Showing 1–20 of 133 results

  • ஆயிரங்கால் மண்டபம்

    ஜெயமோகன் எழுதிய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு இது. அழகிய கற்பனைகள் கொண்ட புதியவகைக் கதைகளின் தொகுதியாக அப்போது மதிப்பிடப்பட்டது. ஜெயமோகன் யதார்த்தவாதக் கதைகளில் இருந்து முன்னகர்ந்து பலவகையான கதைவடிவங்களை பயன்படுத்தி தன் தத்துவத்தேடலையும் மெய்யியல் அறிதல்களையும் முன்வைத்த படைப்புகள் இவை. இவற்றிலுள்ள பல கதைகள் பல்வேறு மொழியாக்கங்கள் வழியாக இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் புகழ்பெற்றவை. இதே வடிவில் இத்தொகுதியை விரும்பிக்கேட்ட வாசகர்களுக்காக இப்போது மீண்டும் வெளிவருகிறது.

    RM20.70RM23.00

    In stock

  • ஈராறுகால்கொண்டெழும் புரவி

    குறியீட்டு ஆழமும் மொழியும் அழுத்தமும் உடைய ஜெயமோகனின் சிறுகதைகள் உத்வேகம் ஊட்டும் வாசிப்பனுபவங்களும்கூட. எளிமையான ஒரு மேற்பரப்பு எல்லா கதைகளுக்கும் உள்ளது. பேய்க்கதைகளின் பாணியில் எழுதப்பட்ட கதைகள் சுயசரிதைக் குறிப்புகள் போன்ற கதைகள், கட்டுரைக்கும் கதைக்கும் நடுவில் இயங்கும் கதைகள் என பலவகைப்பட்ட வகைமாதிரிகள் இவற்றில் உள்ளன. சாதாரணமான புனைவின் வழியாக கவித்துவத்தை மௌனமாகத் தொட்டுவிட முயல்பவை இவை.

    RM16.20RM18.00

    In stock

  • கூந்தல்

    குறியீட்டு ஆழமும் மொழியும் அழுத்தமும் உடைய ஜெயமோகனின் சிறுகதைகள் உத்வேகம் ஊட்டும் வாசிப்பனுபவங்களும்கூட. எளிமையான ஒரு மேற்பரப்பு எல்லா கதைகளுக்கும் உள்ளது. பேய்க்கதைகளின் பாணியில் எழுதப்பட்ட கதைகள் சுயசரிதைக் குறிப்புகள் போன்ற கதைகள், கட்டுரைக்கும் கதைக்கும் நடுவில் இயங்கும் கதைகள் என பலவகைப்பட்ட வகைமாதிரிகள் இவற்றில் உள்ளன. சாதாரணமான புனைவின் வழியாக கவித்துவத்தை மௌனமாகத் தொட்டுவிட முயல்பவை இவை.

    RM17.10RM19.00

    Only 2 left in stock

  • திசைகளின் நடுவே

    Short Stories | சிறுகதைகள், Literature | இலக்கியம், 2022 Release, 2023 New Arrivalsவ்

    இக்கதைகளை இன்று பார்க்கையில் இவற்ரின் சிரப்பம்சம் இவர்ரீன் அகலமே என்று படுகிறது. பல கதைகளில் விரிவான சூழலும், அதிகமான கால அளவும் காணப்படுகிறது. இப்போது என் வாசிப்பு விரிவடைகையில் அமெரிக்க சிறுகதைகளில் இவ்வியல்பு அதிகமிருப்பதைக் காண்கிறேன். சிறுகதையின் முக்கியமான வகை மாதிரி இது என்று இதைக் கூறத் துனிவேன்.

    RM27.00RM30.00

    Only 2 left in stock

  • சிண்டாய்

    அரவின் குமார் மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் புதிய தலைமுறை எழுத்தாளர். சிறுகதைகள், கட்டுரை, விமர்சனக் கட்டுரை, இலக்கியச் செயல்பாடுகள் என இடையறாது இயங்கி வருகிறார். அவரது முதல் சிறுகதை தொகுப்பு ‘சிண்டாய்’ வல்லினம் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது. இந்நூல் குறித்து பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு.எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ‘வல்லினம்’ இணைய இதழில் ’நிலமும் துயரமும் மனிதர்களும்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கும் விரிவான கட்டுரையிலிருந்து சில பத்திகள்…. /இந்தக் கதைகள் வெளிச்சக் கீற்றுகளே எட்டிப் பார்க்காத இருண்ட உலகத்தில் நிகழ்பவை. அந்த இருட்டு தரும் பயத்தையும் தடுமாற்றத்தையும் போக்கவென நிவாரணிகளாக அமைகின்றன சில நம்பிக்கைகள், ரோக்கியா தடவிக் கொள்ளும் தைலத்தைப்போல. கைவிடப்பட்டவர்களுக்கான ஆறுதலை அளிக்கின்றன அத்தகைய நம்பிக்கைகள். மாந்திரீக நடவடிக்கைகள், அமானுஷ்யமான நிகழ்வுகள் போன்றவை தற்காலிகமான தப்பித்தல்களை சாத்தியப்படுத்துகின்றன. அன்றாடத்தின் புற அழுத்தங்களால் நொந்து நொடிந்துபோன மனம் திசைதெரியாமல் தடுமாறி, சிதைவுற்று அலையும்போது தர்க்கங்களையும் பகுத்தறிவையும்கொண்டு அதனை சீர்படுத்த முடியாது. மனம் எதிர்பார்ப்பது விளக்கங்களை அல்ல, ஆறுதலை அல்லது திசைதிருப்பலை அல்லது போதமற்ற தூக்கத்தை. கடும் உழைப்பாளியான தாத்தாவுக்கு நிலத்தின் மீதிருந்த பற்று தன் மீது இல்லை என்கிறபோது பாட்டிக்கு வடிகாலாக அமைவது அடர்த்தியாக மஞ்சளைப் பூசிக்கொண்டு சாமியாடுவது. விலகலும் வெறுப்பும் கூடுந்தோறும் குளியலறைக் கல்லில் தேய்க்கும் மஞ்சளும் அடர்த்திகொள்கிறது./

    RM18.00

    In stock

  • மாயம்

    பெருமாள்முருகன் 2020இல் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் உள்ள கதைகள் முழுக்கவும் பதின்பருவத்தினர் பற்றியவை. வெவ்வேறு களங்கள்; தொழிற் சூழல்கள். எனினும் அவர்கள் கொள்ளும் மன உணர்வுகள் ஒருமை கொண்டுள்ளன. சமகால விளிம்பு நிலை வாழ்வை வெகுஇயல்போடு காட்சிப்படுத்தியிருக்கும் இவை நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்குபவை. இத்தொகுப்பில் மூன்று கதைகள் தவிர்த்துப் பிற கதைகள் அனைத்தும் இதுவரை பிரசுரம் பெறாதவை. ஆவேசத்தைக் காப்பாற்றிக் கொண்டு எறும்பு வரிசை போல இருபது கதைகள் எழுதிவிட்டேன். ஒன்றின் காலை ஒன்று பற்றிக்கொண்டும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து கொண்டும் இவை செல்கின்றன. இரண்டு மூன்று சேர்ந்து பெருமூட்டை சுமக்கின்றன. வளைந்தும் நெளிந்தும் கலைந்தும் கூடியும் எதையோ தேடி வரிசை போய்க் கொண்டேயிருக்கிறது. ஆம். இவற்றை எறும்பு வரிசைக் கதைகள் என அடையாளப்படுத்தலாம்.

    RM22.00

    Only 2 left in stock

  • போண்டு

    மனித வாழ்வில் வளர்ப்பு விலங்குகள் பெறும் இடத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இவ்வகையில் தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார் பெருமாள்முருகன். கடந்த ஆண்டு வந்த ‘வேல்!’ தொகுப்பைத் தொடர்ந்து இது வெளியாகிறது. நாய், பூனை ஆகியவற்றை வீட்டில் வைத்து வளர்க்கும் சூழலில் அவற்றின் மூலமாக வெளிப்படும் சாதி, பாலின வேறுபாடுகளையும் உடைமை உணர்வையும் இக்கதைகள் நுட்பமாகக் காட்டுகின்றன. பல கதைகள் சம்பவ வலுப் பெற்றவை. மனிதருக்கு விலங்குக் குணம் ஏறுகிறது; விலங்குகளுக்கு மனிதக் குணம் ஏறுகிறது. இந்தப் பரிமாற்றக் களங்களை இக்கதைகள் நம்பகத்தன்மையுடன் சித்திரித்துள்ளன. சுதந்திரமான சொல்முறையும் நிதானமான விவரணையும் கொண்டு நெஞ்சை நெகிழ்த்தும் மொழியில் எழுதப்பட்டுள்ள கதைகள் இவை

    RM22.00

    Only 1 left in stock

  • துங்கபத்திரை(சிறுகதை)

    துங்கபத்திரை(சிறுகதை) – பாவண்ணன்:

    RM170.00

    Only 2 left in stock

  • மிகையின் தூரிகை

    பாவண்ணன் சிறுகதைகளில் புராணம், இதிகாசம் அல்லது வரலாறு தொடர்பான புனைவுகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆண்டாள் பற்றிய புனைவான ‘புதிர்’ ஒரு தந்தையின் மனநிலையையும், ஒரு பருவப் பெண்ணின் மனநிலையையும் எழுப்பி நம்மைப் பரவசப்படுத்துகிறது. ‘இன்னும் ஒரு கணம்’ வாசித்தபோது விரிந்த விழிகள் மூடவே இல்லை. ஒரு பெண் தன்னை ஏற்க வேண்டும் என ஓர் ஆணின் மனம் தவிப்பதை மிக அழகாகக்ச் சித்தரித்திருந்த விதம் கண்டு ஆச்சரியப்பட்டேன்; வாசித்தலின் ஆவல் எனக்குள் பெருகுவதை உணர்ந்தேன். இப்படி இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையின் காட்சிச் சித்தரிப்புகள் கண்டு பரவசம் கொண்டிருக்கிறேன்.

    RM19.00

    In stock

  • ஒற்றறிதல்

    கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது.

    RM29.00

    Out of stock

  • புதுமைதாசன் கதைகள் (தொகுப்பு)

    மாந்தர்தம் பல்வேறு குணவியல்புகளை அகழ்ந்து சித்தரிக்கும் அருந்தொகுப்பு

    RM20.00

    Only 2 left in stock

  • அ. முத்துலிங்கம்-சிறுகதைகள்(2-பாகங்கள்)

    ஆ.முத்துலிங்கம்-சிறுகதை தொகுப்பு :

    1985 முதல்2016 வரையிலான சிறுகதைகள்

    நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளுமையான அ. முத்துலிங்கத்தின் 58 ஆண்டுகாலச் சிறுகதைகளை உள்ளடக்கிய செம்பதிப்புப் பெருந்தொகை நூல் இது. இத்தொகுப்பு முத்துலிங்கத்தினுடைய முக்கால் நூற்றாண்டுப் பயணத்தைத் தன்னுள் பொதிந்து வைத்துள்ளது. இலங்கை, கனடா, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளைத் தன்னுடைய களமாகக்கொண்டு அவர் படைத்துள்ள கதைகள் அவர் வாழ்க்கையை எவ்வளவு விரிவாக வாழ்ந்து வருகிறார் என்பதைக் காட்டும். அவரின் படைப்புலகம் மொழி, மதம், நிறம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து மனிதத்தில் மட்டும் குவிமையம் கொள்கிறது. நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை அ. முத்துலிங்கம் சிறுகதைகள் என்றால் மிகையில்லை. இத்தொகுப்பு இலக்கிய வாசகர்களுக்கான பொக்கிஷம்.

    RM180.00

    Out of stock

  • பாவண்ணன் சிறுகதைகள் (முதல் தொகுதி)

    பாவண்ணனின் சிறுகதைகள் கருணையின் இழைகளாலும் அன்பின் இழைகளாலும் நெய்யப்பட்டவை. கரிய இருள் சூழ்ந்த பாதையின் ஓரமாக காற்றில் நடுங்கியபடி ஒளியுமிழும் சுடரென அக்கதைகள் அமைந்திருக்கின்றன. எளிய மனிதர்களின் அவலம், இயலாமை, ஏமாற்றம், சமரசங்கள், பரவசங்கள், குமுறல்கள் ஆகியவற்றின் சித்திரங்களால் பாவண்ணன் கதையுலகம் நிறைந்திருக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே உரியதாக உள்ள உலகத்தின் முன் எப்படியாவது உயிர்த்திருந்தால் போதும் என்ற எண்ணத்துடன் வாழும் கோடிக்கணக்கானவரின் கண்ணீர்த்துளிகளை பாவண்ணனின் சிறுகதைகள் காட்சிப்படுத்துகின்றன. துயரத்தின் சுமைகள் தாளாது சரிந்து விழுவதையும் ஒரு நீண்ட பெருமூச்சின் வழியாக வலிமையைத் திரட்டிக்கொண்டு மீண்டு வருவதுமான வாழ்வின் ஆடலையும் விசித்திரத்தையும் பாவண்ணன் முன்வைத்திருக்கும் வாழ்க்கைத் தருணங்களில் காணமுடிகிறது. சின்னஞ்சிறிய சிமிழொன்றில் அடைத்து எடுத்துவரும் நீரின் வழியாக ஓர் ஆற்றையே காணமுடிந்த கண்கள், பாவண்ணனின் வாழ்க்கைத் தருணங்கள் வழியாக விரிந்துசெல்லும் எளியோரின் துயரத்தையும் வேதனை நிறைந்த உலகத்தையும் எளிதாகக் கண்டுவிடும்.

    RM75.00

    Only 1 left in stock

  • அவளும் நானும் அலையும் கடலும்

    அவளும் நானும் அலையும் கடலும்

    கடலுக்குள் தூக்கி எறிந்த கல்போல இந்த மனத்தின் ஆழத்துக்குள் வந்து விழுந்த சொற்கள் கதைகளாக வடிவெடுக்கின்றன. யார் யார் வந்து கல் எறிந்துவிட்டுப் போனார்கள் என்று எந்தச் சுவடும் இல்லை.

    RM13.00

    Out of stock