாகிறது. – சி. மணி (மார்ச் 1977இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பிலிருந்த பின்னுரையிலிருந்து)

    RM20.00
  • கருக்கு

    செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். காரணம் நாம் சரித்திரத்தை வெகு வேகமாக மறப்பவர்கள். குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், பெண்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. அப்படி எளிதாக்கிக்கொள்வது நமக்கு வசதியாக இருக்கிறது. மனத்தைக் குத்துபவைகளை அவை இல்லாதவை போல பாவனை செய்துகொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க, அவர்களை முட்டி முட்டித் தொல்லை தர, அவர்களின் தடித்துப்போன தோல்களைக் கீறிவிட ‘கருக்கு’ தேவைப்படுகிறது. உருவகமாகவும் புத்தகமாகவும்.

    RM14.00
  • மிளிர் கல்(நாவல்)

    மிளிர் கல்(நாவல்) – இரா.முருகவேள் :
    சிலப்பதிகார வரலாற்றினூடே இரத்தினக்கற்களின் அரசியலை நாவல் பேசிய போதிலும் இது மீதேன் பேரிலும், கெயில் குழாய் பதிப்பின் பேரிலும், காடுகள் -மலைகள் – நீர்நிலைகள் – தாது மணல் கொள்ளைகள் என அனைத்தின் பேரிலும் நடக்கும் ஆக்கிரமிப்புகளையும், மக்களின் போராட்டங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் புரிந்துகொள்வதற்கு துணை செய்கிறது.

    RM23.00
  • கன்னி (நாவல்)

    ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதையாகவே எழுதிய ‘கன்னி’ நாவலில் இருந்து சில பகுதிகள்: “வண்ணங்கள் மறைகின்றன. வானவில்லும் இல்லாமலாக காற்றோடு பாய்கின்றன மேகங்கள். ஒளியின் சிறகுகள் முன்பே முறிந்து தணிந்தன. நிழல் திரை விரிந்து பகலை மூடுகிறது. கடல் இருள்கிறது, கரைகள் பதைக்கின்றன. மின்னல் குரலில் கண்ணால் பாடுகிறது முகமற்ற வேட்கை. விண்ணைப் பார்த்திருந்த சின்ன மலரொன்று அச்சத்தில் மணம் தடுமாறுகிறது. ஆந்தையின் தலையில் ஆவலொன்று பச்சை மச்சமாகி இரவுக்காக விரிகிறது. கிழங்கை முகர்ந்து பார்த்து முத்தம் மட்டும் தந்துவிட்டுப் பசியோடு கிடைக்குத் திரும்புகிறது முயல்குட்டி. கன்னிமையின் தோளில் விழுந்து நாணத்தின் கன்னத்தில் தெறிக்கிறது மழை. மழை வலுக்கிறது. மணல் முலைகள் கரைந்தோடுகின்றன. ஏதோ ஒரு சிப்பி பெண்ணாகி இதழ் விரிக்கிறது.”

    RM44.00
  • அம்மா வந்தாள்

    ‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.

    RM22.50
  • வெண்ணிறக் கோட்டை

    ஓரான் பாமுக்கின் ஆரம்ப கால நாவல்களில் ஒன்று ‘வெண்ணிறக் கோட்டை’. துருக்கியரல்லாத அயல்மொழி வாசகர்கள் இந்த நாவல் மூலமே முதலில் அவரை அறிந்துகொண்டனர். பாமுக்கின் இலக்கிய அறிமுகத்தை அமெரிக்க எழுத்தாளர் ஜே. பரினி ‘கிழக்கிலிருந்து ஒரு புதிய நட்சத்திரத்தின் உதயம்’ என்று குறிப்பிட்டார். ஆங்கிலத்தில் வெளியான ‘வெண்ணிறக் கோட்டை’யை முன்வைத்து அவரை ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேவுக்கும் இதாலோ கால்வினோவுக்கும் நிகரானவராக மதித்தார். ஆனால் தனது படைப்பாக்கத்தில் மூளையை இதயமாக மாற்றும் விந்தைக் கலைஞர் ஓரான் பாமுக். ‘வெண்ணிறக் கோட்டை’யின் கதை சிக்கலானது; அறிவுப்பூர்வமானது. ஆனால் உணர்வின் பெரும் ததும்பல் கொண்டது. பதினேழாம் நூற்றாண்டின் இஸ்தான்புல் நகரத்தைப் பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. ஒரு மனிதனின் இருமை பற்றிய குழப்பங்களும் தெளிவுகளுமே கதையாடல். தனக்குள் இருக்கும் பிறத்தியானை அல்லது பிறனுக்குள் இருக்கும் தன்னை ஒரு மனிதன் எதிர்கொள்வதே நாவலின் மைய இழை. ஒருவகையில் இது இரண்டு மனித இயல்புகளின் கதை. இன்னொரு வகையில் மேற்குக்கும் கிழக்குக்கும் இடையில் அகப்பட்டுத் தனி அடையாளத்துக்காகத் திணறும் துருக்கியின் வரலாறு. மூன்றாம் வகையில் ஓரான் பாமுக் தனது பிற்காலக் கதைகளில் விரிவுபடுத்திய சுய அடையாளக் குழப்பம் சார்ந்த தன்வரலாறு. ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்புகள் விரிவான வாசக கவனத்துக்கும் சரியான அங்கீகாரத்துக்கும் உள்ளானவை. ஓரான் பாமுக்கின் படைப்புகளைத் தொடர்ந்து மொழியாக்கம் செய்துவரும் ஜி. குப்புசாமி, இந்த மொழிபெயர்ப்பில் மூலஆசிரியரின் நிழல் பங்காளியாகத் தன்னை நிறுவுகிறார்; நம்பகமான விதத்தில்.

    RM22.50
  • மைத்ரி (நாவல்)

    உத்தராகண்டின் இமயமலைச் சரிவில் ஒரு வசந்தகாலத்தின் துவக்கத்தில் நிகழும் ஒரு காதல் கதை இது. மூன்று நாட்களே நீடிக்கும் அந்த சிறிய உறவில் காதலும் இயற்கையும் எப்படி ஒன்றை ஒன்று தழுவி நிரப்பிக்கொள்கின்றன என்னும் சித்திரத்தை தேர்ந்த நடையில் ஆசிரியர் இதில் அளிக்கிறார். புலன் வழி அனுபவங்களால் மட்டுமே சென்றடையும் அகவிடுதலையை இந்நாவல் மேலதிகமாக தொட்டுக்காட்டுகிறது. தமிழில் கதைக்களம் மற்றும் பேசுபொருள் சார்ந்து இந்நாவல் ஒரு முக்கியமான புதிய முயற்சி.

    RM30.00
  • அஞ்சல் நிலையம்

    அஞ்சல் நிலையம்

    ஹென்றி சார்லஸ் புகோவ்ஸ்கி ஜெர்மனியில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்த கவிஞர், புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர். அவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார சூழ்விளைவுகளின் பாதிப்பு அவரது படைப்புகளில் பொதிந்திருக்கும். அமெரிக்காவில் உள்ள ஏழைகளின் எளிய வாழ்வு, எழுதும் கலை, குடி, பெண்களுடனான தொடர்பு, அடிமைத்தொழில் ஆகியவற்றை அவர்து படைப்புகள் பேசுகின்றன.

    RM30.00
  • மூத்த அகதி

    ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை என் வாழ்வில் இருந்துதான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். என் கால்கள் எப்போதும் பூமியில் பதிந்திருப்பதையே விரும்புகிறேன். எந்த நிலமும் சொந்த மில்லாத இந்த அகதி வாழ்வில் இருந்தே ‘மூத்த அகதி’ நாவலை எழுதி முடித்திருக்கிறேன். உலகில் மிகவும் துயரமானது எது என்று கேட்டால், ‘ஒரு அகதி தன்னுடைய வாழ்வியல் துயர்களை விளக்கி கூற முயல்வது’ என்றே கருதுகிறேன். அகதி வாழ்வை எழுத முயல்வது கூட அதற்கு நிகரானதுதான். எவ்வளவு முயன்றாலும் அதை விளக்கி விட முடியாது. அதை அகதியாக இருக்கும் ஒருவனால்தான் உணர முடியும். நான் ஏன் பதட்டமாகிறேன்? நான் ஏன் பலகீனமாக உணர்கிறேன்? நான் ஏன் ஒதுங்கி கொள்கிறேன்? இப்படி எழும் அத்தனை கேள்விகளுக்கும் ஒரேயொரு பதில் தான் இருக்கிறது. ‘என் பெயர் அகதி’ என்பதுதான் அந்தப் பதில்.

    RM29.00
  • ஆலகாலம்

    கலைச்செல்வியின் முதல் நாவலான சக்கைக்கும் இந்த நாவலுக்கும் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் இடைவெளி இருந்தாலும், இருபது வருடங்களைக் கடந்த முதிர்ச்சி மொழிநடை மற்றும் உள்ளடக்கத்தில் தெரிகின்றது. நாவலின் பல இடங்களில் மொழியானது. காவேரியின் பிரவாகம் போல் பெருகி ஓட்டமெடுக்கிறது. மானிட இனத்தின் நேரங்களில் சாபங்களும் வடிவம் வரங்கள். தனிமையும், தேடலும் அவையே இந்த நாவலின் முக்கியமான கருப்பொருள்கள் இவை இரண்டுமேயாகும். கலைச்செல்வி அதற்கு கலை வடிவம் கொடுத்திருக்கிறார்.

    – சரவணன் மாணிக்கவாசகம்

    RM54.00
  • அல் கொஸாமா

    ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை சமகால வாழ்விலிருந்து தொடங்கி பின் நோக்கியும் முன் நோக்கியும் பயணிக்கும் இப்புதினம் ‘பதூவன்’ எனக் கூறப்படும் அரபு மூலக்குடிகளின் வாழ்வியல், புலம் பெயர்ந்த இந்தியர்களின் தினசரி, கவிதை, வன்மம், காமம், பின்- பின் நவீனத்துவ தத்துவம், ஆதி மனித வேட்கை, பாலைவனம்,’ஜின்’ எனும் மாய வலை, இயற்கை என்று பல எல்லைகளைக் கொண்ட ஒரு எல்லையற்ற புனைவு. தமிழுக்கு மட்டுமல்லாமல் இந்தியா இலக்கியத்திற்கே புதிய கதைக்களத்தை அறிமுகப் படுத்தியிருக்கும் இந்த ‘அல் கொஸாமா’ வாசகர்களின் கண்களில் முடிவற்ற நிலப்பரப்பை ஸ்ருஷ்டிக்கும் என்பதில் எந்தவொரு ஐயப்பாடும் இல்லை.

    RM32.00