Showing 21–40 of 42 results

  • கொரோனா காலம்

    இந்த தொகுப்பில் எழுதப்பட்ட ஒவ்வொரு கதைகளும் பெருந்தொற்றை ஒவ்வொரு விதத்தில் பேசியவை. கோவிட் தொற்று இப்படி அலை அலையாக உலகின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் வாரிச் சுருட்டும் முன் எழுதப்பட்ட கதைகள் என்று கூட சொல்லலாம். வெறும் நடப்பைப் பேசும் கதைகளாக மட்டும் இல்லாமல், அரசியல், அறிவியல், தத்துவம், இருத்தலியல், நம்பிக்கை என வெவ்வேறு வகைமையால் ஆன கதைகளால் இந்த தொகுப்பு முக்கியம் பெறுகிறது.

    RM17.50
  • ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை

    Music குறிப்பாக Jazz தவிர்க்கவியலாமல் முரகாமியின் கதைகளில் வருவது போல ஜீவ கரிகாலனுக்கு ஓவியம். தொகுப்பில் பல கதைகளில் ஓவியம் கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரமாகவே வருகின்றது. ஒரு சைக்கோ பற்றிய கதையில் கூட ஓவியம் தவிர்க்க முடியாது இடம் பெறுகிறது. ஜீவ கரிகாலன் எடுத்துக் கொள்ளும் கதைக்களங்கள் மட்டுமில்லை, கதைகளும் வித்தியாசமானவை. ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முரகாமி எழுதியது என்றால் பாதிப்பேர் நம்பிவிடுவார்கள். திருமுகம் கதையின் நடை அதற்கு முற்றிலும் வேறானது. அது போலவே பல கதைகள் ஒரே எழுத்தாளரின் சாயலை இழந்து நிற்பவை.
    By the same Author

    RM18.00
  • ஆள்தலும் அளத்தலும்

    பெரும்பாலான இந்தக் கதைகள் நல்ல வாசிப்பு அனுபவம் வழங்குகின்றன. ஈர்ப்பான கூறுமொழி. சொந்த அனுபவங்களா அல்லது சாட்சியாக நின்றவையா என்று அனுமானிக்க முயல்வது வாசகனின் வேலை அல்ல. ஆனால் நம்பகத்தன்மைக்கு என்றொரு தனியான வசீகரம் உண்டு.

    சம்பிரதாயமான சில புத்திமதிகள் கூறுவார்கள், வழக்கமாக முன்னுரை எழுதுவோர். அதனைத் தவிர்க்க விரும்புகிறேன். ‘அழுதாலும் பிள்ளை அவள் தானே பெறனும்!’ என்பது நம் இலக்கியக் கொள்கை.காலத்தால் தொடரும் முயற்சியும், ஊக்கமும், உழைப்பும், நுட்பமான பார்வையும், சமநிலைச் சீர்கேடாமையும், மொழித்திறனும், கலைத்தேர்ச்சியும் மேலும் காளிப்ரஸாத்துக்கு வாய்க்க இந்தக் கலைமகள் வழிபாட்டுத்தினத்தில் வாழ்த்துகிறேன்!

    – எழுத்தாளர் நாஞ்சில்நாடன்

    RM14.00
  • துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை

    இறுதியாக ஒரு துப்பாக்கிச்சூடு நிகழும் வரை நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். குறையாத இடைவெளியில் புல்லட்டுகள் ஒவ்வொன்றும் மற்றொன்றை முடிவில்லாமல் துரத்துகின்றன. நான்காவது புல்லட் என் நெற்றியின் வலது ஓரத்திலிருந்து கிளம்பி, வெற்று வெளியில் மற்ற புல்லட்டுகளைத் துரத்துகிறது. அது நெற்றியின் இடது வெளிப்புறத்திலி ஓட்டைப்ரு பிளக்கும்ந்து கோழிக்குஞ்சாய் தலை நீட்டியது வரை ஒரு நெடுங்காலப் பயணத்தை மின்னல் வேகத்தில் முடித்ததை மட்டுமே என்னால் நினைவு கூர முடிகிறது. (less)

    RM20.00
  • ஒளி

    சுவிட்ஸர்லாந்தில் ஆய்வுப் பணி நிமித்தமாக வசிக்கும், மதுரையைச் சேர்ந்த சுசித்ராவின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘ஒளி’. தமிழிலும் ஆங்கிலத்திலுமாக எழுதிவரும் இவர், சங்கக் கவிதைகள் உட்பட சில மொழிபெயர்ப்புகளையும் செய்திருக்கிறார். இவையெல்லாம் இவருடைய கதைகளுக்குப் பலம் சேர்க்கின்றன. யதார்த்தம், மிகை யதார்த்தம், அறிவியல், தத்துவம் எனப் பல பொருண்மையிலான கதைகள் தொகுப்பில் உள்ளன. தொகுப்புக்கு ஒரு முகம் இல்லை. இது சுசித்ராவின் பலம். தலைப்புக் கதையான ‘ஒளி’, இணைய இதழில் வெளியானபோதே பரவலாகக் கவனம் பெற்றது; பலரையும் இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும், குழந்தைகளின் உலகமும், பெண்களின் உலகமும் பல கதைகளில் நுட்பமாகப் படிந்திருக்கின்றன. மொத்தத்தில், சுசித்ராவுக்கு இது நல்ல ஆரம்பம்.

    RM18.00
  • டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல்

    எனது மகள் மஞ்சு செவன்த் stdஇல் இருந்து டபுள் பிரமோஷன் ஆகி நயன்த் stdக்கு போகிற வழியில் எனக்கு வாய்க்கரிசி போட்டு ஒரு சொம்பில் பாலும் ஊட்டிச் சென்ற சந்தோஷத்தில் திடுக்கிட்டு எழுந்த போது அவர்களைப் பார்த்தேன்.

    சிறுகதை

    RM22.00
  • CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை

    எங்களூரின் மொழியும், இந்தத் தமிழை நாங்கள் உச்சரிக்கும் முறையும் எனக்கு எப்போதும் உவப்பானது. அவற்றை எழுதிக்கடக்கிற போது நான் அடைகிற ஆனந்தம் அளவிட முடியாதது, அவற்றின் எச்சங்களை நான் பதிவுசெய்ய வேண்டாமா? போலவே அரேபிய பாலைவளங்களில் அலைந்த திரிந்த ஆறாண்டுகள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகளும் ஆச்சரியங்களையும் நான் எங்கே போய் வெளிப்படுத்துவேன்!? இப்போது. நீலக்குளிர் பிரதேசம் எனக்குள் பொழிகிற, உறைய வைக்கும் இந்தக் குளுமை எனக்கானதுதானா அல்லது நான் “வேரோடி’ எனது கரையை போய்ச்சேர்ந்து விட வேண்டுமா? கடந்து வந்த நிலமெல்லாம் பெரும் ஆச்சரியங்கள்தான். ஆகயே நியங்களான எழுதுவதுதான் எனது பணியாக இருக்கிறது. அதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இந்தக் கதைகளுக்குள் உலவுகின்ற மனிதர்கள் எங்கிருந்து வந்து சேர்ந்தவர்கள்! அவர்களுக்கும் எனக்குமான பந்தம் என்ன என்கிற கேள்விகள்தான் என்னை அலைக்கழிக்கின்றன.

    RM17.50
  • எரி

    நாகபிரகாஷின் இத்தொகுப்பிலுள்ள கதைகளின் சரடாக அமைந்திப்பது சிறுவர்களின் உலகம். இளமையில் உழைக்க நேர்ந்தவர்களின் மனக்கோலங்களும் அவற்றின் வெவ்வேறு திரிபுகளுமே கதைகளாக அனுபவமாகியுள்ளன. பதின்பருவத்தின் துயர்பாடுகளைச் சொல்லும் நாகபிரகாஷின் கதைகள் எளிமையான மொழியில் அடர்த்தியாகவும் சொல்நேர்த்தியுடனும் அமைந்திருப்பவை. அனுபவங்களின் உண்மைத்தன்மை கதைகளுக்கு பலம் சேர்த்துள்ளன. சித்தரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் பலவும் தமிழ் சிறுகதையில் சொல்லப்படாதவை என்பதும் கவனிக்கத்தக்கது. ஒன்பது கதைகளுமே வாழ்வின் பல்வேறு தருணங்களை முன்னிறுத்துபவை. ஒருவகையில் ஒரே வாழ்வின் வெவ்வேறு காட்சிகளை சித்தரிப்பவை. பாசாங்குகள் எதுவுமில்லாமல் மிகையான விவரிப்புகளோ உரையாடல்களோ இல்லாமல் நேரடியாக சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் அவை வாசகனுக்கு நெருக்கமானவையாய், தான் கண்ட வாழ்வின் சில கணங்களை நினைவுறுத்துவதாய், தன் அனுபவத்தின் சில துளிகளை மீட்டுத் தருவதாய் அமையக்கூடும். அதுவே இக்கதைகளின் வரவுக்கு நியாயம் செய்வதாக இருக்கும். – எம்.கோபாலகிருஷ்ணன்

    RM12.00
  • கூடு & பிற கதைகள்

    இத்தொகுப்பிலுள்ள கதைகள் பலவும் சிறுகதைக்கான இலக்கணத்துக்குள் பொருந்திவரக்கூடியவை. சொல்லாது மறைத்த பகுதிகளால் மேலும் கனம் கூடியவை. வெவ்வேறு புதிய நிலக்காட்சிகளையும் காடுகளின் வசீகரமான சித்திரங்களையும் கொண்டிருப்பவை. மனித வாழ்வின், உறவுகளின் தீராத புதிர்களும் அவற்றில் எஞ்சி நிற்கும் நம்பிக்கையுமே இந்தக் கதைகளுக்கு ஆதாரமாய் அமைந்திருக்கின்றன. எண்ணிக்கையிலும் எடுத்துக்கொள்ளும் களங்களிலும் சொல்கிற உத்திகளிலும் கலைச்செல்வி காட்டும் முனைப்பும் தீவிரமும் வியப்பைத் தருகின்றன. இந்த முனைப்பும் தீவிரமும் தொடரும்போது அவரது படைப்புகளின் எண்ணிக்கையும் கனமும் கூடும். வாசகர்களிடத்தில் அதிக கவனம் பெறும். தன்னை கண்டடைய எழுதிய கதைகள் பிறருக்கும் அவ்வாறே உதவிடக்கூடும். அதுவே அவரது எழுத்துக்கு அர்த்தம் சேர்க்கும்.

    – எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன்

    RM19.00
  • மூங்கில்

    “மண்ணாக நிக்கீறோ மரமாக நிக்கீறோ

    எண்ணாம்ம செஞ்சோமோ ஏலாம செஞ்சோமோ

    பச்சச் சீலக்காரி பாலரிசிப் பல்லுக்காரி

    சுட்ட சொல்லு சொல்லு வெலக்கு தாயி

    சுட்ட சொல்லு வெலக்கு தாயி

    புத்தி கெட்டுப் போனோமோ தடம் மாறிப் போனோமோ

    நல்ல கோழி நாலு தாறேன், உச்சிக்கு செங்கிடா தாறேன்

    பச்சமுட்ட வெட்டித் தாறேன், தடியங்கா கீறித் தாறேன்

    கல்லாக நிக்கீறோ காத்தாக நிக்கீறோ

    குழி நெறைய வள தாறேன், பிச்சமால கெட்டித் தாறேன்

    கருமாரி முத்தாரம்மா பற்றகாளி காட்டாளம்மா

    கொலசாமி வந்து நில்லு கொலத்தக் காத்து நில்லு”

    சிறுகதையிலிருந்து

    RM20.00
  • இந்தக் கதையை சரியாக சொல்வோம்

    இவர்கள் அகதிகளாகவோ அல்ல தொழில் நிமித்தமாகவோ 80 களின் தொடக்கத்தில் பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் குடிபெயர்ந்தவர்களின் முதல் தலைமுறை மக்கள். மேற்கத்திய குடிமன்களாகவே வளர்ந்தாலும் தன் வேரைக் கண்டடையும் தேடல் இவர்களுக்குள் இருக்கிறது.

    இரண்டு கலாசாராங்களுக்கு இடையிலான மோதல் இவர்களுக்குள் கேள்விகள் எழுப்புகிறது. குடிபெயர்ந்தவர்கள் தன் இருப்பை நிலைநாட்டும் போராட்டத்தில் தன் பூர்வீகத்தை மொத்தமாக மறந்து மேற்கத்திய வாழ்வில் ஒன்றிணையும் முனைப்பில் இருக்க அடுத்த தலைமுறையோ தராசுத் தட்டின் நடுமுள் போல இரு கலாசாராங்களையும் அளந்து பார்க்க முற்படுகிறார்கள். வெற்றி பெற்றவர்களின் வெற்றிகளை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.

    ஏற்கனவே, விவாதிக்கப்படும் உறவுச் சிக்கல்கள் இவர்கள் பார்வையில் வேறொரு பரிணாமம் பெறுகிறது.அப்படியான சில புலம்பெயரிகளையும் அவர்களின் சிறுகதைகளையும் தமிழ் வாசகப் பரப்பிற்கு அறிமுகப்படுத்துவதே இத்தொகுப்பின் நோக்கம்

    RM35.00
  • போர்ஹெஸ்(கதைகள், கவிதைகள், கட்டுரைகள்)

    போர்ஹெஸ் கதைகள், கவிதைகள், கட்டுரைகள்: (தமிழில் – பிரம்மராஜன்)

    மறைபொருள் துறை சார்ந்த போர்ஹெஸ் என்கிற படிப்பாளி லேடீஸ் ஹோம் ஜர்னல் என்ற இதழுக்கு இணையான அர்ஜென்டீனிய பத்திரிக்கை ஒன்றுக்கு வாடிக்கையான பங்களிப்பாளராக இருந்தார்.ஹோப்பன்ஹவர்,எல்லரி குவீன்,கிங்காங்,கப்பாலிஸ்டுகள்,லேடி முராசாகி அல்லது எரிக் த ரெட்,ஜாக் லண்டன்,புலோட்டினஸ்,ஆர்சன் வெல்ஸ்,ஃபிளாபர்,புத்தர் அல்லது டியோன் குவின்ஸ்ட்ன் இவர்கள் அனைவருடனும் சரிசமமான இயல்புடன் இருந்தார்.மிகக் கச்சிதமாகச் சொல்வதாக இருந்தால் அவர்கள் இவருடன் இயல்பாக இருந்தனர்.தனக்கென எந்தவித முக்கியத்துவமும் அளிக்காத போர்ஹெஸ்,இந்த பிரபஞ்சத்தின் வழிகாட்டியாகவும் மேலும் போர்ஹெஸ்ஸின் வழிகாட்டியாக இருக்கக் கூடிய ஒரு பிரபஞ்சத்தின் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தார்.
    – -எலியட் வெய்ன்பர்கர்.

    RM55.00
  • கையறு

    நான் இந்த நாவலை முதலில் வாசித்தபோது என்னைக் கவர்ந்த அம்சமே நினைவுச்சின்னம், இமயத்தியாகம், மரவள்ளிக்கிழங்கு என இதற்கு முன் இக்களத்தை ஒட்டி புனையப்பட்ட நாவல்களில் இல்லாத தனித்த வழித்தடத்தை இப்புனைவின் வழி கோ.புண்ணியவான் அமைத்துள்ளார் என்பதுதான். எழுத்தாளனின் கைரேகை என்பது அதுதான். அதுவே ஒரு புனைவை மறுவாசிப்புக்குத் தூண்டுகிறது. ஓர் அசாதாரண சூழலில், தானறியா நிலத்தில், கதாசிரியன் உருட்டிவிடும் கதாபாத்திரங்கள் மூலம் அவனே கண்டடையும் வாழ்க்கையில் திடுக்கிடும் உண்மைகளை கோ.புண்ணியவான் இந்த நாவலின் வழி அடைந்துள்ளார்.‘கையறு’ எனும் பதம் இந்த நாவலின் தலைப்பு மட்டுமல்ல; நாவலின் ஆன்மாவும் அதுதான். அதை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாயிலாகவும் கோ.புண்ணியவான் நிறைத்துச்சென்றுள்ளார். – ம.நவீன்

    RM40.00
  • விஷக் கிணறு

    அரிதினும் அரிதாக நிஜம் கற்பனையை எட்டிப் பிடித்து  கடந்து முன் செல்லும். ‘வைரஸ்’ கதைகள் எழுதப்பட்டபோது அவை முற்றிலும் கற்பனையில் உதித்தவை. ஆனால் எழுதி முடித்து பதிவேற்றம் செய்யப்படும் குறுகிய காலக்கட்டத்திற்குள் அவை அன்றாடமாகிவிட்டன. கண் முன் ஒரு ஸ்டூடியோ உலகம் சுருள் அவிழ்ந்த காலகட்டம். உங்களிடம் ஒரே ஒரு உயிர்க்காக்கும் கருவி உள்ளது மூவரில் ஒருவருக்கு மட்டுமே அதைப் பொருத்த முடியும் எப்பேர்ப்பட்ட அறநெருக்கடிக்கு நாம் தள்ளப்பட்டோம். தியாகங்களுக்கும் தேர்வுகளுக்கும் என்ன பொருள்? யார் உயிர் வாழ்வது என்பதை எவர் தேர்வு செய்வது? நாம் உருவாக்கும் தீர்வுகள் அதற்குக் காரணமான சிக்கலைக் காட்டிலும் பூதாகரமாக இருந்தால் என்ன செய்வது? உயிர் பிழைத்திருப்பதே இத்தனைக் கொண்டாட்டமாக இருக்கக்கூடுமா? எத்தனைக் கேள்விகள்?

     

     

    விஷக்கிணறு அவற்றுள் சில கேள்விகளை எதிர்கொள்கிறது.

    RM20.00
  • இசூமியின் நறுமணம்

    இசூமியின் நறுமணம்’ என்ற தலைப்பிலான ரா.செந்தில்குமாரின் சிறுகதைத் தொகுப்பு பன்னிரு சிறுகதைகள் கொண்டது. இவற்றுள் பல கதைகள் இணையத்தின் மூலம் வாசிக்க வாய்த்தவை. முன்னுரை எழுதும் பணிக்காக ஒருசேர வாசித்தேன். நான் முன்னுரை எழுதும் எந்த நூலையும் இரண்டு முறை வாசிப்பேன். எனவே இரண்டாம் முறையும் வாசித்தேன். புத்தக வடிவில் என் கையில் கிடைத்ததும் இன்னொரு முறையும் வாசிப்பதற்கான தூண்டுதல் இக்கதைகளில் உண்டு.

    RM17.00
  • கதை சொல்லியின் 1001 இரவுகள்

    ஆயிரத்தோரு இரவுகளைக் கதைக்கடல் என்று அழைக்கிறார்கள் கடலில் அலைகள் தோன்றி ஒன்றோடு ஒன்று கலந்து புதிய அலைகளை முடிவில்லாமல் உருவாக்கிக் கொண்டே இருப்பதுபோல் ஆயிரத்தோரு இரவுகளின் கதைகளும் ஒன்றில் ஒன்று கலந்து ஒன்றின் விளைவாய் ஒன்று பிறந்த காலம் தாண்டியும் முடிவில்லாமல் புதிய கதைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.

    RM10.00
  • அம்புப் படுக்கை

    பீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமென கதறவில்லை துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராக பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை வாழ்வின் மீது பெரும் விழைவும் வாஞ்சையும் ஒருபக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச்செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறு எல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யத் தயங்கி இயன்றவரை ஒத்திப் போடுவதாக வலியில் வதங்கி வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி தனது கேள்விகளுக்கு விடை தேட முனைபவராகப் பீஷ்மர் இருக்கிறார் எனத் தோன்றுகிறது இக்கதை மாந்தர்களைப் போல.

    RM15.00
  • ட்ரங்கு பெட்டிக் கதைகள்

     

    பெரியதொரு வாசிப்பு பின்புலமோ, அனுபவ, அரசியல், சிந்தாந்தக் கற்பிதங்களோ இல்லாத ஒருவன், ஓவியங்களோடும் அதன் பண்புகளை ஒத்த படிமங்களோடும் உலவியதே என் கதைகளாக இப்போது உருப்பெற்று, சிலது மறுவுருப்பெற்று இருக்கின்றன.

    RM15.00