Showing 1–20 of 31 results

  • நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி | The Power of Positive Thinking

    பூரண திருப்தியுடன் கூடிய ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ இலட்சக்கணக்கான மக்களுக்கு இப்புத்தகம் வழிகாட்டியுள்ளது. தோல்வி மனப்பான்மையை முற்றிலுமாகத் துடைத்தெறிந்து, ஒருவருக்குள் உறங்கிக் கிடக்கும் சக்தியை விழித்தெழச் செய்து அற்புதமான வாழ்க்கையை வாழ இந்த புத்தகம் அறிவுரைகளை கூறுகிறது.

    RM40.00

    Only 1 left in stock

  • விண்ணிலிருந்து வீழ்ந்த பெண்

    மலேசிய தமிழ் எழுத்தாளர்களிடையே உள்ள எதிர்பார்ப்பு தங்கள் படைப்புகள் பிற மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும் என்பது. அந்த எதிர்பார்ப்பில் தவறு இல்லை. ஆனால் மொழிபெயர்ப்பு என்பது ஒருவகை அறிவுப் பரிமாற்றம். ஆகவே அது இருவழிகளிலும் நிகழ வேண்டும். நம் படைப்புகள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்படுவதுபோலவே பிற மொழியின் சிறந்த இலக்கியங்கள் தமிழில் மொழியாக்கம் காணவேண்டும். பிற நாட்டு இலக்கியங்களுடன் தமிழுக்கு இருக்கும் அறிமுகம் மலேசியாவில் எழுதப்படும் மலாய், சீன இலக்கியங்களுடன் நிகழவில்லை. காரணம் அவை தமிழில் மொழியாக்கம் கண்டதில்லை. அந்த இடைவெளியின் தூரத்தைக் குறைக்கவே இந்த முயற்சி ஒரு மலாய் எழுத்தாளரின் பத்துக் கதைகளைக்கொண்ட ஒரு தொகுப்பு நூல் தமிழில் வெளிவருவது இதுவே முதல் முறை, உலக தமிழ் வாசகர்களுக்கு இந்நூல் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரும்.

    RM25.00

    In stock

  • Pita Suara Mona Fandey

    Himpunan 13 buah cerpen melangkaui pelbagai ruang etnik, melanggar tabu, menyelit sindiran kritikan sosial, menyelusuri keindahan dunia real magis dan membuka sisi-sisi gelap manusia

    RM35.00

    In stock

  • சின்னஞ்சிறு பழக்கங்கள்

    நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்பினால் நீங்கள் பிரமாண்டமாக சிந்திக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பழக்கங்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து அதில் உலகப் புகழ்பெற்ற நிபுணர்களில் ஒருவராகத் திகழ்கின்ற ஜேம்ஸ் கிளியர் அதற்கு வேறொரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். தினமும் காலையில் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்திருத்தல், ஒரு பதினைந்து நிமிடங்கள் மெதுவோட்டத்தில் ஈடுபடுதல், கூடுதலாக ஒரு பக்கம் படித்தல் போன்ற நூற்றுக்கணக்கான சிறிய தீர்மானங்களின் கூட்டு விளைவிலிருந்துதான் உண்மையான மாற்றம் வருகிறது என்று அவர் கூறுகிறார். இந்தக் கடுகளவு மாற்றங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றக்கூடிய விளைவுகளாக உருவெடுக்கின்றன என்பதை ஜேம்ஸ் இப்புத்தகத்தில் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.

    RM50.00

    Only 1 left in stock

  • இரகசியம் எப்படி என் வாழ்க்கையை மாற்றியது

    கடந்த பத்து ஆண்டுகளாக சர்வதேச அளவில் விற்பனையில் மகத்தான சாதனைகளைப் படைத்து வருகின்ற, ரோன்டா பைர்னின் ‘இரகசியம்’ புத்தகம், உலகெங்கிலும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை நம்புதற்கரிய விதத்தில் மாற்றியுள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அத்தகையோரின் உண்மைக் கதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் தொகுத்து, ரோன்டா பைர்ன் இந்நூலை உருவாக்கியுள்ளார். ‘இரகசியம்’ புத்தகத்திலிருந்து தாங்கள் கற்றுக் கொண்டவற்றைப் பயன்படுத்தித் தங்களுடைய பொருளாதாரம், உறவுகள், தொழில்வாழ்க்கை, ஆரோக்கியம் ஆகியவற்றைக் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மேம்படுத்தியுள்ள சாதாரணமான மக்களுடைய அசாதாரணமான அனுபவங்களின் தொகுப்புதான் ‘இரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது’ என்ற இந்நூல். ‘இரகசியம்’ புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த பிரபஞ்ச விதியான ஈர்ப்பு விதியைப் பயன்படுத்தி உங்கள் விருப்பப்படி உங்கள் வாழ்க்கையை உங்களாலும் மாற்றிக் கொள்ள முடியும்.

    RM60.00

    Only 2 left in stock

  • சக்தி

    ஓர் அற்புதமான வாழ்க்கைக்கான வழியை நான் இப்புத்தகத்தில் உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். வாழ்க்கையைப் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவை எல்லாமே சிறப்பானவைதான். உண்மையில் அவை சிறப்பாவற்றிற்கும் மேலானவை, அற்புதமானவை!
    நீங்கள் நினைப்பதைவிட வாழ்க்கை வாழ்வதற்கு எளிதானதுதான். உங்களுக்குள் இருக்கும் அந்த மாபும் சக்தியையும், வாழ்க்க செயல்படும் விதத்தையும் நீங்கள் புரிந்துகொள்ளும்போது, வாழ்வின் மாயாஜாலத்த்தை நீங்கள் முழுமையாக அனுபவிப்பீர்கள், அப்போது நீங்கள் ஓர் ஆற்புதமான வாழ்க்கையை வாழ்வீர்கள்!

    இக்கணத்தில் இருந்து உங்கள் வாழ்வில் அற்புதங்கள் அரங்கேறட்டும்.

    RM70.00

    Only 2 left in stock

  • நேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்

    நேர்மறைச் சிந்தனையை தங்கள் வாழ்வில் பயன்படுத்தி, தைகள் விரும்பிய அற்புத விளைவுகளைப் பெற்றுள்ள ஆயிரகணக்கான மக்கள் எனக்கு எழுதிய கடிதங்களில் இடம்பெற்றிருந்த உண்மை சம்பவங்களின் தொகுப்புத்தான் இப்புத்தகம். நீங்கள் கனவில்கூட நினைத்து பாத்திராத மாபெரும் வெற்றி, ஆரோக்கியம், செம்மையான உறவுகள், மனஅமைதி ஆகியவற்றை நீகள் கைவசப்படுத்த உங்களுக்கு உதவக்கூடிய, நடைமுறைக்கு உகந்த அற்புதமான கையேடு இந்நூல். சூழ்நிலைகள் எவ்வாறாக இருந்தாலும் சரி, அவற்றில் இருந்து மிக சிறப்பான விளைவுகளையே எப்போதும் எதிர்பார்க்கும் சிந்தனைதான் நேர்முகசிந்தனை. நேர்முக சிந்தனையை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வாழ்வில் எப்படி அற்புதமான விளைவுகளைப் பெறலாம் என்பதை சர்வதேச புகழ்பெற்ற எழுத்தாளரும் பேச்சாளருமான நார்மன் வின்சன் பீல், இப்புத்தகத்தில் எளிய படு சுவாரஸ்யமான முறையில் பல உண்மைக் கதைகளின் பின்னணியில் எடுத்துரைக்கிறார். இப்புத்தகத்தின் மூலம் நீங்கள் கீழ்க்கண்டவற்றை கற்றுக்கொள்ளலாம்: அபரிமித விதியை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது எப்படி. மாபெரும் வெற்றிக்கு உங்கள் மனதை தயார்படுத்திக் கொள்வது எப்படி. மணவாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சியில் திளைப்பது எப்படி. எதுவென்றாலும் அசைக்கமுடியாத, பாதுகாப்பை பெறுவது எப்படி. நீங்கள் பயப்படும் விசயங்களை துணிந்து செய்து முடிப்பது எப்படி மன அழுத்தத்திலிருந்து விடுமுறை எடுத்துக்கொள்வது எப்படி

    RM40.00

    Only 2 left in stock

  • குணப்படுத்தும் சக்தியை பயன்படுத்துவது எப்படி

    கிட்டதட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக புதிய ஏற்பாட்டில் பதிவாகியுள்ள அதிசயங்களில் இஏசு பயன்படுத்திய குணமாக்கும் கோட்பாடுகளை, அதே முறையில் இன்றளவும் நம்மால் பின்பற்ற முடியும். உங்களுக்குள் இருக்கும் கடவுளின் குண்மளிக்கும் தன்மையுடன் உங்கள் ஒற்றுமையை உறுதிப்படுத்துவதன் முலம் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் நோயின் அறிகுறிகளை புறக்கணிப்பதன் மூலமும் மூலமும் உங்கள் மனதையும் உடலையும் உங்களால் குணப்படுதிக் கொள்ள முடியும். குணப்படுத்தல் குறித்த டாக்டர் ஜோசஃப் மர்ஃபி அவர்களின் உன்னதமான படைப்புகளை இணைக்கும் ஒரு சக்தி வாய்ந்த பதிப்பு இது. இந்த பதிப்பில் ஆரோக்கியம், செல்வச்செழிப்பு, உறவுகளை பேனுவது மற்று ம் சுய வெளிபாட்டிற்கான தியானங்கள், நேர்மறை உறுதிப்படுத்தல்களின் நுட்பங்களும் அடங்கியுள்ளது.

    RM20.00

    Only 1 left in stock

  • பணம்சார் உளவியல் | The Psychology of Money

    ”பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலின், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது, மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல்.

    RM50.00

    Out of stock

  • வங்காரியின் பசுமைத் தூதுவர்

    சுற்றுச் சூழல், குழந்தைகள், அறிவியல் சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர் ஆதி.வள்ளியப்பன். இந்த நூல் சுற்றிச்சூழல் தொடர்பானது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மூலமாகவும் எளிய மக்களுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவதன் மூலமாகவும் மக்களிடையே அமைதி நிலவச் செய்ய முடியும். இதை நிகழ்த்திக் காட்டியதற்காக நோபல் அமைதிப் பரிசு பெற்ற கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாத்தாயின் கதை இது, குழந்தைகளுக்காக….

    RM9.00

    Out of stock

  • ஸ்கூலுக்குப் போகிறாள் சுஸ்கித்

    சிறுவர்களுக்கான சிறந்த குட்டி கதை. வண்ண படங்களுடன்.

    RM3.50

    Out of stock

  • சூரியனைத் தொடவேண்டி…

    சீறுவர்களுக்கான குட்டி கதைகள் வண்னச் சித்திரங்களுடன்

    RM1.50

    Out of stock

  • ஆகாய யுத்தம்

    சிறுவர்களுக்கான சிறந்த மொழிப்பெயர்புக் கதைகள். குறைந்த விலையில் வண்ண பக்கங்களுடன்.

    RM2.50

    Out of stock

  • எறும்பும் புறாவும்

    தமிழ் இலக்கிய வெளியில் குழந்தை இலக்கியத்தின் முக்கியத்துவம்/தேவை சார்ந்து, தொடர்ந்து சிறந்த புத்தகங்களையும் கதைத் தொகுப்புகளையும் எல்லோர்க்குமான விலையில் வெளியிட்டு வருகிறது பாரதி புத்தகாலயம். அவ்வரிசையில் ஒரு முக்கிய வெளியீடாக அழகாக வந்திருக்கிறது “எறும்பும் புறாவும்” நூல். மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். புத்தகம் முழுதும் ரஷ்ய ஓவியர் ரமாதினின் சித்திரங்கள் வண்ணப்படங்களாக இடம்பெற்றுள்ளன என்பது கூடுதல் சிறப்பு. தவறவிடாதீர்கள்! குழந்தைகளின் கைகளில் தவழ விடுங்கள்!!

    RM25.00

    Out of stock

  • வானவில் பறவையின் கதை

    அதி விநோதமும் கற்பனையும் நிறைந்த நாடோடி இலக்கியம். வாசிப்பின் இனிய பயணத்திற்கான அதிசய உலகம் இந்தப் பல நாட்டுப் பழங்கதைகள்.

    RM8.00

    Out of stock

  • ஆண்டனி கிளியோபாட்ரா

    ஐயன்மீர், அறிவீர், உம் தலைவர்தம் முறைமன்றத்தில் இருப்புச் சங்கிலியால் பிணைக்கப்படுகின்றவரை நான் காத்திரேன்; அல்லது அமைதிமிகு கண்ணுடைய – மந்தத் தன்மை வாய்ந்த ஒக்டேவியா, ஒரு முறை கூட என்னைக் கடிந்துகொள்ள நான் காத்திரேன். குறைகண்டு கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கும் காட்சிபொருளாய்க் காட்டுவீரா? அதனினும் அகிப்தின் இழிவுடைச் சாய்கடையையே நான், என் அமைதிமிகு கல்லறையாய்க் கொள்வே, அதனினும் நீர்ரிக்கள் என்மீது மொய்த்துக் கடித்து என்னைச் சாகுமாறு செய்தற்பொருட்டு, நான் நைல் ஆற்றிந் சேற்றில் கிடப்பேன்!

    – கிளியோபாட்ரா-

    RM25.00

    Only 1 left in stock

  • ஒதெல்லோ

    இயாகோவின் நயவஞ்சகத்தால் துண்டாடப்பட்ட ஒதெல்லோ, ஒரு சின்ன ஆதாரத்தின் அடிப்படையில் அந்தத் தூயவளைச் சந்தேத்து அவளைக் கொல்வதுதான் இந்த நாடகத்தின் துன்பியல் அடிப்படை. அதற்கு முன்னான அவனின் மனப்போரட்டம் அவனது துயர்ர்தைக் காட்டுகிறது. இது சிறந்த ஒதெல்லோ நாடகத்தின் மமிய உணர்வு. ஒலெதெல்லோ புதுமைதாசனால் சிறப்பாகவே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

    RM25.00

    In stock

  • மன்னன் லியர்

    ஏற்கனவே மாக்பெத், ஹெம்லெட் ஒதெல்லோ ஆகிய துன்பியல் நாடகங்களைத் தமிழில் மொழிப்பெயர்த்துள்ள சிங்கப்பூர் படைப்பாளியான புதுமைதாசன் இப்பொழுது கிங் லியர் என்னும் நாடகத்தை மன்னர் லியர் என்று தம்ழில் பெயர்த்துள்ளார். புதுமைதாசன் நாடகத்தை முழுமையாய், மூலத்தின் உணர்வைப் புலப்படுத்தும் வகையில் பெயர்த்துள்ளார். ஷேக்ஸ்பியரின் அற்புத படைப்பை அழகு தமிழில் ஆக்கம் செய்துள்ளதால் அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தல் நம் கடமை.

    RM25.00

    In stock

  • மெக்பெத்

    ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற மெக்பெத் நாடகத்தின் தமிழாக்கம் இது. ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாறு, படைப்புகள் பட்டியல் ஆகியவற்றை முன்னினைப்பாக இணைத்துள்ளது க்றிப்பிடத்தக்கது.

    RM25.00

    In stock