Showing 1–20 of 61 results

  • ஆயிரங்கால் மண்டபம்

    ஜெயமோகன் எழுதிய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு இது. அழகிய கற்பனைகள் கொண்ட புதியவகைக் கதைகளின் தொகுதியாக அப்போது மதிப்பிடப்பட்டது. ஜெயமோகன் யதார்த்தவாதக் கதைகளில் இருந்து முன்னகர்ந்து பலவகையான கதைவடிவங்களை பயன்படுத்தி தன் தத்துவத்தேடலையும் மெய்யியல் அறிதல்களையும் முன்வைத்த படைப்புகள் இவை. இவற்றிலுள்ள பல கதைகள் பல்வேறு மொழியாக்கங்கள் வழியாக இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் புகழ்பெற்றவை. இதே வடிவில் இத்தொகுதியை விரும்பிக்கேட்ட வாசகர்களுக்காக இப்போது மீண்டும் வெளிவருகிறது.

    RM20.70RM23.00

    In stock

  • ஈராறுகால்கொண்டெழும் புரவி

    குறியீட்டு ஆழமும் மொழியும் அழுத்தமும் உடைய ஜெயமோகனின் சிறுகதைகள் உத்வேகம் ஊட்டும் வாசிப்பனுபவங்களும்கூட. எளிமையான ஒரு மேற்பரப்பு எல்லா கதைகளுக்கும் உள்ளது. பேய்க்கதைகளின் பாணியில் எழுதப்பட்ட கதைகள் சுயசரிதைக் குறிப்புகள் போன்ற கதைகள், கட்டுரைக்கும் கதைக்கும் நடுவில் இயங்கும் கதைகள் என பலவகைப்பட்ட வகைமாதிரிகள் இவற்றில் உள்ளன. சாதாரணமான புனைவின் வழியாக கவித்துவத்தை மௌனமாகத் தொட்டுவிட முயல்பவை இவை.

    RM16.20RM18.00

    In stock

  • கூந்தல்

    குறியீட்டு ஆழமும் மொழியும் அழுத்தமும் உடைய ஜெயமோகனின் சிறுகதைகள் உத்வேகம் ஊட்டும் வாசிப்பனுபவங்களும்கூட. எளிமையான ஒரு மேற்பரப்பு எல்லா கதைகளுக்கும் உள்ளது. பேய்க்கதைகளின் பாணியில் எழுதப்பட்ட கதைகள் சுயசரிதைக் குறிப்புகள் போன்ற கதைகள், கட்டுரைக்கும் கதைக்கும் நடுவில் இயங்கும் கதைகள் என பலவகைப்பட்ட வகைமாதிரிகள் இவற்றில் உள்ளன. சாதாரணமான புனைவின் வழியாக கவித்துவத்தை மௌனமாகத் தொட்டுவிட முயல்பவை இவை.

    RM17.10RM19.00

    Only 2 left in stock

  • அந்த முகில் இந்த முகில்

    இந்தக்கதை நான் அறிந்த மெய்யான ஓரு வாழ்க்கையின் புனைவு வடிவம். அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை. எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன. நுரைக்காத தருணமே இல்லாத கதை. பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு. அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு. கனவின் எழில்கொண்ட ஒரு கற்பனாவாதப் படைப்பு இது. ஒரு காதல் கதை. இழந்தகாதலின் அல்லது இழக்க முடியாத காதலின் கதை.

    RM22.50RM25.00

    Only 1 left in stock

  • ஆலம்

    ஆலம் என்றால் நஞ்சு. சரியான பொருள் ஆதிநஞ்சு. மானுட உள்ளங்கள் அனைத்திலும் உறைந்திருக்கும் அடிப்படையான நஞ்சு ஒன்றைச் சித்தரிக்கும் நாவல் இது. வெற்றிமாறன் – மிஷ்கின் – கௌதம் மேனன் இயக்கத்தில் திட்டமிடப்பட்ட ஒரு தொலைத்தொடருக்காக எழுதப்பட்ட முதல்வடிவம். தீவிரமான நிகழ்வுகள் வழியாகச் செல்லும் வேகமான கதையோட்டமும், பல இடங்களை அகத்தும் புறத்தும் தொட்டுச்செல்லும் கதைப்பின்னலும் கொண்ட நாவல்.

    In stock

  • திசைகளின் நடுவே

    Short Stories | சிறுகதைகள், Literature | இலக்கியம், 2022 Release, 2023 New Arrivalsவ்

    இக்கதைகளை இன்று பார்க்கையில் இவற்ரின் சிரப்பம்சம் இவர்ரீன் அகலமே என்று படுகிறது. பல கதைகளில் விரிவான சூழலும், அதிகமான கால அளவும் காணப்படுகிறது. இப்போது என் வாசிப்பு விரிவடைகையில் அமெரிக்க சிறுகதைகளில் இவ்வியல்பு அதிகமிருப்பதைக் காண்கிறேன். சிறுகதையின் முக்கியமான வகை மாதிரி இது என்று இதைக் கூறத் துனிவேன்.

    RM27.00RM30.00

    Only 2 left in stock

  • படுகளம்

    படுகளம் ஒரு வேகப்புனைவு (திரில்லர்) வகை நாவல். இத்தகைய கதைகள் பொழுதுபோக்கு எழுத்தின் ஒரு வடிவமாக இருந்தன, இன்று உலகமெங்கும் இலக்கியப்படைப்புக்கான வடிவமாகவும் ஆகியுள்ளன. இவை ஒரு வாழ்க்கை யதார்த்தத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றை தீவிரப்படுத்திச் சொல்லும் அமைப்பு கொண்டவை. ஆகவே சற்று யதார்த்தம் மீறியவை. அந்த அடிப்படை அமைப்புக்குள் கதைமாந்தரின் உள்ளம் வெளிப்படும் விதம், வாழ்க்கையின் சில அரிய தருணங்கள் வழியாக அவை இலக்கியத்தகுதியையும் அடைகின்றன. படுகளம் மிக வேகமாக நகரும் நிகழ்வுகள் வழியாக, சலிப்பற்ற ஒரு வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. அதன் வழியாக ஒரு வாழ்க்கைக் களமும் அங்கு வாழும் மனிதர்களின் அகமாற்றங்களும் சித்தரிக்கப்படுகின்றனவ்

    RM30.60RM34.00

    Only 2 left in stock

  • யாருக்கும் இல்லாத பாலை

    யாருக்கும் இல்லாத பாலை

    “இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளில் பொருள் மயக்கின் அழகியலைக் காணலாம். எப்போதும் கவிதைகளில் வெளிப்படையான பொருளைத்தேடும் வாசகர்களுக்கு இது ஒரு சவாலாக அமையலாம். லதாவின் கவிதைகள் வாசகரின் பங்குபற்றலையும், நுண்மதியையும் அதிகம் வேண்டி நிற்பவை. ஏமாற்றும் எளிமைக்குள் மர்மங்களைப் புதைத்துவைத்திருக்கும் கவிதைகள் இவை. மென் உணர்வின் சுகந்தமும், தனிமையின் நெருடலும், முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் வலியும், வன்முறைக்கு எதிμõன குμலும் செறிவான படிமங்களின் ஊடாக இக்கவிதைகளில் வெளிப்படுகின்றன…”

    RM11.00

    In stock

  • மலைக்காடு

    சீ.முத்துசாமியின் மலைக்காடு மலாயா மக்களின் வரலாறு. மலைக்காட்டின் பேருருவை சீ.முத்துசாமி ஒருவகையான பேய்த்தோற்றமாகவே வர்ணிக்கிறார். ஊரில் மழையின்றி வறண்ட பாலையிலிருந்து வருபவர்களுக்கு அங்கிருந்து சொல்வழியாக அறிகையில் அது விண்ணுலகின் ஒளிகொண்டதாக இருக்கிறது. ஆனால் நேரில் அது அரக்கருலகு. பாலைநிலத்து மக்கள் பசுநிலத்தில் வதைபட்டுச் சாவதிலுள்ள ஊழின் அங்கதமே இந்நாவலைக் கட்டமைக்கிறது. அவர்களின் உள்ளார்ந்த அனலின் உறுமலாகப் பறை உடனிருக்கிறது. அவர்கள் காட்டை அழித்து தோட்டங்களை உருவாக்கும் வெள்ளையர்களுக்குக் கீழே, அவர்களின் அடிமைகளாகவும் அடிமைகளின் ஆண்டைளாகவும் இருமுகம்கொண்ட கங்காணிகளின் சவுக்கடி பட்டு, பொந்துபோன்ற லாயங்களில் தங்கள் தீயூழின் அடுத்தபகுதியை நோக்கிச் செல்கிறார்கள். அம்மக்களின் போராட்டத்தின் கதை இந்நாவல். இதன் முதன்மையான சிறப்பு என்பது எந்த அரசியல் கோட்பாட்டுக்கு உட்பட்டும் அந்த வாழ்க்கையைச் சொல்ல சீ.முத்துசாமி முயலவில்லை என்பதுதான். ஆகவே வாழ்க்கை ஒருவகையான அப்பட்டத்தன்மையுடன் விரிகிறது. – ஜெயமோகன்

    RM35.00

    Only 1 left in stock

  • பாய்மரக் கப்பல்

    பாவண்ணன் பாவண்ணனின் பாய்மரக் கப்பல் வாழ்க்கை என்னும் மாபெருங்கடலில் பயணத்தைத் தொடங்கிய ஒரு விவசாயியின் வம்ச வரலாறு. இதில் வரும் காசாம்பு, முத்துசாமி, முனுசாமி, ரங்கசாமி, ஆறுமுகம், துரைசாமி ஆகியோரை இந்தத் தேசத்தில் எங்கெங்கும் காணலாம். அனைவரும் உயிர்ச்சித்திரங்கள். இவர்கள் வழியாகத்தான் வரலாறு மெல்லமெல்ல நகர்ந்து வந்திருக்கிறது. மனிதர்களின் வாழ்க்கையைக் கலைப் பண்புடன் சித்தரிப்பதில் கைதேர்ந்த பாவண்ணன் இந்த நாவலில் விரிந்த பின்னணியில் காலத்தின் நகர்தலைக் கதையாக்கியுள்ளார்,
    RM20.00

    Only 2 left in stock

  • விண்ணிலிருந்து வீழ்ந்த பெண்

    மலேசிய தமிழ் எழுத்தாளர்களிடையே உள்ள எதிர்பார்ப்பு தங்கள் படைப்புகள் பிற மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும் என்பது. அந்த எதிர்பார்ப்பில் தவறு இல்லை. ஆனால் மொழிபெயர்ப்பு என்பது ஒருவகை அறிவுப் பரிமாற்றம். ஆகவே அது இருவழிகளிலும் நிகழ வேண்டும். நம் படைப்புகள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்படுவதுபோலவே பிற மொழியின் சிறந்த இலக்கியங்கள் தமிழில் மொழியாக்கம் காணவேண்டும். பிற நாட்டு இலக்கியங்களுடன் தமிழுக்கு இருக்கும் அறிமுகம் மலேசியாவில் எழுதப்படும் மலாய், சீன இலக்கியங்களுடன் நிகழவில்லை. காரணம் அவை தமிழில் மொழியாக்கம் கண்டதில்லை. அந்த இடைவெளியின் தூரத்தைக் குறைக்கவே இந்த முயற்சி ஒரு மலாய் எழுத்தாளரின் பத்துக் கதைகளைக்கொண்ட ஒரு தொகுப்பு நூல் தமிழில் வெளிவருவது இதுவே முதல் முறை, உலக தமிழ் வாசகர்களுக்கு இந்நூல் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரும்.

    RM25.00

    In stock

  • சிண்டாய்

    அரவின் குமார் மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் புதிய தலைமுறை எழுத்தாளர். சிறுகதைகள், கட்டுரை, விமர்சனக் கட்டுரை, இலக்கியச் செயல்பாடுகள் என இடையறாது இயங்கி வருகிறார். அவரது முதல் சிறுகதை தொகுப்பு ‘சிண்டாய்’ வல்லினம் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது. இந்நூல் குறித்து பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு.எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ‘வல்லினம்’ இணைய இதழில் ’நிலமும் துயரமும் மனிதர்களும்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கும் விரிவான கட்டுரையிலிருந்து சில பத்திகள்…. /இந்தக் கதைகள் வெளிச்சக் கீற்றுகளே எட்டிப் பார்க்காத இருண்ட உலகத்தில் நிகழ்பவை. அந்த இருட்டு தரும் பயத்தையும் தடுமாற்றத்தையும் போக்கவென நிவாரணிகளாக அமைகின்றன சில நம்பிக்கைகள், ரோக்கியா தடவிக் கொள்ளும் தைலத்தைப்போல. கைவிடப்பட்டவர்களுக்கான ஆறுதலை அளிக்கின்றன அத்தகைய நம்பிக்கைகள். மாந்திரீக நடவடிக்கைகள், அமானுஷ்யமான நிகழ்வுகள் போன்றவை தற்காலிகமான தப்பித்தல்களை சாத்தியப்படுத்துகின்றன. அன்றாடத்தின் புற அழுத்தங்களால் நொந்து நொடிந்துபோன மனம் திசைதெரியாமல் தடுமாறி, சிதைவுற்று அலையும்போது தர்க்கங்களையும் பகுத்தறிவையும்கொண்டு அதனை சீர்படுத்த முடியாது. மனம் எதிர்பார்ப்பது விளக்கங்களை அல்ல, ஆறுதலை அல்லது திசைதிருப்பலை அல்லது போதமற்ற தூக்கத்தை. கடும் உழைப்பாளியான தாத்தாவுக்கு நிலத்தின் மீதிருந்த பற்று தன் மீது இல்லை என்கிறபோது பாட்டிக்கு வடிகாலாக அமைவது அடர்த்தியாக மஞ்சளைப் பூசிக்கொண்டு சாமியாடுவது. விலகலும் வெறுப்பும் கூடுந்தோறும் குளியலறைக் கல்லில் தேய்க்கும் மஞ்சளும் அடர்த்திகொள்கிறது./

    RM18.00

    In stock