-
வானவில் பறவையின் கதை
அதி விநோதமும் கற்பனையும் நிறைந்த நாடோடி இலக்கியம். வாசிப்பின் இனிய பயணத்திற்கான அதிசய உலகம் இந்தப் பல நாட்டுப் பழங்கதைகள்.
-
விக்ரமாதித்தன் கதைகள்
இந்திய சமூகமே கதை கேட்டு வளர்ந்த சமூகம் என்று கூறுவர். விக்ரமாதித்தன் கதைகள் அதில் மிக பிரபலம். விக்ரமாதித்தனுக்கும் வேதாளத்துக்கும் இந்நூலில் நடைபெறும் உரையாடலில் மருத்துவத்துறை அற்புதங்கள் சுவைபட பேசுபொருள் ஆகி இருக்கிறது. வெகு சுவாரசியமான ஒன்று.
சிறுவர்களுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல். -
மண்ட்டோ படைப்புகள்
இந்திய துணைக்கண்டப் பிரிவினை பற்றி வேறு பல எழுத்தாளர்களின் படைப்புகள் இந்தச் சிதைவை மண்ட்டோ போல் வெளிக்கொணரவில்லை. ஆரம்பத்திலிருந்தே அவர் ஆபாசம் என்ற நிழல் கொண்டவராகத்தான் கருதப்பட்டார். மண்ட்டோவின் நோக்கம் ஆபாசமல்ல, குரூரமல்ல என்று நிரூபிக்க வேண்டியிருந்தது. -அசோகமித்திரன்
-
சிலேட்டுக்குச்சி
குழந்தைகளின் உளவியலைக் கற்றுக்கொள்ள தியரிகளை வாசிக்க வேண்டியதில்லை. முத்துக்கண்ணனின் இந்த அனுபவத் தொகுப்பை வாசித்தால் போதும். அதுமட்டுமல்ல ஆசிரியர்களின் உளவியலையும் பெற்றோரின் உளவியலையும் கூடக் கற்றுக்கொள்ள இடமிருக்கிறது இந்நூலில். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு கச்சிதமான சிறுகதையைப்போல எழுதப்பட்டிருப்பதால் கூடுதலான வாசிப்பு இன்பத்தை இவை வாரி வழங்குகின்றன. – ச தமிழ்ச்செல்வன்