Showing all 10 results

  • காவியம்

    என் சமகாலத்தவரும் எனக்குப்பின் எழுதவந்தவர்களுமான எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றிய என் அவதானிப்புகள் இவை. இவர்களின் புனைவுலகைக் கூர்ந்து அவதானிக்கவும் மதிப்பிடவும் முயன்றிருக்கிறேன்அவ்வகையில் நான் நின்றிருக்கும் காலத்துடன் இவர்களுக்கு ஓர் இன்றியமையாத இணைப்பை உருவாக்க முயன்றுள்ளேன் என்று படுகிறது.

    புனைவிலக்கியவாதிகளைப்பற்றி விமர்சனங்கள் குறைவாகவே எழும் சூழல் இது எழுந்தாலும் பெரும்பாலும் அரசியலே பேசப்படுகிறது. அவர்களின் புனைவுலகின் நுட்பங்களும் அழகுகளும் பேசப்படுவதில்லை. அதற்கு பிறிதொரு எழுத்தாளனே வரவேண்டியிருக்கிறது.

    RM117.00RM130.00

    Only 1 left in stock

  • ஆயிரங்கால் மண்டபம்

    ஜெயமோகன் எழுதிய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு இது. அழகிய கற்பனைகள் கொண்ட புதியவகைக் கதைகளின் தொகுதியாக அப்போது மதிப்பிடப்பட்டது. ஜெயமோகன் யதார்த்தவாதக் கதைகளில் இருந்து முன்னகர்ந்து பலவகையான கதைவடிவங்களை பயன்படுத்தி தன் தத்துவத்தேடலையும் மெய்யியல் அறிதல்களையும் முன்வைத்த படைப்புகள் இவை. இவற்றிலுள்ள பல கதைகள் பல்வேறு மொழியாக்கங்கள் வழியாக இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் புகழ்பெற்றவை. இதே வடிவில் இத்தொகுதியை விரும்பிக்கேட்ட வாசகர்களுக்காக இப்போது மீண்டும் வெளிவருகிறது.

    RM20.70RM23.00

    In stock

  • கூந்தல்

    குறியீட்டு ஆழமும் மொழியும் அழுத்தமும் உடைய ஜெயமோகனின் சிறுகதைகள் உத்வேகம் ஊட்டும் வாசிப்பனுபவங்களும்கூட. எளிமையான ஒரு மேற்பரப்பு எல்லா கதைகளுக்கும் உள்ளது. பேய்க்கதைகளின் பாணியில் எழுதப்பட்ட கதைகள் சுயசரிதைக் குறிப்புகள் போன்ற கதைகள், கட்டுரைக்கும் கதைக்கும் நடுவில் இயங்கும் கதைகள் என பலவகைப்பட்ட வகைமாதிரிகள் இவற்றில் உள்ளன. சாதாரணமான புனைவின் வழியாக கவித்துவத்தை மௌனமாகத் தொட்டுவிட முயல்பவை இவை.

    RM17.10RM19.00

    Only 2 left in stock

  • அந்த முகில் இந்த முகில்

    இந்தக்கதை நான் அறிந்த மெய்யான ஓரு வாழ்க்கையின் புனைவு வடிவம். அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை. எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன. நுரைக்காத தருணமே இல்லாத கதை. பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு. அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு. கனவின் எழில்கொண்ட ஒரு கற்பனாவாதப் படைப்பு இது. ஒரு காதல் கதை. இழந்தகாதலின் அல்லது இழக்க முடியாத காதலின் கதை.

    RM22.50RM25.00

    Only 1 left in stock

  • ஆலம்

    ஆலம் என்றால் நஞ்சு. சரியான பொருள் ஆதிநஞ்சு. மானுட உள்ளங்கள் அனைத்திலும் உறைந்திருக்கும் அடிப்படையான நஞ்சு ஒன்றைச் சித்தரிக்கும் நாவல் இது. வெற்றிமாறன் – மிஷ்கின் – கௌதம் மேனன் இயக்கத்தில் திட்டமிடப்பட்ட ஒரு தொலைத்தொடருக்காக எழுதப்பட்ட முதல்வடிவம். தீவிரமான நிகழ்வுகள் வழியாகச் செல்லும் வேகமான கதையோட்டமும், பல இடங்களை அகத்தும் புறத்தும் தொட்டுச்செல்லும் கதைப்பின்னலும் கொண்ட நாவல்.

    In stock

  • நான்காவது கொலை

    திண்ணை இணையதளத்தில் 2002ல் இதை நான் எழுதினேன். வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு கேலிக்கூத்தான உலகம் இது. எழுத்து, இதழியல் பற்றிய கேலி என்று சொல்லலாம்

    RM16.20RM18.00

    Only 2 left in stock

  • திசைகளின் நடுவே

    Short Stories | சிறுகதைகள், Literature | இலக்கியம், 2022 Release, 2023 New Arrivalsவ்

    இக்கதைகளை இன்று பார்க்கையில் இவற்ரின் சிரப்பம்சம் இவர்ரீன் அகலமே என்று படுகிறது. பல கதைகளில் விரிவான சூழலும், அதிகமான கால அளவும் காணப்படுகிறது. இப்போது என் வாசிப்பு விரிவடைகையில் அமெரிக்க சிறுகதைகளில் இவ்வியல்பு அதிகமிருப்பதைக் காண்கிறேன். சிறுகதையின் முக்கியமான வகை மாதிரி இது என்று இதைக் கூறத் துனிவேன்.

    RM27.00RM30.00

    Only 2 left in stock

  • படுகளம்

    படுகளம் ஒரு வேகப்புனைவு (திரில்லர்) வகை நாவல். இத்தகைய கதைகள் பொழுதுபோக்கு எழுத்தின் ஒரு வடிவமாக இருந்தன, இன்று உலகமெங்கும் இலக்கியப்படைப்புக்கான வடிவமாகவும் ஆகியுள்ளன. இவை ஒரு வாழ்க்கை யதார்த்தத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றை தீவிரப்படுத்திச் சொல்லும் அமைப்பு கொண்டவை. ஆகவே சற்று யதார்த்தம் மீறியவை. அந்த அடிப்படை அமைப்புக்குள் கதைமாந்தரின் உள்ளம் வெளிப்படும் விதம், வாழ்க்கையின் சில அரிய தருணங்கள் வழியாக அவை இலக்கியத்தகுதியையும் அடைகின்றன. படுகளம் மிக வேகமாக நகரும் நிகழ்வுகள் வழியாக, சலிப்பற்ற ஒரு வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. அதன் வழியாக ஒரு வாழ்க்கைக் களமும் அங்கு வாழும் மனிதர்களின் அகமாற்றங்களும் சித்தரிக்கப்படுகின்றனவ்

    RM30.60RM34.00

    Only 2 left in stock